இணையத்தை கலக்கும் ‘குக் வித் கோமாளி’-கள் அஸ்வின் – புகழின் புதிய பட டீசர்

இணையத்தை கலக்கும் ‘குக் வித் கோமாளி’-கள் அஸ்வின் – புகழின் புதிய பட டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர்.

அதில் படு பிரபலமான அஸ்வின் மற்றும் புகழ் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் “என்ன சொல்ல போகிறாய்”.

இந்தப்படம் மூலம் அஸ்வின்குமார் நாயகனாக சினிமாவில் அறிமுகமாகிறார்.

ஏற்கெனவே ஓ மணப்பெண்ணே படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்திருந்தார் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தை டிரைடண்ட் ஆர்ட் ரவீந்திரன் தயாரிக்க ஹரிஹரன் என்பவர் இயக்குகிறார்.

தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா நாயகிகளாக நடித்துள்ளனர்.

இவர்களுடன் டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம் நாதன் கையாள்கிறார். விவேக்-மெர்வின் இசை அமைக்கின்றனர்.

இந்த படத்தின் டீசர் நவம்பர் 10ல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.

Ashwin kumar’s enna solla pogirai movie official teaser is on trending

ஆஸ்கர் நாயகன் ரஹ்மானுக்கு ரஜினி படங்கள் கொடுத்த அவஸ்தைகள்

ஆஸ்கர் நாயகன் ரஹ்மானுக்கு ரஜினி படங்கள் கொடுத்த அவஸ்தைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய மற்றும் தமிழ் சினிமாக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த ஆஸ்கர் விருதுகளை ஒரே நேரத்தில் 2 விருதுகள் பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான்.

இவருக்கும் நடிகர் ரஜினிக்கும் நல்ல நட்பு உண்டு.

இந்த நிலையில் ஒரு சேனலுக்கு ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டியில ரஜினி படங்களுக்கு இசையமைத்த அனுபவர் குறித்து பேசியுள்ளார். அதில்…

1990களில் ரஜினி போன்ற முன்னணி நாயகர்களின் படங்களில் பணியாற்றியது மிக கடினமான இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் படங்கள் அந்த வருட தீபாவளிக்கே ரிலீஸ் என அறிவிப்பார்கள்.

காலம் குறைவாக இருப்பதால் பின்னணி இசையும், பாடல்களையும் சீக்கிரம் தயார் செய்ய தன்னை இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் வற்புறுத்துவார்கள்.

அப்போதெல்லாம் அடிக்கடி பவர்கட் ஏற்படும். ஜென்ரேட்டர் உதவியுடன் பல இரவுகள் கடினமாக உழைத்தேன்.

ரஜினிகாந்த் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய சூழ்நிலை.

மற்ற நடிகர்களின் படங்களை விட அவரது படங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டிய சங்கடங்கள் ஏற்பட்டது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Rahman says working on Rajnikanth movies back in the day was hell

1947ல் கிடைத்த பிச்சை.. 2014ல் கிடைத்த சுதந்திரம்.; கங்கனா பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

1947ல் கிடைத்த பிச்சை.. 2014ல் கிடைத்த சுதந்திரம்.; கங்கனா பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் பிரபலமான நடிகை கங்கணா ரணாவத் சமீபத்தில் மத்திய அரசு வழங்கிய பத்ம விருதை பெற்றார்.

இதனிடையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியபோது…

‘‘1947 முன்பு இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சியாக தான் நடைபெற்றது காங்கிரஸ் ஆட்சி. 1947-ம் ஆண்டு கிடைத்தது பிச்சை தான். உண்மையில் இந்தியாவுக்கு 2014ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது.’’ என பேசினார்.

அதாவது 2014 முதல் நரேந்திர மோடி தலைமையில் பிஜேபி ஆட்சி உருவானது குறித்து பேசியுள்ளார்.

கங்கனாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆம் ஆத்மி தேசிய செயல் தலைவர் பிரீத்தி என்பவர் மும்பை காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

மேலும் காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தன் ட்விட்டர் பக்கத்தில்..

“கங்கனா ரணாவத்தின் கருத்து வெட்கக்கேடு. அவர் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வாலபாய் படேல் ஆகியோரை அவமதித்துள்ளார்.

மேலும் பகத் சிங் மற்றும் சந்திரசேகர் ஆசாத் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை இழிவுபடுத்தியுள்ளார்.

கங்கனா ரணாவத்துக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” எனக் கூறினார்.

Actress Kangana says 1947 was ‘alms’ and India got ‘real freedom’ in 2014

திருமணத்திற்கு ரெடியான தலைவி பட நாயகி கங்கனா ரணாவத்

திருமணத்திற்கு ரெடியான தலைவி பட நாயகி கங்கனா ரணாவத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் நடிகைகளில் பிரபலமானவர் நடிகை கங்கனா ரணாவத்.

சமீபத்தில் கூட தேசிய விருது வழங்கும் விழா நிகழ்வில் விருது பெற்றார்.

விஜய் இயக்கிய தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தன் திருமணம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில்… “இன்னும் சில ஆண்டுகளில் ஒரு மனைவியாகவும், தாயாகவும் இருப்பேன்.” என பேசியுள்ளார்.

தன் காதல் கணவர் யார்? என்பதை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

Kangana Ranaut talks about her marriage

38 வயதிலும் காதல் வரும்..: காதலனை கைபிடித்த நடிகை சந்திரா

38 வயதிலும் காதல் வரும்..: காதலனை கைபிடித்த நடிகை சந்திரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரிய திரை, சின்னத்திரை என இரண்டு திரையிலும் நடித்தவர் நடிகை சந்திரா லட்சுமணன்.

இவர் தமிழில் ஸ்ரீகாந்த் உடன் ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவி உடன் நடித்த தில்லாலங்கடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

சினிமா வாய்ப்புகள் குறையவே கடந்த 16 ஆண்டுகளாக பல்வேறு தமிழ் சீரியல்களில் நடித்து வந்தார்.

வசந்தம், மகள், துளசி, சொந்த பந்தம், கோலங்கள், காதலிக்க நேரமில்லை, பாசமலர் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

அதன்பின்னர் மலையாளத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவர் நடித்து வரும் ஸ்வந்தம் சுஜாதா என்ற மலையாள சீரியல் தற்போது பிரபலம்.

38 வயதாகும் இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் நடிகை சந்திராவுக்கும், அவருடன் நடித்த நடிகர் டோஷ் கிறிஸ்டிக்கும் இடையே காதல் நெருக்கம் உருவானது-

இதனையடுத்து இவர்கள் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்தனர்.

இவர்களின் திருமணம் எளிமையான முறையில் கேரளாவில் உள்ள ஒரு ரிசார்ட் நடைபெற்றது.

நாமும் மணமக்களை வாழ்த்துவோம்.

Serial actress Chandra Lakshman gets married

சிம்பு ரசிகர்களுக்காக ‘வெந்து தணிந்தது காடு’ அப்டேட் கொடுத்த கௌதம் மேனன்

சிம்பு ரசிகர்களுக்காக ‘வெந்து தணிந்தது காடு’ அப்டேட் கொடுத்த கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

கௌதம் மேனனின் ஆஸ்தான கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிய கலை இயக்குனராக ராஜிவ் நாயரும் பணிபுரிகின்றனர்.

இவர்கள் கூட்டணியில் எழுத்தாளர் ஜெயமோகன் இணைந்துள்ளார்.

ஏற்கனவே 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் ஜெயமோகன்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூர் சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் மும்பையில் நடக்க உள்ளது.

தற்போது இப்பட ஷூட்டிங் லொக்கேஷன்களுக்காக எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் கௌதம் மேனன்.

Vendhu Thanindhathu kaadu movie shooting spot picture

More Articles
Follows