கிறிஸ்துவ போலி சாமியார் காட்சி நீக்கம்..; இந்துக்கள் இளிச்சவாயர்களா.? ஆர்ஜே பாலாஜிக்கு கண்டனம்

கிறிஸ்துவ போலி சாமியார் காட்சி நீக்கம்..; இந்துக்கள் இளிச்சவாயர்களா.? ஆர்ஜே பாலாஜிக்கு கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி, சரவணன் இயக்கியிருந்த படம் மூக்குத்தி அம்மன்.

தீபாவளி வெளியீடாக இந்த படம் ஓடிடியில் வெளியானது.

தமிழ்நாட்டில் பரவலாக காணப்படும் போலி சாமியார்கள், மத அரசியல் உள்ளிட்டவைகளை காட்டியிருந்தனர்.

இந்து மற்றும் கிறிஸ்துவ மத போலி சாமியார்கள் எப்படியெல்லாம் அப்பாவி பொது மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்டியிருந்தனர்.

இப்படத்தின் ரிலீசின் முன்பே சில காட்சிகளை வெளியானது.

அதில் கிறிஸ்துவ போலி மத போதகராக மனோ பாலா நடித்திருந்தார்.

மதப்பிரசங்க மேடையில் காட் இஸ் காலிங் எனச் சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுவார். அப்போது அம்மனாக நடித்திருக்கும் நயன்தாரா, ஜீசஸ் என்னுடைய பிரண்டுதான் என்ற வசனத்தை பேசுவார்.

ஆனால் படம் வெளியான பின் அந்தக் காட்சி படத்தில் இடம் பெறவில்லை.

அதாவது கிறிஸ்துவ மதத்தை கிண்டலடிக்கும் சில நிமிட காட்சிகளை நீக்கிவிட்டனர்.

ஆனால் படம் முழுவதும் காட்டப்பட்டுள்ள இந்து மதத்தை கிண்டலடிக்கும் காட்சிகளை மட்டுமே படமாக காட்டியுள்ளனர்.

இதனையடுத்து ஆர்ஜே. பாலாஜிக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Mookuthi Amman controversial scenes deleted

ரஜினி-சிவகார்த்திகேயன் உடன் நடித்த ‘தவசி’ புற்று நோயால் அவதி (வீடியோ)

ரஜினி-சிவகார்த்திகேயன் உடன் நடித்த ‘தவசி’ புற்று நோயால் அவதி (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி, பிந்து மாதவி உள்ளிட்டோர் இணைந்து நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’.

இந்த படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி.

பெரிய தாடி, முறுக்கு மீசை என வலம் வரும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் அந்த படத்தில் பேசிய வசனம் மிகவும் பாப்புலர் ஆனது.

கிழக்குச் சீமையிலே படத்தில் இவர் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து வருகிறாராம்.

மேலும் ராசாத்தி என்ற சின்னத்திரை தொடரிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது புதிய புகைப்படம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மொட்டை தலையுடன் மெலிந்த உடலுடன் காணப்படுகிறார். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார் தவசி.

அவருக்கு திரையுலகினர் உதவ வேண்டும் என அவரின் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.

தற்போது அவருக்கு இலவசமாக புற்றுநோய் சிகிச்சை அளிப்பதாக தி.மு.க எம்.எல்.ஏ மருத்துவர் சரவணன் உறுதியளித்துள்ளார்.

Tamil actor Thavasi struggles with cancer

பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் திடீர் மரணம்

பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் திடீர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

losliya fatherஇலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லொஸ்லியா.

இவர் பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். அதன் மூலம் தமிழகத்தில் பிரபலமானார்.

இதனால் உலகளவில் தமிழ் பேசும் மக்களிடம் அறிமுகமானார்.

தனது தந்தை மரியநேசன் குடும்பத்தைப் பிரிந்து, கனடா நாட்டில் 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருவதாகவும் தனக்கு தன் தந்தையை மிகவும் பிடிக்கும் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறிக் கொண்டே இருப்பார்.

தற்போது விளம்பரப் படங்களிலும் தமிழ் திரைப்படங்களிலும் வாய்ப்பு பெற்று நடித்து வருகிறார்.

இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கனடாவில் இருந்த மரியநேசன் அவர்கள் மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்தார்.

லொஸ்லியாவின் ரசிகர்களும் அவரின் திரையுலக நண்பர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Losliya father Mariyanesan passed away in canada

‘குற்றம் 23’ படத்தயாரிப்பாளரின் ‘சலூன்’..; யோகி பாபு முடியை வெட்டுவாரா சிவா..?

‘குற்றம் 23’ படத்தயாரிப்பாளரின் ‘சலூன்’..; யோகி பாபு முடியை வெட்டுவாரா சிவா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெதான் – தி சினிமா பீப்பிள் இந்தர்குமார் தயாரிப்பில் சிவா கதாநாயகனாக நடிக்க – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் “சலூன்”

‘குற்றம் 23’, ‘தடம்’ வெற்றிப்படங்களை தொடர்ந்து இந்தர்குமாரின் ரெதான் – தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’.

எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சிவா – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் ‘தர்மபிரபு’ வெற்றிப் படத்தை இயக்கிய முத்துக்குமரன் இயக்கத்தில் புதிய நகைச்சுவை படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார் இந்தர்குமார்.

‘சலூன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் சிவா – யோகி பாபு இணைந்து நடிக்க கதாநாயகி மற்றும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

‘சலூன்’ பின்னணியில் கடையின் முதலாளியாக மிர்ச்சி சிவா, தொழிலாளியாக யோகி பாபு நடிக்கின்றனர்.

முழுக்க முழுக்க சரவெடி நகைச்சுவையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கி கோடை விடுமுறையில் வெளிவருகிறது.

படக்குழுவினர் விவரம்:
தயாரிப்பு – இந்தர்குமார்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முத்துக்குமரன்
ஒளிப்பதிவு – எஸ்.மணிகண்டன்
இசை – சாம்.சி.எஸ்
எடிட்டிங் – சான் லோகேஷ்
கலை – சி.எஸ்.பாலசந்தர்
பாடல்கள் – யுகபாரதி
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

Yogi Babu and Mirchi Shiva joins for Saloon

yogi babu saloon

இறுதிக் கட்டத்தை நெருங்கியது விஜய் ஆண்டனி & அருண் விஜய்யின் ‘அக்னிச் சிறகுகள்’

இறுதிக் கட்டத்தை நெருங்கியது விஜய் ஆண்டனி & அருண் விஜய்யின் ‘அக்னிச் சிறகுகள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun vijay and vijay antonyவிஜய் ஆண்டனி, இயக்குநர் நவீன், நடிகை அக்‌ஷராஹாசன் மற்றும் “அக்னி சிறகுகள்” படத்தின் மொத்தப்படக்குழுவும் கொல்கத்தாவின் சூழலை கொண்டாடி எடுத்துக்கொண்ட செல்ஃபி சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் தற்போது முழுப்படப்பிடிப்பும் முடிந்ததில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.

இயக்குநர் நவீன் இது குறித்து கூறியதாவது….

உலகம் முழுவதுமே படப்பிடிப்பு செய்வது என்பதே தற்போது மிகவும் நெருக்கடியான சூழலாக இருந்து வருகிறது.

படக்குழுவின் அயராத ஒத்துழைப்பே அனைவரும் இணைந்து இயங்குவதற்கு பெரும் ஊக்கமாக இருந்தது.

“அக்னி சிறகுகள்” படத்திற்கு இப்படியானதொரு படக்குழு கிடைத்திருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

இந்த படத்தின் மிக முக்கியமான காட்சிகள் சிலவற்றை கொல்கத்தாவில் தற்போது படமாக்கினோம்.

இத்துடன் படத்தின் முழுப்டப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. விஜய் ஆண்டனி மற்றும் அக்‌ஷரா ஹாசன் இருவரும் காட்சிகளில் வெளிப்படுத்திய அற்புத நடிப்பில் அசந்து போனேன்.

படத்தின் மொத்த படபிடிப்புமே பேரனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது உடனடியாக போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் துவக்கப்பட்டு விட்டது.

இந்நேரத்தில் படக்குழு அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு மற்றும் உடல்நலம் பேணும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைத்து தந்ததற்காக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T. சிவா அவர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மல்டி ஸ்டார் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன், சம்பத், J சதீஷ்குமார், ரைமா சேனா செண்ட்ராயன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.

நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். K S பாச்சா ஒளிப்பதிவு செய்ய, வெற்றிவேலன் K படத்தொகுப்பு செய்துள்ளார். கிஷோர் கலை இயக்கம் செய்ய, மகேஷ் மேத்யூ சண்டைப்பயிற்சி செய்துள்ளார்.

பரஞ்சோதி எக்சிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்ற சௌபர்னிகா உடை வடிவமைப்பு செய்துள்ளார்.

மிகப்பெரும் பட்ஜெட்டில், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத பூலோகத்தின் வித்தியாசமான பல லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ள, இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் T. சிவா தயாரிக்கிறார்.

பரபர திரில்லராக, பல அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது..

Agni Siragugal shoot has been wrapped up at Kolkata

எழுந்து வா இசையே… எஸ்பிபி-க்காக இலங்கை இசைக்கலைஞர்களின் இசையஞ்சலி

எழுந்து வா இசையே… எஸ்பிபி-க்காக இலங்கை இசைக்கலைஞர்களின் இசையஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக இசை ரசிகர்களின் உள்ளத்தில் நீங்காத இடம்பிடித்த மறைந்த பாடகர், அமரர் பத்மஸ்ரீ டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவாக இலங்கையின் பிரபல இசைக்கலைஞர்கள் இணைந்து அஞ்சலி பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இலங்கை இசையமைப்பாளர் அருண் குமாரசுவாமி பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

பாடல் வரிகளை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது “வானே இடிந்ததம்மா” என்ற இரங்கல் பாடலை எழுதி கவனம் பெற்ற தமிழ் சினிமா பாடலாசிரியர், கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.

பாடலை இலங்கையின் பிரபல பாடகர்களான எம்.சிவகுமார், கே.மகிந்தகுமார், பிரேமானந்த், சுருதி பிரபா, நிலுக்ஸி ஜெயவீரசிங்கம், நித்தியாந்தன், கிருஸ்ண குமார், கந்தப்பு ஜெயந்தன், கே.சுஜீவா, மடோனா, அருண்குமாரசுவாமி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் வொன்டர் மீடியா புரடக்ஸன் தயாரித்துள்ள இப்பாடலின் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம். ஒலிக்கலவை கோகுல் கிருஸ்ணா, ஒளிப்பதிவு நியாஸ் ஹம்ஸா,சுமதி குமாரசுவாமி,
வெங்கட் முரளி, செம்மையாக்குனர் இமானுவல் பிலிப் ஜோன்ஸன், கணனிவரைகலை,சிராஜ் பரபுராத், ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா காரணமாக வெளியீடு தாமதமான இப்பாடல் இன்று வெளியாகியுள்ளது.

*எழுந்து வா இசையே… பாடல்*

*SPB OFFICIAL TRIBUTE SONG Link*

SPB Official Tribute Song by Arunkumarasamy and Pottuvil Asmin

IMG-20201116-WA0058

IMG-20201116-WA0057

More Articles
Follows