தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் : லட்சுமி ராமகிருஷ்ணன், சுபுலட்சுமி பாட்டி, நிதின் சத்யா, ரோபா சங்கர் மற்றும் பலர்.
இசை : கே
ஒளிப்பதிவு : இம்ரான் அஹ்மது
படத்தொகுப்பு : ரெஜித் கே.ஆர்.
இயக்கம் : லட்சுமி ராமகிருஷ்ணன்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : டேஹ் எண்டர்டெயின்மென்ட் வென் கோவிந்தா
கதைக்களம்…
சினிமாத்தனம் இல்லாத படங்கள் எப்போதாவது அரிதாக வரும். அந்த வகையில் வந்திருக்கும் அரிதான அம்மணி இவள்.
‘ஜீ தமிழ்’ டிவியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற வாலாம்பா பாட்டியின் வாழ்க்கையின் பதிவுதான் இது.
அரசு பொது மருத்துவமனையில் துப்புறவுத் தொழிலாளி (ஆயா)வாக வேலை பார்க்கிறார் சாலம்மா.
இவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். மூத்த மகனுக்கு 10 வயதாகும்போதே கணவர் இறந்து விடுகிறார்.
வளர்த்த மகளோ ஒரு ரெளடியை காதலித்து ஓடி விடுகிறாள்.
மூத்த மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயின்ட்டர்.
இளைய மகன் மனைவியின் பேச்சுக்கு ஆடும் ஆட்டோ டிரைவர்.
இப்படியான இவரது வாழ்க்கையில் கடன் வாங்கி ஒரு சொந்த வீடு கட்டுகிறார்.
அதனை கட்டமுடியாமல் தவிப்பதால் வேலையை விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு கட்ட நினைக்கிறார்.
அதன்பின் ஒரு இக்கட்டான சூழநிலையில் சுபுலட்சுமி பாட்டியை சந்திக்கிறார். அவரால் இவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் உருவாகிறது.
அதனை படு யதார்த்தமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் சாலம்மா லட்சுமி ராமகிருஷ்ணன்.
கதாபாத்திரங்கள்…
பெரிய நட்சத்திரங்களின் அம்மாவாக நடித்தவர் என்ற போர்வையில்லாமல், தன்னால் எப்படியும் நடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
குடிசைப் பகுதி ஜனங்களின் வாழ்க்கையை ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார் லட்சுமி.
பணம்தான் இன்றைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதையும் நாசுக்காக சொல்லியிருக்கிறார்.
இந்த சாலம்மாவுக்கே சவால் விடும் கேரக்டரில் நடித்துள்ளார் 80 வயதான பாட்டி சுபுலட்சுமி.
பாட்டு பாடிக் கொண்டு சின்ன சின்ன விஷயங்களை இவர் செய்யும்போது, ஒரு குழந்தைத்தன்மை இவரிடம் நிழலாடுகிறது.
இவரது துறு துறு நடிப்பு, பலருக்கு தங்கள் பாட்டியை நினைவு படுத்தலாம்.
எமதர்மன் ‘ரோபோ’ சங்கரின் குத்துப் பாடலுக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.
நிதின்சத்யாவும் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
இம்ரானின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
“மழை இங்கில்லையே வெயிலும் இல்லையே…. வானவில் வந்ததே…”, “நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளைகள் தானடா…”, “லைப்பு மச்சான் மச்சான்…”, ஆகிய பாடல் வரிகளில் இன்றும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கே-யின் இசை உணர்வு பூர்வமான காட்சிகளுக்கு உயிரூட்டியிக்கிறது.
இயக்குனர் பற்றிய பார்வை…
ஒரு இயக்குனராகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு படம் மெருகேறி வருகிறார்.
படத்தின் வசனங்கள் பல இடங்களில் பலத்த கைத்தட்டலை பெறுகிறது. அவற்றில் சில…
- “வலையில மீன் மாட்டட்டும் அப்புறம் குழம்பு, வறுவல பத்தி முடிவு பண்ணலாம்…”
- “கண்ண மூடி போயிட்டா அமைதியா போறமா, ஆரவாரமா போறமா…ன்னு யாருக்குத் தெரியும்…?”
- “நம்ம நாட்டு பிரதமரே குப்பை பொறுக்கதான் சொல்றார்டி….”
- இந்த வெளிச்சம் போன நிழல் கூட சொந்தமில்லை…”
அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்தாலும் இறந்தாலும் கைநீட்டும் ஊழியர்களின் அவல நிலையை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.
இவைகளை விட பெற்ற பிள்ளைகளை மலைபோல நம்பும் பெற்றோருக்கு சரியான பாடம் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
அம்மணி… அவசிய கண்மணி