தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘சர்காரு வாரி பாட்டா’ படத்தை தொடர்ந்து திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கிறார் மகேஷ் பாபு.
இது தற்காலிகமாக SSMB28 என அழைக்கப்படுகிறது.
இதில் நாயகியாக ‘பீஸ்ட்’ பட நாயகி பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டாலும் கதையில் சில மாற்றங்களை மகேஷ் பாபு சொன்னதால் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் சண்டை பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் உடன் சில பிரச்சினைகள் உருவானதால் தற்போது ராம் லக்ஷ்மன் என்ற இரட்டை சண்டைப் பயிற்சியாளர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அதன்படி இன்று ஜனவரி 18ஆம் தேதி மகேஷ் பாபுவின் 28 வது படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.
இன்று முதல் காட்சியாக ராம் லக்ஷ்மன் அமைக்கும் சண்டை காட்சிகளை படமாக்க உள்ளார் இயக்குனர் த்ரிவிக்ரம்.
இங்கு இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருப்பதால் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு நடித்து வருகிறார் மகேஷ் பாபு.
மேலும் இந்த படத்திற்காக அவர் நீண்ட தலை முடி முடியை வளர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
#SSMB28 Shoot Begins Today with an Action Sequence in Ram-Laxman Choreography