தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மாசு என்ற மாசிலாமணி படத்திற்காக நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இணைந்து பணியாற்றினர்.
இப்படம் படுதோல்வியை சந்திக்கவே, சூர்யா தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.
விக்ரம் குமார் இயக்கிய 24 படம் சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
இதனையடுத்து, ஹரி இயக்கத்தில் சிங்கம் 3 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கி வரும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யா ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம்.
ஆனால் அது என்ன மாதிரியான கேரக்டர் என்பது மட்டும் படு ரகசியமாம்.