தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன் லைன்.. பெரும் நட்சத்திர பட்டாளங்களுடன் கிராமத்து கதையில் அண்ணன் தங்கை சென்டிமெண்ட்
கதைக்களம்…
சூரக்கோட்டை ஊராட்சி பிரசிடெண்ட் காளையன் (அண்ணாத்த ரஜினி). இவரின் தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்). தங்கை மீது உயிருக்கு நிகரான பாசம்.
ஊரில் எவன் ரவுடியிசம் செய்தாலும் அடிதடி என இறங்குகிறார் ரஜினி. இதனால் அடிக்கடி வழக்காகிறது. அப்போது வழக்கறிஞர் நயன்தாராவின் பழக்கம் ஏற்படுகிறது. இருவருக்கும் காதலும் கூட.
ரஜினியின் முறைப்பெண்கள் குஷ்பூ மீனா. இவர்களில் ஒருவரை திருமணம் செய்தால் மற்றவரின் மனது காயப்படுமே என்பதால் இருவரையும் மணக்க மறுக்கிறார். இதனால் மீனா லிவிங்ஸ்டனை மணக்கிறார். குஷ்பூ பாண்டியராஜனை மணக்கிறார்.
நீதான் என்னை திருமணம் செய்யவில்லை. என் தம்பியை உன் தங்கைக்கு திருமணம் செய்து வை. நம் உறவு ஒட்டியிருக்கும் என்கின்றனர் குஷ்பூ மற்றும் மீனா… குஷ்பூவின் தம்பி சதீஷ். மீனாவின் தம்பி சத்யன்.
இதனிடையில் கீர்த்திக்கு வேறு ஒரு பிரச்சினை வருகிறது.
அது என்ன பிரச்சினை.? யாரை திருமணம் செய்தார் கீர்த்தி. யார் பிரச்சினை செய்தார்கள்? தங்கைக்கு பிரச்சினை கொடுத்தவரை ரஜினி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்..
ரஜினிக்கு வயது ஏற ஏற இளமை துள்ளலும் அதிகரிக்கிறது எனலாம். இதில் அண்ணாமலை அருணாச்சலம் பட ரஜினிகளை பார்க்கலாம். பேட்ட தர்பார் படங்களை விட இதில் செம ஸ்டைலாக மாஸாக இருக்கிறார்.
முதல் பாதியில் தனக்கே உரித்தான பழைய குறும்புத்தனத்துடன் ரஜினி சேட்டை செய்துள்ளார். அதே சமயம் நிறைய இடங்களில் போகிற போக்கில் அட்வைஸ் பூக்களை சிதறவிட்டுள்ளார். இரண்டாம் பாதியில் அனல் தெறிக்க ஆக்சன் காட்சிளில் அதகளம் செய்துள்ளார். கூடவே வில்லன்களை பதறவைத்துள்ளார்.
வழக்கமாக ஹீரோவுக்கு உதவும் கேரக்டர் நயன்தாராவுக்கு இதிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அவரும் அதை சிறப்பாக செய்ய முயற்சித்துள்ளார்.
படத்தில் ரஜினிக்கு நிகரான வேடம் கீர்த்திக்கு. முதல் பாதியில் கலகலப்பான கீர்த்தி. இரண்டாம் பாதியில் கலங்கிய கீர்த்தி. அண்ணனுக்காக உருகும்போதும் அழ வைக்கிறார். ஆனால் ஓவராக உடல் இளைத்து காணப்படுகிறார். ரஜினி முருகனில் பார்த்த கீர்த்தி இப்போது இல்லை.
குஷ்பூ அறிமுகமாகும்போது கொண்டையில் தாழம்பூ.. மீனா அறிமுகமாகும் போது தில்லானா தில்லானா பாடல்கள் ஒலிக்கிறது. அழகான திறமையான முறைப்பெண்களுக்கு இன்னும் அதிகப்படியான வாய்ப்பு கொடுத்திருக்கலாம். மற்றபடி அழகாக வந்து கொஞ்சம் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளனர்.
ரஜினியுடன் பச்சைக்கிளி கேரக்டரில் ஒட்டியே வருகிறார் சூரி. ஆங்காங்கே கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.
கிராமத்து வில்லனாக பிரகாஷ்ராஜ் ஓகே. பெரிதாக வாய்ப்பில்லை. சிட்டி வில்லன்களாக ஜெகபதிபாபு மற்றும் அபிமன்யுசிங். இருவரும் வடஇந்திய வில்லன்களை போல கச்சிதம்.
இவர்களுடன் நிறைய நட்சத்திரங்கள்… வேலராமமூர்த்தி, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கொளப்புள்ளி லீலா, அர்ஜய், கபாலி விஸ்வந்த், பாலா, ரெடின் கிங்கிஸ்லி, (மறைந்த) நடிகர் தவசி, ஜார்ஜ் மரியன் என கோடம்பாக்கத்தின் பாதி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரஜினி படத்தில் இருந்தோம் என இவர்கள் சொல்லிக் கொள்ளலாம்.
டெக்னீஷியன்கள்..
இமான் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ஆல்ரெடி சூப்பர் ஹிட்.
பொதுவாக ஒரு படத்திற்கு ஒரு தீம் மியூசிக் தான் ஒலிக்கும். இதில் 3 வகையான தீம் மியூசிக் அமைக்கப்பட்டுள்ளது. அதனை கேட்கும்போது ரசிகர்களின் கரவொலியால் தியேட்டர்கள் அதிருகிறது.
எஸ்பிபி பாடிய அண்ணாத்த அண்ணாத்த பாடல் முழுக்க முழுக்க ரஜினி ராஜ்யம்தான். இன்னா ஸ்டைலு.. அப்படியொரு எனர்ஜியான பாடல் அது.
சார காத்து பாடல் காதல்மயம். திகட்டாத அழகான மெலோடி. மருதாணி பாடல் இனி திருமண திருவிழாக்களில் ஒலிக்கும்.
வா சாமீ.. பாடல் இனி ரஜினி ரசிகர்களின் தேசி(ய)த்து) கீதமாகும்.
வெற்றி ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்புல். படம் முழுக்க எப்போதும் திருவிழா கோலம்தான். படம் பிடிக்கவே ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பார் எனத் தெரிகிறது. மதுரை கிராமத்து அழகும் சரி.. கொல்கத்தா ஆக்சன் காட்சிகளும் சரி.. கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.
இயக்கம் பற்றி…
சிவா படம் என்றால் எப்போதும் குடும்ப சென்டிமெண்ட் உடன் கிராமத்து மண் வாசனை கலந்தே இருக்கும். ஆனால் ரஜினிக்கான கதையை இன்னும் பட்டைய தீட்டியிருக்கலாம். வேதளாம், விஸ்வாசம் ஆகிய படங்களில் பம்பாய் கொல்கத்தா சென்றது போல இதில் கொல்கத்தா செல்கிறார். அவருக்கு என்ன ராசியோ.? தெரியல.
ஒருவேளை ரஜினியை பம்பாய் அழைத்து சென்றால் இது பாட்ஷா போல வந்துவிடும் என நினைத்தாரோ என்னவோ.? தன்னுடைய முந்தைய படங்களில் உள்ள சக்ஸ்ஸ் சென்டிமெண்ட் காட்சிகளை இதிலும் கொடுத்துள்ளார்.
ஆனால் படத்தில் டயலாக் செம. அதுவும் ரஜினி பேசும் போது இது பன்ச் டயலாக் ஆகிறது. நாம வாழும் போது பலரை சிரிக்க வைக்கனும். இறக்கும் போதும் பலரை அழ வைக்கனும். இதான் வாழ்க்கை.. என்பதுபோல நிறைய தத்துவ வசனங்களை சிதறவிட்டுள்ளார் சிவா.
ரஜினி என்ற மாபெரும் நட்சத்திரத்துடன் ஒரு பட்டாளத்தை வைத்து திணறியிருக்கிறார் சிவா எனத் தெரிகிறது, இடைவெளி காட்சியில் பாட்ஷா ஸ்டைலில் ஒரு பன்ச் வைத்திருந்தால் பவர்புல்லாக இருந்திருக்கும்.
ஆக.. ரஜினிக்கு ஒரு பேமிலி சென்டிமெண்ட் படத்தை தன் பாணியில் கொடுத்துள்ளார் சிவா… இல்லத்தரசிகளுக்கு இது இனிய தீபாவளி விருந்து.
Rajinis Annaatthe review rating