Marvel anthem உருவாக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

Marvel anthem உருவாக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஇந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக அவரது முத்திரை பதிக்கும் இசையை உருவாக்க கைகோர்த்துள்ளது மார்வெல் இந்தியா. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருக்கிறார். இந்த பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படும்.

நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் வெளிவர இருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இதுவே இந்த படத்தை ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக்கியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்திய ரசிகர்கள் மார்வெல் சூப்பர் ஹீரோக்களை மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தின் மிகப்பெரிய வெற்றியே இதை பறைசாற்றுகிறது. தானோஸ் கிரகத்திலிருக்கும் மக்கள் தொகையை பாதியாக்கி விட்டதால், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் பற்றிய உரையாடல்கள் ஈடு இணையற்றதாக உள்ளது.

“என் சொந்த குடும்பத்திலேயே என்னை சுற்றி மார்வெல் ரசிகர்கள் சூழ்ந்திருப்பதால், அவெஞ்சர்ஸ்க்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பொருத்தமானவற்றை கொடுக்க அதிக அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. மார்வெல் ஆர்வலர்கள் மற்றும் இசை ரசிகர்கள் இந்த பாடலை ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

“அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் ஒரு படம் மட்டும் அல்ல, இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் ரசிகர்களுக்கான உணர்ச்சிப்பூர்வமான ஒரு பயணம். ரசிகர்கள் மிகவும் விரும்பும் மார்வெல்லை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கொண்டாடுவது தான் சரியான வழி. ரசிகர்களின் அசாதாரண ஆதரவுக்கு நாங்கள் சிறிய அளவில் தெரிவிக்கும் நன்றி” என்றார் மார்வெல் இந்தியா ஹெட் பிக்ரம் துக்கல்.

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பற்றி: தானோஸ் மூலம் நிகழ்வுகள் பாதி பிரபஞ்சமே அழிந்து விட, சூப்பர் ஹீரோக்கள் பலரும் மறைந்து விட, மீதமுள்ள அவெஞ்சர்ஸ் எடுக்கும் இறுதி முடிவு தான் இந்த 22 படங்களின் இறுதி படமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

கெவின் ஃபைஜ் தயாரிக்க, அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ இரட்டை இயக்குநர்கள் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்கள். லூயிஸ் டி’எஸ்ஸ்பிஸிடோ, விக்டோரியா அலோன்சோ, மைக்கேல் கிரில்லோ, டிரின் டிரான், ஜான் ஃபேவ்ரூ மற்றும் ஸ்டான் லீ ஆகியோர் நிர்வாக தயாரிப்பில் பணிபுரிந்துள்ளனர். கிறிஸ்டோபர் மார்கஸ் & ஸ்டீபன் மெக்ஃபீலி திரைக்கதை எழுதியுள்ளனர். ஏப்ரல் 26ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

Breaking : புதிய நீதிக்கட்சி ஏசி.சண்முகத்திற்கு ஆதரவாக கார்த்தி பிரச்சாரம்.?

Breaking : புதிய நீதிக்கட்சி ஏசி.சண்முகத்திற்கு ஆதரவாக கார்த்தி பிரச்சாரம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Whether Karthi campaigning for AC Shanmugams political party in election 2019வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

அரசியல் தலைவர்கள் அனைவரும் தங்கள் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.

சில நடிகர்களும் கட்சிகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

இதில் புதிய நீதிக் கட்சியின் தலைவரான ஏசி சண்முகம், அஇஅதிமுக கூட்டணி சார்பில் வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக நடிகர் கார்த்தி பேசும் வீடியோ ஒன்று சமூக இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில்…. “எங்களுக்கு நண்பராக, நலம் விரும்பியாக எப்போதும் கூடவே இருக்குறவர் சண்முகம் சார். அவர்கிட்ட போய் நின்றால், நமக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு, நாம் கேட்பதற்கும் மீறி செய்யக்கூடிய ஒருவர்.

எம்ஜிஆரின் வழியில் வந்ததாலோ என்னவோ, பொதுத்தொண்டு என்பது அவருடைய இயல்பிலேயே உள்ளது. இவ்வளவு பெரிய கல்வி நிறுவனத்தை நிறுவியுள்ளார்.

ஒரு சாதாரண ஆளாக ஆரம்பித்து, இன்னிக்குப் பெரிய சாம்ராஜ்யமாக மாத்தியிருக்கார். அவ்வளவு பேருக்கு வேலை கொடுத்துருக்கார், உதவி பண்ணியிருக்கார்.

முக்கியமாக, சினிமாவில் இருக்கும் பல பேருக்கு, பல தொழிலாளர்களுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் பண்ணிக் கொடுக்கிறார்.

அவர் எந்தக் காரியம் எடுத்துச் செய்தாலும், அது வெற்றியடைய வேண்டுமென நான் வாழ்த்துகிறேன், வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் கார்த்தி.

இந்த வீடியோவை, ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக தற்போது பயன்படுத்தி வருகின்றன்ர.

எனவே ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக கார்த்தி ஓட்டு கேட்பது போன்று பலரும் நினைக்க தொடங்கினர்.

எனவே அந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் கார்த்தி.

“தேர்தலில் நான் பிரச்சாரம் செய்வது போன்ற வீடியோ குறித்து எனக்கு நிறைய போன் வந்தது. அது முற்றிலும் தவறான தகவல். தேர்தலில் வாக்கு அளிப்பது மட்டுமே என்னுடைய பங்கு” என தெரிவித்துள்ளார் கார்த்தி.

Actor Karthi‏Verified account @Karthi_Offl
There are queries about me campaigning in this election. Absolutely not. I will participate as a voter alone. Thanks.

Whether Karthi campaigning for AC Shanmugams political party in election 2019

Breaking சூர்யாவின் ‘என்ஜிகே’ ரிலீஸ் தேதியை அறிவித்தார் தயாரிப்பாளர்

Breaking சூர்யாவின் ‘என்ஜிகே’ ரிலீஸ் தேதியை அறிவித்தார் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Official announcement of NGK movie release date is hereசூர்யா மற்றும் செல்வராகவன் முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘என்.ஜி.கே.’ (‘நந்த கோபாலன் குமரன்’)

இதில் சூர்யாவுடன் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஜெகபதி பாபு, பாலா சிங், சம்பத் ராஜ், மன்சூரலிகான், முரளி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது.

காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இதன் டீஸர் ரிலீஸானது.

இந்நிலையில் மே மாதம் 31-ம் தேதி உலகம் முழுவதும் ‘என்.ஜி.கே.’ வெளியாகும் என அறிவித்துள்ளார்.

Official announcement of NGK movie release date is here

ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய திங்க் மியூசிக்

ராஜபீமா படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய திங்க் மியூசிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)எந்த ஒரு படத்துக்கும் இசை என்பது தான் ஆன்மா, அதை காட்சிகளின் மூலம் மேலும் அழகாக மாற்ற முடியும். ராஜபீமா படத்தின் இசை உருவாகி இருக்கும் விதத்தால் தயாரிப்பாளர் எஸ்.மோகன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆரவ், ஆஷிமா நர்வால் நடித்திருக்கும் இந்த படத்தை நரேஷ் சம்பத் இயக்கியிருக்கிறார். திங்க் மியூசிக் இந்த படத்தின் இசை உரிமைகளை கைப்பற்றியிருப்பதால் ஒட்டுமொத்த ‘ராஜபீமா’ குழுவும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் எஸ்.மோகன் கூறும்போது, “ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், சாதாரண ஒரு இசை ரசிகனாக இசைக்கு பொருத்தமான காட்சிகளை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அனுபவம். இசையமைப்பாளர் சைமன் கே கிங் மிகச்சிறந்த ஒரு திறமைசாலி. உலகளாவிய இசை ரசிகர்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்கக் கூடிய திறமை அவருக்கு உண்டு என்று கூறுவேன். அவரது சமீபத்திய படைப்புகளைத் தொடர்ந்து, ராஜபீமாவிற்கு எப்படி இசையை அளிப்பார் என ஒரு யூகத்தில் இருந்தேன். ஆனால் அவரது முந்தைய படைப்புகளில் இருந்து வேறுபட்ட மற்றும் புதிய பாணியுடன் என் எதிர்பார்ப்புகளை மிஞ்சி விட்டார். நான் அவரது பின்னணி இசையுடன் சில காட்சிகளை பார்க்க நேர்ந்தது, மிக அற்புதமாக வந்திருக்கிறது. படத்தில் அவரது சிறந்த உழைப்பை கொடுத்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, ராஜபீமாவின் ஆடியோ உரிமைகளை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. திங்க் மியூசிக் பல ஆல்பங்களை மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரப்படுத்துவதற்கு மிகவும் புகழ்பெற்றது. ராஜபீமா சரியான ஆட்களிடம் சென்று சேர்ந்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

மனிதன் – மிருகம் முரண்பாடுகளை பற்றி பேசும் இந்த ராஜபீமா, பாலக்காடு, பொள்ளாச்சி மற்றும் தாய்லாந்து ஆகிய அழகான இடங்களில் படப் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இசை, ட்ரைலர் மற்றும் பட வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

Breaking ராதாரவியே உங்களை பெற்றவளும் பெண்தானே; நயன்தாரா கண்டனம்

Breaking ராதாரவியே உங்களை பெற்றவளும் பெண்தானே; நயன்தாரா கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara Opens Up on Radha Ravis Sexist Commentsகொலையுதிர் காலம் பட விழாவில் ராதாரவி பேசும் போது நயன்தாராவின் நடத்தை குறித்து கடுமையாக பேசினார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் திமுக தலைவர் ஸ்டாலிம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராதாரவியை தற்காலிகமாக நீக்கியுள்ளார்.

நானே விலகிக் கொள்கிறேன் எனவும் ராதாரவி இன்றைய பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் எந்த விழாவுக்கு வராதா நயன்தாரா தற்போது திடீரென ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:

”நான் அறிக்கை கொடுப்பது அரிது. ஏனென்றால் எப்போதும் நான் பேசுவதை விட என் பணி பேசட்டும் என்றே இருக்கிறேன். ஆனால் சில நேரங்கள் சில நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.

பாதிக்கப்பட்டும் பெண்களுக்காகப் பேசவும் ஒரு விரிவான அறிக்கையை தரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

முதலில், ராதராவியின் பெண் வெறுப்புப் பேச்சைக் கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் கூறுவது எனது கடமை. உங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் சார்.

ராதாரவி உள்ளிட்ட பெண்களை வெறுக்கும் ஆண்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர்களுக்கு உயிர் கொடுத்ததும் ஒரு பெண் தான்.

பாலின ரீதியான கருத்துகளைச் சொல்லி பெண்களின் நிலையைத் தரம் தாழ்த்துவதன் மூலம், இத்தகைய பாதிக்கப்பட்ட ஆண்கள், ஆண்மையை உணர்கிறார்கள்.

இப்படியான முன் தீர்மானத்தோடு ஒரு பெண்ணை இவர்கள் நடத்துவது குறித்து நான் வருத்தப்படுகிறேன். மேலும், இப்படியான ‘ஆண்மை’ மிகுந்தவர்களின் வீட்டில் இருக்கும் பெண்களுக்காகவும் நான் பச்சாதாபப்படுகிறேன்.

மூத்த நடிகராகவும், இவ்வளவு வேலை அனுபவமும் கொண்ட நடிகர் ராதாரவி இளம் தலைமுறைக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்ந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, பெண் வெறுப்பில் ஒரு முன் மாதிரியாக இருப்பதையே அவர் விரும்பியிருக்கிறார்.

பொதுவாழ்வில் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்து பெயர்பெற்று வருகின்றனர். ராதாரவி போன்ற நடிகர்கள் வாய்ப்புகளின்றி, துறைக்குப் பொருத்தமின்றி போகும்போது, புகழ் வெளிச்சத்துக்காக சில மலிவான உத்திகளை களமிறக்குகிறார்கள்.

இதில் பெரும் அதிர்ச்சி என்னவென்றால், அவரது ஆணாதிக்கப் பேச்சுகளுக்கு எப்போதும் கைதட்டுகளும், சிரிப்பு சத்தமும் ரசிகர்கள் பக்கத்திலிருந்து தவறாமல் வரும்.

நல்ல எண்ணம் கொண்ட மக்களும், எனது அன்பார்ந்த ரசிகர்களும் ராதாரவி போன்றவர்களின் நடத்தையைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

நான் மேற்சொன்னவைகளையும் தாண்டி இந்த அறிக்கையின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவும், குறிப்பாக எனக்கு எதிராகவும் ராதாரவி தெரிவித்த தரக்குறைவான கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.

எனக்கு அற்புதமான வாய்ப்புகள் வருமளவும் கடவுள் என்னிடம் கருணை காட்டியுள்ளார். தமிழகத்தின் அன்பார்ந்த சினிமா ரசிகர்கள் எனது நல்ல நடிப்புக்காக வெகுமதி அளித்துள்ளார்கள்.

எனக்கெதிரான எதிர்மறையான கருத்துகளையும், அவமதிப்புகளையும் தாண்டி, என் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கு தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சீதா, பேய், பெண் தெய்வம், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களை நான் தொடர்ந்து ஏற்று நடிப்பேன்.

கடைசியாக, நடிகர் சங்கத்துக்கு எனது பணிவான கேள்வி – உச்ச நீதிமன்றம் சொன்னதைப் போல ஒரு புகார் குழுவை அமைப்பீர்களா? விசாகா குழு வழிகாட்டுதல்களின் படி துறைக்குள் விசாரணையைத் தொடங்குவீர்களா?

இந்த சிறிய எதிர்மறையான காலகட்டத்தில் என்னுடன் மீண்டும் துணை நின்ற, ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்போதும், எப்போதும் போல கடவுளின் ஆசியுடனும், உங்கள் நிபந்தனையற்ற அன்புடனும் பணிக்குத் திரும்புகிறேன்”.

இவ்வாறு நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Nayanthara Opens Up on Radha Ravis Sexist Comments

Breaking ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதி கன்பார்ம்; அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

Breaking ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதி கன்பார்ம்; அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Official announcement of Ner Konda Paarvai release date is hereஅமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹிந்திப் படம் ‘பிங்க்’.

இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்களும் வாழ்த்தினர்.

தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார்.

போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிக்க நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு ’நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைத்து அண்மையில் இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. பொதுவாக வெள்ளிக்கிழமை அன்று படங்கள் வரும். அல்லது முன்னதாக வியாழக்கிழமையன்று படத்தை வெளியிடுவார்கள். தற்போது முதன்முறையாக சனிக்கிழமை வெளியாவது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம்.

Official announcement of Ner Konda Paarvai release date is here

More Articles
Follows