தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வெங்கட்பிரபு தயாரித்து இயக்கியுள்ள சென்னை 28 இன்னிங்ஸ் 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.
இதில் வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி, மிர்ச்சி சிவா, வைபவ், விஜயலெட்சுமி, மகேஸ்வரி, மகத் உள்ளிட்ட படக்குழுவினருடன் படத்தில் நடித்துள்ள தயாரிப்பாளர் டி.சிவாவும் கலந்துகொண்டார்.
அப்போது படத்தின் நாயகர்களில் ஒருவரான ஜெய் இவ்விழாவுக்கு வராதது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து டி.சிவா பேசியதாவது…
“நடிகர் அஜித் தற்போது முன்னணி நடிகராக உயர்ந்து விட்டார்.
பொதுவிழாக்களில் கலந்துகொள்ளாமல் ஒரு டிரெண்டை கிரியேட் செய்தார் அஜித்.
ஆனால் வளரும் நடிகரான ஜெய், இவ்விழாவுக்கு வராமல் இருந்தது சரியல்ல.
அவர் இன்று நடிகராக உயர இந்த சென்னை 28 படத்தின் முதல் பாகம்தான் காரணம்.”
என்று பரபரப்பாக பேசினார்.