தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் ‘விருமன்’.
இதில் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது.
இப்படத்தின் ட்ரைலரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார்.
#விருமன் பட விழாவில் நடிகை அதிதி ஷங்கர் பேசும்போது…
என்னுடைய ஆசை கனவு அனைத்தும் தரையிலிருந்து திரையில் வருவது தான். அது நிறைவேற துணையாக இருந்த அப்பா, அம்மா மற்றும் என்னுடன் பிறந்த சகோதரன், சகோதரிக்கு நன்றி.
இவ்வளவு பெரிய வாய்ப்பளித்த 2D நிறுவனம் சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜா சார் அவர்களுக்கு நன்றி. தேசிய விருது பெற்றதற்கு சூர்யா சாருக்கு வாழ்த்துக்கள்.
என்னை தேன்மொழியாக மாற்றிய இயக்குனர் முத்தையாவிற்கு நன்றி. முத்தையா மிகவும் நேர்மையான மனிதர். வேலையில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார். அவர் ஓவ்வொரு காட்சியை விளக்கும் போதும் அந்த கதாபாத்திரமாகவே நடித்துக் காட்டுவார். அப்போது உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவர் கண்கள் கலங்கும்.
என்னுடைய அறிமுக படத்தில் யுவனுடன் பாடியதில் மிகவும் மகிழ்ச்சி. நான் யுவனின் மிக பெரிய ரசிகை. என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்த தங்கதுரைக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் செல்வா சார் என்னை மிக அழகாக திரையில் காட்டியுள்ளார்.
கார்த்தியின் நடிப்பை ஒவ்வொரு முறை திரையில் பார்க்கும் போதும் பிரமிப்பாக இருக்கும். அவருடன் இணைந்து நடிப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. அவர் எனக்கு நிறைய கற்றுத் தந்தார்.
என்னை ஒரு புது முகம் போல் அவர்கள் நடத்தவில்லை. 2D நிறுவனம் முழுவதுமே என்னை அவர்களின் குடும்பப் பெண் போன்று தான் பார்த்துக் கொண்டார்கள்.
*அப்பா பலரை கேமரா முன் நிறுத்திப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் முதல் முறையாக கேமரா முன் நின்றபோது எப்படி உணர்ந்தீர்கள்?*
நான் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் வரை பயத்துடன் தான் இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால், முதல் காட்சியே பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது. ஷோபி மாஸ்டர் தான் அந்த பாடலுக்கு நடனம் கற்றுத் தந்தார். அதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது.
சினிமா பின்புலம் இருக்கக் கூடிய ஒரு மிகப்பெரும் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வருவோரை மக்கள் அதிகம் கவனிப்பர். அப்படியான அழுத்தங்களை நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்?
நான் எந்த அழுத்தத்தையும் உணரவில்லை. என் அம்மா அப்பா இருவரும் எனக்கு ஊக்கமளித்தார்கள். ஆனால், நான் இந்த சினிமாத் துறையில் நிலைத்திருப்பது என்னுடைய கடின உழைப்பால் மட்டுமே இருக்கவேண்டுமென ஆசைப்படுகிறேன் என்றார்.
‘விருமன்’ பட விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசும்போது..
என்னுடைய மகளுக்கு வாய்ப்புக் கொடுத்த 2டி நிறுவனத்திற்கும், சூர்யா, கார்த்தி, ஜோதிகா மற்றும் 2டி நிறுவனத்தைச் சார்ந்த அத்தனை பேருக்கும் நன்றி. இப்படத்தில் 2டி நிறுவனம் தயாரிக்கிறது என்று கேட்டதும், மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால், தொடர்ந்து நல்ல படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
தேசிய விருது பெற்ற சூர்யாவிற்கு இந்த நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்த்தியை திரையில் பார்த்தாலே பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொள்கின்ற தரமான நடிகர். அவருடன் அதிதி நடிப்பதில் மகிழ்ச்சி. அவர் சகோதரர் போல அவரும் கூடிய விரைவில் தேசிய விருது வாங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
கஞ்சா பூ கண்ணாலே, மதுரை வீரன் போன்று பல கிராமத்து பாடல்கள் வந்துவிட்டது. இருந்தாலும், அதில் புத்துணர்ச்சி தருவது சிறப்பான விஷயம். ரிதமில் புதிதாக ஏதோ செய்கிறார் யுவன். அருமையாக இசையமைக்கும் யுவனுக்கு வாழ்த்துகள்.
முத்தையாவின் படங்களைப் பார்த்ததில்லை. ஆனால், அவருடைய படங்களில் பெண்களுடைய கதாபாத்திரத்தை அருமையாக சித்தரிப்பார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
எனது மகள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி. செல்வ குமார் ஒளிப்பதிவை ஆழமாக உணர முடிந்தது. கலை இயக்குனரின் பணியும் பாராட்டுக்குரியது.
என் மகளைப் பற்றி நான் என்ன கூறினாலும், ஒரு அப்பா தன் பெண்ணைப் பற்றி பெருமையாகக் கூறுவது போலத்தான் இருக்கும். ஆனால், ஒரு இயக்குனராக அவரை கவனத்திருக்கிறேன். அவர் ஒரு சிறந்த பொழுதுபோக்காளர். அவர் மேன்மேலும், திறமையை வளர்த்துக் கொள்வது, முத்தையா மாதிரி இயக்குனர் கைகளிலும், ரசிகர்கள் கைகளிலும் தான் இருக்கிறது.
இந்த வாய்ப்புக் கொடுத்த தங்கதுரை, பத்திரமாக பார்த்துக் கொண்ட 2டி ராஜசேகர், பாபி அவர்களுக்கும் நன்றி.
உங்களைப் பார்த்து இயக்குனராக வேண்டும் என்று பலரும் நினைத்திருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் நிறைய அறிவுரை வழங்கியிருப்பீர்கள். ஆனால், உங்கள் மகளுக்கு நீங்கள் கூறிய அறிவுரை என்ன? என்ற கேள்விக்கு..
என் மகளுக்கு நான் எந்த அறிவுரையும் வழங்கவில்லை. மேலும், அவருக்கு அறிவுரை வழங்குவது பிடிக்காது. அதுமட்டுமில்லாமல், இக்காலத் தலைமுறையினர் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் என்றார்.
நாங்கள் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதிதி அவருடைய இருக்கையில் அமைதியாக இல்லாமல், ரோலக்ஸ் என்று கூச்சலிட்டும், கைத்தட்டி ஆரவாரத்தோடும் இருக்கிறார். அவர் என்ன வாலா? என்ற கேள்விக்கு..
அவர் இப்போது தான் நடிகை. அதற்கு முன் எல்லோரும் போல கைத்தட்டி ரசிக்கும் ரசிகை என்றார்.
இப்படத்தின் டிரைலர் எதிர்ப்பார்த்ததைவிட சிறப்பாக இருக்கிறது. இப்படத்தின் வெற்றித் தெரிகிறது” என்றார் ஷங்கர்.
Director Shankar speech at Viruman Audio launch