தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித்தை இன்று அனைவரும் தல என்று அழைப்பதற்கு காரணமாக அமைந்தவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.
இவரின் இயக்கத்தில் உருவான தீனா இருவருக்கும் நிறைய வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.
எனவே, இவர்கள் இருவரும் மீண்டும் இணையமாட்டார்களா? என திரையுலகம் எதிர்பார்த்து வருகின்றது.
இந்நிலையில், தீனா பற்றி முருகதாஸ் மனம் திறந்து ஒன்றை தெரிவித்துள்ளர்.
‘தீனா படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. ஆனால் அதில் அஜித்துக்கு கிடைத்த பெயர் கூட எனக்கு கிடைக்கவில்லை.
அதன்பின்னர் விஜயகாந்த்தை வைத்து இயக்கிய ரமணா தான் எனக்கு பெரும் பேரை பெற்றுக் கொடுத்தது.
என் பெயரும் ரசிகப்பெருமக்களுக்கு நன்றாக தெரிந்தது’ என தெரிவித்துள்ளார்.