தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா விமர்சனங்களில் 100க்கு 90 படங்களை நெகட்டிவ்வாக விமர்சித்து பெயர் பெற்றவர் மாறன்.
இவர் எப்போதும் நீலநிற சட்டை அணிந்தபடியே வீடியோவில் வருவதால் ப்ளூ சட்டை மாறன் என்ற பெயர் பெற்றார்.
இவரை உசுப்பேத்தி விட இப்போது படம் இயக்குமளவிற்கு அடுத்த கட்டத்திற்கு தாவியுள்ளார்.
ஆதம் பாலா தயாரிப்பில் நீல சட்டை மாறன் இயக்கியிருக்கும் முதல் படம் ‘ஆன்டி இண்டியன்’.
இந்த படத்தின் போஸ்டரில் குரங்கு ஒன்று கழுத்தில் காவித்துண்டுடன் இருக்கும் படம் இடம் பெற்றிருந்தது.
மேலும் மாறனின் படத்தைப் போட்டு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றும் அதில் இருந்தது.
இந்த நிலையில் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என ஏப்ரல் 5-ஆம் தேதி மத்திய தணிக்கைக்குழு வாரியம் கூறிவிட்டதாம்.
மறுதணிக்கைக்கு படத்தை அனுப்பியதில், சான்றிதழ் தரலாம், ஆனால் 38 இடங்களில் கத்திரி போட வேண்டும் என கூறினார்களாம்.
இதனால் ‘ஜனநாயகத்தின்’ கடைசி நம்பிக்கையான உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர் மாறன்.
ஒருவழியாக தற்போது அவருக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி மூன்று நிபந்தனைகளுடன் U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
‘தடைகளைத் தாண்டி’ விரைவில் தியேட்டர்களில் படம் ரிலீஸ் என இன்றுமுதல் புரமோஷனை தொடங்கி பிரஸ்மீட் ஒன்றையும் வைத்தார் ப்ளூ சட்டை மாறன்.
அப்போது சென்சாரில் தனக்கு ஏற்ப்பட்ட பிரச்சினைகள் குறித்து பேசினார்.
அதன்பிறகு செய்தியாளர்கள் ‘ஆன்டி இண்டியன்’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா? எனக் கேட்டனர்.
அதாவது ரஜினியின் ‘அண்ணாத்த’ & சிம்புவின் ‘மாநாடு’ படத்துடன் மோத வாய்ப்பு இருக்கா? என மறைமுகமாக கேட்டனர்.
எந்த ஹீரோவுடனும் மோத தயார். அதற்கான படம் தான் இது ‘ஆன்டி இண்டியன்’.
ஆனால் சரியான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காது. பெரிய படங்களையே தியேட்டர்கள் வாங்குவார்கள்.
எனவே பொறுமையாக இருந்து அதிக தியேட்டர்கள் எண்ணிக்கையில் படத்தை ரிலீஸ் செய்வோம்.
தியேட்டர் ரிலீசுக்கு பிறகு ஓடிடி தளத்தில் வெளியிடுவோம்.” என ‘ஆன்டி இண்டியன்’ தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பதிலளித்தனர்.
Blue Sattai Maran’s Anti Indian is ready for release