அஜித்துடன் மோதும் கார்த்தி..; மெட்ராஸ் படம் ‘நான் மகான் அல்ல பார்ட் 2’ ஆக மாறியது..; புரியலேன்னா இந்த நியூஸ் படிங்க

அஜித்துடன் மோதும் கார்த்தி..; மெட்ராஸ் படம் ‘நான் மகான் அல்ல பார்ட் 2’ ஆக மாறியது..; புரியலேன்னா இந்த நியூஸ் படிங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் கபாலி படத்தை ரஞ்சித் இயக்க முக்கிய காரணமாக அமைந்த படம் மெட்ராஸ்.

கார்த்தி, கலையரசன், கேத்ரீன் தெரசா, ரித்விகா நடித்த இந்த படத்தை ரஞ்சித் இயக்கியிருந்தார். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்த இந்த படம் சிட்டி முதல் பட்டி தொட்டி வரை பட்டைய கிளப்பியது.

இதில் வடசென்னை மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக காட்டியிருந்தார். ஒரேயொரு சுவரை வைத்து மொத்த படத்தின் கதைக்களத்தை அமைத்திருந்தார்.

தற்போது 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் டப் செய்து தெலுங்கில் ரிலீஸ் செய்கிறது.

ஜனவரி 13ல் இந்த படம் தெலுங்கில் ரிலீசாகிறது. இதே நாளில்தான் அஜித்தின் வலிமை படமும் தமிழ் தெலுங்கு ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.

இதற்கு முன்பு கார்த்தி நடித்த ‘நான் மகான் அல்ல’ படத்தை 2010ம் ஆண்டில் ‘நா பேரு சிவா’ என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

கார்த்திக்கும் அந்த படத்திற்கும் தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்த நிலையில் தற்போது அதே பெயரில் ‘பார்ட் 2’ என சேர்த்து ‘நா பேரு சிவா 2’ என ‘மெட்ராஸ்’ தெலுங்கு டப்பிங் படத்தை வெளியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Karthi to clash with Ajith this year 2022

பிராந்தி விளம்பர சர்ச்சை..; சரக்கடிக்கும் சிம்பு-உதயநிதி பட நடிகை

பிராந்தி விளம்பர சர்ச்சை..; சரக்கடிக்கும் சிம்பு-உதயநிதி பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு உடன் ஈஸ்வரன், ஜெயம் ரவி உடன் பூமி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நிதி அகர்வால்.

இந்த இரு படங்களுமே 2021 பொங்கல் தினத்தில் வெளியானது.

தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தல் உதயநிதி நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் நிதி அகர்வால்.

இந்த நிலையில் இவரின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் இவர் நடித்துள்ள பிராந்தி விளம்பர வீடியோவை பகிர்ந்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பிராந்தியை க்ளாஸில் ஊற்றி அதை முகர்ந்து செம அரோமோ என பேசுகிறார். இது புத்தாண்டு கிப்ட் எனவும் இந்தியாவின் மிகச்சிறந்த மது எனவும் அதில் பேசுகிறார்.

இந்த விளம்பரம் தற்போது சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

நடிகைகளில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஆகியோரும் இதுபோன்ற மது விளம்பரத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Niddhi Aggerwal insta post creates controversy

ஓடிடியில் ‘புஷ்பா’.. வீட்டிலேயே ஆடி பார்க்கலாம்… ஊ….. சொல்றீயா மாமா..!

ஓடிடியில் ‘புஷ்பா’.. வீட்டிலேயே ஆடி பார்க்கலாம்… ஊ….. சொல்றீயா மாமா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத்பாசில் உள்ளிட்டோர் நடித்த படம் ’புஷ்பா’.

2021ல் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீசாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.

இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. முக்கியமாக தமிழில் ஆண்ட்ரியா பாடி சமந்தா ஆடிய ஊ. சொல்றீயா மாமா என்ற பாடல் வேற லெவல் ஹிட்டானது.

இவையில்லாமல் ராஜலட்சுமி செந்தில் பாடிய சாமி.. சாமி… பாடல் வெறித்தனமாக ஹிட்டடித்தன.

தற்போது ரிலீஸாகி 3 வாரங்கள் ஆன நிலையில் அமேசான் ஓடிடி தளத்தில் ’புஷ்பா’ திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘புஷ்பா’ திரைப்படம் அமேசானில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதனால் ரசிகர்கள் இந்த படத்தை ஓடிடியிலும் பார்த்து மகிழ ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pushpa The rise OTT release date announced

ரேஷன் தியேட்டர்கள் திறக்கப்படுமா? என அரசுக்கு பிரபல இயக்குனர் கேள்வி

ரேஷன் தியேட்டர்கள் திறக்கப்படுமா? என அரசுக்கு பிரபல இயக்குனர் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021ல் சினிமா தியேட்டர்களின் டிக்கெட் விலையை ஆந்திர அரசு நிர்ணயம் செய்தது.

தியேட்டர்களில் உள்ள இருக்கை எண்ணிக்கையைப் பொறுத்து இந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

இதில் கிராமப்புறம், நகரப்பகுதிகளில் உள்ள தியேட்டர்களுக்கும் பொருந்தும.

ஐமேக்ஸ் போன்ற பெரிய திரையரங்குகள் ரூ.300 வரையிலும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ரூ.250 வரையிலும், ஏசி வசதி கொண்ட சாதாரண தியேட்டர்கள் ரூ.150 வரையிலும் கட்டணம் வசூலிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. இதில் முக்கியமாக ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் விதிக்கப்பட்டது.

இத்துடன் பராமரிப்புக் கட்டணமாக ரூ.3 முதல் 5 வரை தனியாகக் கட்டணம் வசூலிக்கலாம் எனவும் ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்தக் கட்டண உயர்வால் ஆந்திராவில் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் ஆர்ஆர்ஆர் படமும் ரிலீஸ் தள்ளிப் போனதாகவும் கூறப்படுகிறது.

ஆந்திர அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் தெலுங்கு திரையுலகம் பெரும பின்னடைவை சந்தித்துள்ளது.

இதற்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராம் கோபால் வர்மாவும் சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அதில்…

கோதுமை, அரிசி, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்போது, அரசாங்கம் தலையிட்டு அவற்றை சமநிலைக்குக் கீழே அல்லது அதற்கு மேல் விலையை நிர்ணயம் செய்யலாம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அது திரைப்படங்களுக்கு எப்படி பொருந்தும்?

ஏழைகளுக்கு சினிமா மிகவும் அவசியம் என்று நீங்கள் நினைப்பீர்கள் ஆனால் மருத்துவம் கல்விக்கு அரசு மானியம் கொடுக்கிறீர்களோ, அதுபோல சினிமாவுக்கும் ஏன் அரசு மானியம் தருவதில்லை?

ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட ரேஷன் கடைகளை போல ரேஷன் தியேட்டர்களையும் உருவாக்குவது பற்றி பரிசீலிப்பீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Director Ram Gopal Varma question to Andhra govt

தள்ளிப் போகும் அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ்..; டென்ஷனில் ரசிகர்கள்

தள்ளிப் போகும் அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ்..; டென்ஷனில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் ஜனவரி 13ல் ரிலீசாகவுள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பல மாநிங்களில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சற்றுமுன் தமிழகத்தில் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கும் வார நாட்களில் இரவு ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்களில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அரசு அனுமதியளித்துள்ளது.

இதனால் தியேட்டர்களில் இரவு நேர காட்சிகள் ரத்து செய்யப்படும். மேலும் ஞாயிறு முழுவதும் காட்சிகள் இருக்காது. இதனால் ‘வலிமை’ படத்தின் வசூல் பெருமளவில் குறையும்.

இதன்படி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் ஊரடங்கு உத்தரவால் தள்ளிப்போனது. தற்போது வலிமை திரைப்படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் முன்னதாக நேற்று இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.. தற்போது ‘வலிமை’ ரிலீஸ் தள்ளி வைப்பு என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar’s Valimai may postpone again

‘ஆர்ஆர்ஆர்’ விட்ட கேப்பில் நுழைந்த ‘1945’…; காந்தி வழியை மறுத்து நேதாஜி வழியில் ராணா

‘ஆர்ஆர்ஆர்’ விட்ட கேப்பில் நுழைந்த ‘1945’…; காந்தி வழியை மறுத்து நேதாஜி வழியில் ராணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்திய நாட்டில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதனால் இந்தியாவே எதிர்பார்த்த ‘ஆர்ஆர்ஆர்’ பட ரிலீஸ் ஜனவரி 7ல் அறிவிக்கப்பட்ட படம் தள்ளிப்போனது. புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இதனால் சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் இன்று சற்றுமுன் தமிழகத்தில் ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கும் வார நாட்களில் இரவு ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தியேட்டர்களில் 50 % பார்வையாளர்களுக்கே மட்டுமே அனுமதி என அரசு அறிவித்துள்ளது.

இதனையடுத்து ஜனவரி 26ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட விஷாலின் வீரமே வாகை சூடும் படம் (தெலுங்கு பதிப்பு) ஜனவரி 14ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கழுகு பட இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் ராணா நடித்துள்ள ‘1945’ என்ற படம் வரும் ஜன-7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர். இந்த படத்தில் ரெஜினா நாயகியாக நடித்துள்ளனர்.

இந்த ஜோடியுடன் நாசர், சத்யராஜ், காளி வெங்கட் உள்ளிட்டோரும் உண்டு.

இந்திய சுதந்திர கால போராட்டத்தை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் காந்தியின் அஹிம்சை வழியை பின்பற்றாமல் நேதாஜி எடுத்துக் கொண்ட போராட்ட வழியை பின்பற்றுபவராக நடித்திருக்கிறார் ராணா.

இந்த படம் ரிலீசுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பே தயாரானாலும் சில பிரச்சினைகளால் முடங்கி கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The grand period drama Rana Daggubati’s 1945 Movie is all set for Jan Keycap digit seventh release

More Articles
Follows