தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அட்லி கலந்துக் கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது….
இந்தப் படம் உருவாக இருவர் தான் காரணம். என் அண்னன், என் தளபதி விஜய்,
தெறி படத்தில் 4 சண்டைக் காட்சிகள் இருக்கும் மெர்சல் படத்தில் 13 சண்டைக் காட்சிகள் உள்ளன.
விஜய் அண்ணா அதிகபட்ச உழைப்பைத் தந்துள்ளார். ஒரு காட்சியில் 3000 மக்களுடன் படம்பிடித்தேன்.
அவரது ரசிகர்களை திருப்திபடுத்த அவர் போடும் முயற்சியைக் கண்டு கண் கலங்கியிருக்கிறேன்,
படத்தின் வசனங்கள் நன்றாக இருந்தால் அதற்கு காரணம் வசனகர்த்தா ரமணகிரி வாசன் தான்.
விஜய் சாருக்கு 3 வேடங்களா என கேட்காதீர்கள். ஆனால் 3 கதாநாயகிகள் இருக்கின்றனர்.
வடிவேலுவின் கதாபாத்திரம் உணர்ச்சிகரமானதாக இருக்கும். மணிவண்ணன் சாரைப் போல அட்டகாசமாக நடித்திருக்கிறார்.
தமிழர்களின் அடையாளம், பாரமரியம், கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றியே படத்தின் கதை இருக்கும்.
படத்தின் 100வது நாள் விழாவில் படத்தைப் பற்றி இன்னும் பேசுவேன்.” இவ்வாறு அட்லி பேசினார்.
Director Atlee speech about Vijay risk in Mersal movie