தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ஸ்பைடர் படம் நாளை வெளியாகிறது.
எனவே இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் மகேஷ்பாபு.
அவர் பேசும்போது….
‘தமிழகத்தில் பெரிய பெரிய ஸ்டார்கள் இருக்கிறார்கள். நான் யாருடனும் போட்டி போட இங்கு வரவில்லை.
‘ஸ்பைடர்’ படம் 125 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ள படம். இந்த படத்தை தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் ரிலீஸ் செய்தால்தான் வசூலை ஈட்ட முடியும்.
அதனால் தான் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழியில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
பிரின்ஸ், சூப்பர் ஸ்டார் என்று நான் பட்டங்களை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு பட்டங்கள் மீது எனக்கு விருப்பமில்லை.
தெலுங்கு ரசிகர்களிடம் அப்படி அழைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள் கேட்பதில்லை.
தமிழிலும் அதுபோன்ற பட்டங்களை வேண்டாம். எல்லோரும் என்னை நேசித்தால், ரசித்தால் போதும்.
இரண்டு மொழிக்கும் ஏற்ற கதைகள் இருந்தால் தமிழிலும் என் நடிப்பை தொடர்வேன்.” என்றார்.