தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் அஸ்வின்.
இதனையடுத்து பல ஆல்பங்களில் அவருக்கு சான்ஸ் வந்தன. அனைத்தும் ஹிட்டாகியது.
எனவே சினிமா வாய்ப்புகளும் அஸ்வினுக்கு வரத்தொடங்கியது.
இவர் நாயகனாக நடித்த என்ன சொல்லப் போகிறாய் படம் அண்மையில் வெளியாகியது. ‘
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் ஓவராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
எனக்கு கதை பிடிக்கவில்லை என்றால் உறங்கிவிடுவேன். நான் 40 இயக்குனர்களிடம் கதை கேட்டேன். அவை பிடிக்கவில்லை எனவே தூங்கி விட்டேன்.
நான் அழகாக இருப்பதாக நினைத்தால் என் பெற்றோருக்கு நன்றி சொல்லுங்கள் என் ஏதோ உளறிவிட்டார்.
அவரது இந்த பேச்சு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால்தான் படத்தின ரிலீசும் நீண்ட நாட்கள் தாமதம் ஆனது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில்… ’பழிவாங்குவதா? நான் மிகவும் சோம்பேறி, நான் இங்கேயே உட்கார்ந்து கொள்கிறேன், கர்மா உன்னை…. F…. ’ என்று பதிவு செய்துள்ளார்.
ஆங்கில வார்த்தையின் அந்த முதல் எழுத்தை பார்க்கும்போதே அது ஏதோ கெட்ட வார்த்தையை குறிப்பதாக உள்ளது.
அந்த வார்த்தை முழுதாக தெரியாதபடி அழித்து இருக்கிறார்..
இந்த மோசமான வார்த்தையை அஸ்வின் ஏன் பயன்படுத்தினார்? இவருக்கு இது தேவையா என நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
Ashwin recent insta post creates controversy