தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமா படங்களில் பிரபல நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன்.
இவர் நடிகர் இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர்.
தற்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜூன் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
சான்சிபார் என்ற தீவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.
கடந்த ஞாயிறு அன்று நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியை முடித்து திரும்பினார் நடிகர் அர்ஜூன்.
அதன்பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதுப்பற்றி அர்ஜூன் கூறுகையில்,..
‛‛கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானது.
என் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்து வருகிறேன்.
என்னுடன்தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நான் நலமாக உள்ளேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என தெரிவித்துள்ளார்.
Actor Arjun tests positive for COVID-19