தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்றைய தொழில்நுட்ப சமூகத்தை ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்டவை ஆட்சி செய்து வருகின்றன.
இதில் வாட்ஸ் அப்பை மையமாக வைத்து ‘பகிரி என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.
அதாவது வாட்ஸ் அப் என்றால் ‘பகிரி’ என்று பொருள்படும் வகையில் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.
இசக்கி கார்வண்ணன் என்பவர் தயாரித்து இயக்கி வரும் இப்படத்தில் ‘கனாக்காணும் காலங்கள் புகழ் பிரபு ரணவீரன் நாயகனாக நடிக்கிறார்.
ஆந்திராவில் இருந்து இறக்குமதியான ஷர்வியா நாயகியாக நடிக்க, ரவிமரியா, ஏ.வெங்கடேசன், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ்.
இப்படம் குறித்து இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கூறியதாவது…
‘இது பகிர்தல் தொடர்புடைய கதை. எனவேதான் ‘பகிரி’.
தாம்பரம் தாண்டி முடிச்சூரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞன் ஒருவனை மையம் கொள்கிற கதை.
இக்கால இளைஞர்கள் தங்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? விருப்பம், வேலை எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறேன்.
நான் பகிரவேண்டிய செய்தியையும் முழுக்க காமெடியோடு பகிர்ந்திருக்கிறேன்” என்றார்.
வீரகுமார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.