கலையரசனுடன் 2 நாயகிகள் இணையும் டைட்டானிக் (காதலும் கவுந்து போகும்)

கலையரசனுடன் 2 நாயகிகள் இணையும் டைட்டானிக் (காதலும் கவுந்து போகும்)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anandhi and Ashna Zaveriமெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் கலையரசன்.

மேலும் ராஜா மந்திரி, டார்லிங்2, அதே கண்கள் உள்ளிட்ட படங்களில் தன் நாயகனாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவர் புதிதாக நடிக்கவுள்ள ஒரு படத்திற்கு டைட்டானிக் என பெயரிட்டுள்ளனர்.

‘காதலும் கவுந்துபோகும்’ என்ற டேக்லைனுடன் இந்த டைட்டில் உள்ளது.

இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக சிவி. குமார் தயாரிக்கிறார்.

ஜானகிராமன் என்பவர் இயக்கி வரும் இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி, ஆஷ்னா சாவேரி என டபுள் ஹீரோயின்ஸாம்.

விஷாலை ஹீரோவாக்கினார் அர்ஜுன்; அர்ஜுனை வில்லனாக்கிவிட்டார் விஷால்

விஷாலை ஹீரோவாக்கினார் அர்ஜுன்; அர்ஜுனை வில்லனாக்கிவிட்டார் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal and arjunவிஷால் தயாரித்து நடித்துள்ள படம் இரும்புத்திரை. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் விஷால், சமந்தா, இயக்குநர் P.S. மித்ரன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் 5ஸ்டார் கதிரேசன், இயக்குநர் திரு, ரோபோ சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அர்ஜுன் பற்றி விஷால் கூறியதாவது…

என்னுடைய குருநாதர் (அர்ஜுன் ) முதலில் படத்திற்கு ஒப்புக்கொண்டு என் அப்பாவிற்கு தொலைபேசியில் இந்த பையன நான் ஹீரோவா ஆக்கினா இவன் என்னைய வில்லனா மாத்திடான் அப்படின்னு சொல்லிட்டார்.

ஏனா அவர் தான் எனக்கு உக்கம் கொடுத்து செல்லமே படத்தில் என்னை ஹீரோவாக உருவாக்கினர். ரொம்ப நன்றி அர்ஜுன் சார்.

எங்க ரெண்டு பேருக்கும் க்ளைமாக்ஸ் சண்டை காட்சி ஒன்று உள்ளது. அதை ரெண்டு பேரும் ரொம்ப ரசித்து எடுத்துள்ளோம்.

படத்தின் கடைசி 30 நிமிட காட்சிகள் மிக சிறப்பாக அமைத்துள்ளது.” என்றார்.

ஆர்கே.நகர் தேர்தலில் நான் போட்டியிடக்கூடாது என மித்ரன் வேண்டினார்..: விஷால்

ஆர்கே.நகர் தேர்தலில் நான் போட்டியிடக்கூடாது என மித்ரன் வேண்டினார்..: விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Mithranவிஷால் நடிப்பில், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்புத்திரை. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் நாயகன் விஷால், நாயகி சமந்தா, இயக்குநர் P.S. மித்ரன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் 5ஸ்டார் கதிரேசன், இயக்குநர் திரு, நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விஷால் பேசியது :-

இரும்புத்திரை படம் விஷால் பிலிம் பேக்டரியில் தொடங்கி தாமதமாக வெளிவரும் படம். பாண்டிய நாடு தொடங்கி நிறைய படங்களை தயாரித்துள்ளோம். இரும்புத்திரை முதலில் ஏப்ரல் 14 வெளியிட முடிவு செய்திருந்தோம் ஆனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடவேண்டிய சூழ்நிலை கட்டாயம் அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது.

R.K நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பல்வேறு நபர்கள் வேண்டிக்கொண்டதில் மித்ரனும் ஓருவன். ஏனெனில் மீண்டும் படம் தள்ளி போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று மித்ரன் வேண்டுதல் நிறைவேறியது.

நான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடாமல் நான் சுயநலவாதியாக என்னுடையப்படம் நான் வட்டி கட்டிக்கொண்டு இருக்குறேன் இன்னும் ஒரு ஆறு மாதம் தள்ளி போனால் வட்டி அதிகரிக்கும் என்று எண்ணி ஏப்ரல் 14 வெளியிடலாம் என்று நினைத்து இருந்தால் ஆனால் இந்த தொழில்துறை நன்றாக இருக்கவேண்டும் என்ற ஓரே காரணத்தால் தான் இந்த படத்தை தள்ளி போடப்பட்டது.

ஏன்னென்றால் பணத்தை நான் இன்று இழந்து விட்டால் எப்போ வேண்டும் என்றாலும் சம்பாதிக்க முடியும் ஆனால் சோறு போட்ட இந்த தொழில்துறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் என்ற நம்பிக்கையில் நான் என் குழுவோடு இணைந்து தேர்தலில் போட்டியிட கட்டாயம் ஏற்பட்டது. சொன்ன விஷயத்தை செய்துகொண்டு இருக்கிறோம்.

நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன இருந்தாலும் செயல்பாடுகளில் தான் நாங்கள் காட்ட வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றோம்.

அதை நிறைவேற்ற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அணைத்து தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்கும்.

மித்ரன் இந்த கதையை எனக்கு கூறும்போது இது எனக்கு சரியான கதையாக இருக்கும் என்று தோன்றியது துப்பறிவாளன் படத்துக்கு பின்பு இந்த படம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

பின்பு மிக முக்கியமாக ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் மற்றும் சாம் இவர்கள் இணைந்த அணைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன அதை போன்று இந்த படமும் வெற்றி பெறும்.

எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் உமேஷ் மற்றும் என்னுடைய நெருங்கிய நண்பர் யுவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மொத்த டீமும் சிறப்பாக பணியாற்றி உள்ளோம். இந்த படத்தின் இசை வெளிட்டு விழா ஜனவரி 6 மலேசியாவில் நடைபெற உள்ளது.

ஒரு நடிகனாவும் தயாரிப்பாளராகவும் அனுபவிக்க அனுபவமகா இருந்தது. இரும்புத்திரை என்னுடைய கேரியரில் மிக முக்கியமான திரைப்படம்.

முதல் முறையாக சமந்தாவுடன் வேலை செய்கிறேன் ஒரு அழகான நபர். சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரட்ச்சனைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும்.

படத்தில் காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்துள்ளன” என்றார்.

யார் காலில் விழனும் / விழக்கூடாது; சூப்பர் ஸ்டார் சூப்பர் அட்வைஸ்

யார் காலில் விழனும் / விழக்கூடாது; சூப்பர் ஸ்டார் சூப்பர் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Star Rajini advice his fans at meetingசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு இன்று மூன்றாவது நாளாக சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை இன்று அவர் சந்தித்து வருகிறார்.

நீண்ட நாள்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டாரை பார்த்த மதுரை ரசிகர்கள் ஊற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். அவர்களின் ஆராவரத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் அவர்களிடம் மேடையில் நின்றவாறு பேசினார்.

அப்போது அவர்…

“மதுரை என்றாலே வீரத்துக்கு அடையாளம்.” என்று பேசத் தொடங்கினார். “ரசிகர்களாகிய உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. ஏனெனில் நானும் ரசிகனாய் இருந்து வந்தவன் தான்.

சிறுவயதில் பெங்களூரில் இருந்த போது நான் கன்னடத்தில் பெரும் நடிகரான ராஜ்குமாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதல்முறை பார்த்தபோது நான் அவரை பார்க்க மறந்துவிட்டேன்.

அவர் நடித்த படங்கள் தான் கண்முன் வந்து போனது. உங்களை போலவே நானும் அவரை ஆர்வத்துடன் தொட்டிருக்கிறேன்.

முதலில் நாம் மூன்று பேர் காலில் விழ வேண்டும் கடவுள் மற்றும் நமக்கு உயிர்க்கொடுத்து உடல் கொடுத்த தாய் தந்தை கால்களில் விழ வேண்டும். அதையெடுத்து பெரியவர்கள் கால்களில் விழச் சொல்லுவார்கள்.

அதற்குக் காரணம், அவர்கள் பல சுக, துக்கங்களை சந்தித்து பல அனுபவங்கள் மிகுந்த பாதையை அவர்களின் பாதம் கடந்து வந்திருக்கும், அதில் நீயும் பயணிக்க இருக்கிறாய் என்பதால் தான்.

அதை விடுத்து பணம், புகழ், அதிகாரம் உள்ளவர்களின் காலில் விழ வேண்டும் என்ற அவசியம் இல்லை”. என்று கூறினார்.

மேலும், ” உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கரி விருந்து வைக்க ஆசை தான். ஆனால், நான் பெருமாள் நட்சத்திரம்.

ராகவேந்திரா மண்டபத்திலும் அசைவ உணவுகளுக்கு அனுமதி இல்லை. அதை இன்னொரு தருணத்தில் பார்த்துக் கொள்ளலாம் “. என்று கூறினார்.

Super Star Rajini advice his fans at meeting

விஜய்-சூர்யாவுக்கு மரியாதை கொடுக்கனும்; விஷாலுக்கு அப்படியில்லை… சமந்தா பேச்சு

விஜய்-சூர்யாவுக்கு மரியாதை கொடுக்கனும்; விஷாலுக்கு அப்படியில்லை… சமந்தா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samantha talks about Vijay Suriya and Vishalமித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா முதன்முறையாக இணைந்துள்ள படம் இரும்புத்திரை.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தா பேசியதாவது..

இரும்பு திரை படத்தில் கதையும், காட்சியும் உண்மையாக இருக்கும். அறிமுக இயக்குநர் மித்ரனின் இயக்கத்தில் இப்படத்தில் நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது.

நான் அவருடைய இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் விஜய் சார், சூர்யா சார் போன்ற மூத்த நடிகர்களின் படங்களில் நடிக்கும் போது அவர்களுக்கு மரியாதை அளித்து நடிக்க வேண்டி இருக்கும்.

ஆனால் இப்படத்தில் விஷாலுடன் நடித்தது என்னை விட வயதில் இளையவர் ஒருவரோடு நடித்தது போல் இருந்தது. விஷால் இஸ் தி பெஸ்ட்” என்று பேசினார் சமந்தா.

Samantha talks about Vijay Suriya and Vishal

100 நாட்களுக்குள் 2 படங்களை ரிலீஸ் செய்ய விஷால் திட்டம்

100 நாட்களுக்குள் 2 படங்களை ரிலீஸ் செய்ய விஷால் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal plans to release his 2 movies within 100 daysகடந்த சில மாதங்களாக சினிமா துறை தேர்தல் முதல் பொதுத்தேர்தல் வரை பிஸியாக இருந்தவர் விஷால்.

இதனால் அவர் நடிக்கும் படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது.

தற்போது மீண்டும் தன் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

மித்ரன் இயக்கத்தில் அர்ஜீன், விஷால், சமந்தா நடித்துள்ள இரும்புத்திரை படத்தை 2018 ஜனவரி 26ல் வெளியிடவுள்ளனர்.

இப்படத்தை விஷால் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதனையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் உருவாகிவரும் சண்டக்கோழி2 படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி இருவரும் நடித்து வருகின்றனர்.

இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vishal plans to release his 2 movies within 100 days

More Articles
Follows