சூர்யா 42 படத்தில் இணைந்த டெர்ரர் வில்லன்

சூர்யா 42 படத்தில் இணைந்த டெர்ரர் வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவும் இயக்குனர் சிவாவும் இணையும் புதிய படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது, மேலும் இந்த படத்தில் 90 களின் ஆபத்தான வில்லன்
மன்சூர் அலி கான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் திஷா பதானி தமிழில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் டாக்டர் படப் புகழ் பிஜோர்ன் சுர்ராவ் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

மிகப்பெரிய பட்ஜெட் படத்திற்காக மீண்டும் கைகோர்க்கும் விஜய் மற்றும் அட்லி?

மிகப்பெரிய பட்ஜெட் படத்திற்காக மீண்டும் கைகோர்க்கும் விஜய் மற்றும் அட்லி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி விஜய் மற்றும் அட்லீ இணைந்து தெறி மெர்சல் பிகில் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை வழங்கியுள்ளனர்.

இந்த வெற்றிகரமான ஜோடி மீண்டும் ஒருமுறை 300 கோடி பட்ஜெட் படம் ஒன்றில் இணைந்து செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு தளபதி விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தைப் பற்றிய பேச்சுக்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

கமல் படத்திற்காக களரி பயிற்சி.; ஆசிரியருக்கு காஜல் அகர்வால் நன்றி

கமல் படத்திற்காக களரி பயிற்சி.; ஆசிரியருக்கு காஜல் அகர்வால் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஓரிரு தினங்களுக்கு முன் தொடங்கியது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் சித்தார்த், காஜல் அகர்வால் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்காக நடிகை காஜல்அகர்வால் களரிப்பட்டு என்ற தற்காப்புக்கலை பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த வீடியோவை அவர் வெளியிட்டு…

‛களரிப்பட்டு என்பது ஒரு இந்திய தற்காப்புக் கலையாகும்.

இது ‘போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் கலைகளில் ஒன்று. கொரில்லாப் போருக்கு பயன்படுத்தப்பட்டது.

களரி கற்றவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேம்படுத்தும்.

2-3 ஆண்டுகளாக முழு மனதுடன் இந்த கலையை எனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியருக்கு நன்றி.”‘ என காஜல் தெரிவித்துள்ளார்.

மகேஷ்பாபு – ராஜமௌலி கூட்டணியில் இணைந்த ஹாலிவுட்டின் பிரபல நடிகர்

மகேஷ்பாபு – ராஜமௌலி கூட்டணியில் இணைந்த ஹாலிவுட்டின் பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவை உலக சினிமா தரத்திற்கு கொண்டு சென்றவர் டைரக்டர் ராஜமவுலி என்று சொன்னால் அது மிகையல்ல.

ஆர் ஆர் ஆர் என்ற படத்தின் பிரஸ் மீட்டிற்கு அவர் சென்னை வந்த போது ஹாலிவுட் படங்களை இயக்குவது எப்போது? என்று Filmistreet சார்பில் கேள்வி கேட்கப்பட்டது.

நான் ஹாலிவுட் படங்களை இயக்க மாட்டேன். இங்கேயே இந்தியாவில் பல திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் என் படங்களை ஹாலிவுட் லெவலுக்கு கொண்டு செல்வேன்” என அப்போது கூறியிருந்தார்.

விரைவில் மகேஷ் பாபுவை வைத்து பிரம்மாண்டமான படத்தை இயக்க உள்ளார் ராஜமௌலி.

இவரின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையில் உருவாகும் இப்படம் ஆப்ரிக்க காடுகள் பின்னணியில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் முக்கிய கேரக்டரில் பிரபல ஹாலிவுட் நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்ஒர்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் ‛தோர்’ மற்றும் ‛அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட ஹாலிவுட் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஹிட்டான மலையாள பட ரீமேக்கில் எஸ் ஜே சூர்யா.; இயக்குனர் இவரா?

சூப்பர் ஹிட்டான மலையாள பட ரீமேக்கில் எஸ் ஜே சூர்யா.; இயக்குனர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2018 மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஞான் பிரகாசம்’. (NJAN PRAKASAN) இந்த படத்தில் பகத் பாசில் நாயகனாக நடித்திருந்தார்.

பிரபல நடிகர் சீனிவாசன் திரைக்கதை எழுத சத்தியன் அந்திகாட் என்பவர் இயக்கியிருந்தார்.

தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர்.

‘வாலு’ & ‘ஸ்கெட்ச்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் சந்தர் இந்த படத்தை தமிழ் ரீமேக் செய்ய உள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆஹா தமிழ் என்ற பிரபல ஓடிடி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

எனவே இது பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

JUST IN ‘சூர்யா 42’ WARNING : எடுத்துட்டா நல்லது இல்லன்னா… – ஞானவேல் ராஜா

JUST IN ‘சூர்யா 42’ WARNING : எடுத்துட்டா நல்லது இல்லன்னா… – ஞானவேல் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் 42 படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

இதில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த படம் பான் இந்திய படமாக 10 மொழிகளில் உருவாகுகிறது.

சூர்யா 42வது பட மோஷன் போஸ்டர் 09-09-2022 அன்று வெளியானது.

3டி டெக்னாலஜியில் இப்படம் உருவாகி வருகிறது. சரித்திர கதைக்களம் கொண்ட இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமரத்தார் ஆகிய கேரக்டர்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் முட்டுக்காடு என்ற இடத்தில் இதன் ஷூட்டிங் தொடங்கியது. பின்னர் கோவா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்பட அறிவிப்பு வெளியானது முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவானது.

இந்தப் படம் தொடர்பான ஷூட்டிங் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளங்களில் வெளியாகின.

இந்த நிலையில் இப்பட தயாரிப்பு நிறுவனம் ஓர் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்… “இப்படத்தை ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி உருவாக்கி வருகிறோம். எனவே இந்த படம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை யாரும் வெளியிட வேண்டாம்.

மீறி வெளியிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். படம் தொடர்பான வீடியோக்களை நீங்கள் வெளியிட்டிருந்தால் உடனே உங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து நீக்கி விடவும்” எனவும் அதில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

suriya 42

More Articles
Follows