‘ஆன்டி இண்டியன்’ படத்தை பார்த்த பாரதிராஜா பாக்யராஜ் சீமான் சேரன் என்ன சொன்னாங்க.?

‘ஆன்டி இண்டியன்’ படத்தை பார்த்த பாரதிராஜா பாக்யராஜ் சீமான் சேரன் என்ன சொன்னாங்க.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் *ஆன்டி இண்டியன்*..

சினிமா விமர்சகராக இருந்து, இயக்குநராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும் என்பதால் ரசிகர்கள், திரையுலகினர் என இருதரப்பினரிடமும் இந்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு மற்ற படங்களை விட அதிகமாகவே உள்ளது.

வரும் டிச-1௦ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சித் திரையிடலில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்த படத்தைப் பார்த்துவிட்டு பேசும்போது, “எடுக்கின்ற திரைப்படங்களை எல்லாம் இந்த ப்ளூ சட்டை மாறன் இப்படி நையாண்டி செய்து விமர்சனம் பண்ணி வருகிறானே.. இவன் ஒரு படம் எடுக்கட்டும் பார்க்கலாம் என நினைத்தேன்.. படத்தையும் எடுத்து விட்டான்.

நம்பிக்கை இல்லாமல் தான் இந்தப் படத்தை பார்த்தேன்..

ஏதாவது ஒரு இடத்திலாவது அவனுக்குப் பதிலடி தருவதற்கு இடம் கிடைக்குமா என எதிர்பார்த்தேன்..

ஆனால் அதற்கான வாய்ப்பை எனக்கு இந்தப் படம் தரவே இல்லை. இத்தனை நாட்கள் மற்ற திரைப்படங்களை விமர்சித்து வந்த ப்ளூ சட்டை மாறன், தான் அதற்கு தகுதியான நபர் தான் என நிரூபித்துவிட்டான் என்று கூறினார்

இயக்குநர் சேரன் படம் பற்றி கூறும்போது, “சமூக அவலங்களை ,சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை, மனிதனுக்குள் மதம் புகுந்து எப்படி ஆட்டிப்படைக்கிறது என்பதை அருமையான படைப்பாக கொடுத்துள்ளார். ஒரு விமர்சகராக இருந்து இயக்குநராக அவர் எடுத்திருக்கும் அற்புதமான, மிகச்சிறப்பான முயற்சி இது” என்றார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது,

இந்தப்படத்தை 18 நாட்களில் எடுத்துள்ளார்கள் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை. மதம் எந்த அளவுக்கு மனிதத்தைக் கொல்கிறது என அப்படியே தனது படைப்பில் காட்சிகளாகவும் உரையாடல்கள் மூலமாகவும் உணர்த்தியுள்ளார் மாறன்.

அதேசமயம் எந்த ஒரு சாராரைப் பற்றியும் குறிப்பிடும் படமாகவும் இது உருவாகவில்லை.

இசையமைப்பாளராகவும் மாறி இப்படத்திற்கு தேவையான பின்னணி இசையையும் சரியாகக் கொடுத்துள்ளார்..

இந்தப்படத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. படம் எல்லாராலும் பெரிதும் ரசிக்கப்படும்” என்றார்.

ப்ளூ சட்டை மாறன் பேசும்போது, “இந்த படத்தைப் பார்த்துவிட்டு உங்களது குறை நிறைகளை சொல்லுங்கள் என்று பாரதிராஜா, பாக்யராஜ், சேரன், சீமான் ஆகியோரிடம் கேட்டேன் ஆனால் படம் பார்த்துவிட்டு, சொல்வதற்கு குறை என ஒன்றுமே இல்லை என கூறிவிட்டார்கள்.

குறிப்பாக இயக்குர் இமயம் பாரதிராஜா என்னை பார்க்கும்போதெல்லாம் நீ ஒரு படம் எடுடா, உன் படத்தை நான் விமர்சிக்கிறேன் என்று கூறுவார்.. ஆனால் இப்போது விமர்சிப்பதற்கு ஒன்றுமே இல்லை என்று படத்தை பாராட்டியுள்ளார் கேட்கவே சந்தோசமாக இருக்கிறது.

இயக்குநர் சங்கத்தில் உள்ள அனைவரும் இந்த படத்தை பார்த்துவிட்டு படம் முடிந்ததும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்.

ரசிகர்களிடமிருந்தும் இதேபோன்ற பாராட்டு கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்

Celebrities reaction after watching Anti Indian

ஆர்யாவுக்கு ‘அயோத்யா’ அவார்ட்டு பார்ய்யா…; மகிழ்ச்சியில் ‘மகாமுனி’ குழு

ஆர்யாவுக்கு ‘அயோத்யா’ அவார்ட்டு பார்ய்யா…; மகிழ்ச்சியில் ‘மகாமுனி’ குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2019ல் வெளியான படம் மகாமுனி.

தமன் இசையமைத்த இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து இருந்தது. ரசிகர்களால் இந்த படத்திற்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது.

இதுவரை 9 சர்வதேச விருதுகளையும் இந்த படம் வென்றுள்ளது.

இந்த நிலையில் 15வது அயோத்யா திரைப்பட விழாவில் மகாமுனி படத்தில் நாயகனாக நடித்துள்ள ஆர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஆர்யா கூறியிருப்பதாவது..”அயோத்யா திரைப்பட விழாவின் 15ஆவது ஆண்டு விழாவில் மகாமுனியில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது மகிழ்ச்சி.

இயக்குனர் சாந்தகுமார், இசையமைப்பாளர் தமன், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு எனது நன்றிகள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த விருதால் மகாமுனி படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Arya wins best actor award at Magamuni film festival

மலையாள சூப்பர் ஸ்டார் படத்தில் ரம்யா பாண்டியன்

மலையாள சூப்பர் ஸ்டார் படத்தில் ரம்யா பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய மக்களை கவர்ந்த ‘ஜோக்கர்’ படம் மூலம் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் நடிகை ரம்யா பாண்டியன்.

அதன்பின்னர் மறைந்த இயக்குனர் தாமிரா இயக்கிய ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார்.

பின்னர் ‘குக் வித் கோமாளி, மற்றும்பிக் பாஸ் சீசன் 2’ ஆகிய டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

நடிகர் சூர்யா தயாரித்த ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படம் இவரது நடிப்பில் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த நிலையில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் மலையாளப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் நடிக்கிறார் ரம்யா.

இந்த படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என பெயரிட்டுள்ளனர். தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Actress Ramya Pandian to romance with Malayalam Super Star

தூசி தட்டப்படும் ‘துப்பறிவாளன் 2’.; இளையராஜா இசையில் இயக்குனராகிறார் விஷால்

தூசி தட்டப்படும் ‘துப்பறிவாளன் 2’.; இளையராஜா இசையில் இயக்குனராகிறார் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தயாரிப்பாளர் என விறுவிறுப்பாக இயக்கி வரும் விஷால் ‛துப்பறிவாளன் 2′ பட மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.

துப்பறிவாளன் முதல் பாகத்தை இயக்கிய மிஷ்கினே 2ஆம் பாகத்தையும் இயக்கி வந்தார். சில நாட்கள் லண்டனில் பட வேலையை துவங்கிய நிலையில் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் பிரச்சினை உருவானது.

இதனால் படத்திலிருந்து மிஷ்கின் விலக தற்போது விஷாலே இயக்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இந்த நிலையில் தற்போது துப்பறிவாளன் 2 படத்தை அடுத்தாண்டு 2022 ஏப்ரல் முதல் படப்பிடிப்பை லண்டனில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பில் ஒரு புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

Vishal’s Thupparivaalan 2 to resume shooting from April

சொந்தமாக படம் தயாரித்து நடிக்கும் அமீர்.; டைரக்டர் & ஹீரோயின் யார்..?

சொந்தமாக படம் தயாரித்து நடிக்கும் அமீர்.; டைரக்டர் & ஹீரோயின் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் இயக்குனர் என பன்முகம் கொண்டவர் அமீர்.

மௌனம் பேசியதே, பருத்திவீரன், ராம் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் அமீர்.

பின்னர் யோகி படத்தின் மூலம் ஹீரோவானார்.

ஆர்யா நடிப்பில் இவர் இயக்கவிருந்த சங்குதேவன் படம் என்னாச்சு? என்பதே தெரியவில்லை.

தனுஷின் வடசென்னை படத்தில் அமீர் நடித்த கேரக்டர் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளார் அமீர்.

இந்த படத்தை அதர்மம், பகைவன் ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் கிருஷ்ணன் என்பவர் இயக்க அமீருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

யுவன் இசையமைக்க ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தை அமீர் பிலிம் கார்ப்பரேசன் நிறுவனமும், ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Ameer’s next is with Ramesh Krishnan

கடமைக்கு அளவே இல்லையா கமல்.; தனிமைப்படுத்தி கொள்ளாமல் சூட்டிங்.. கேள்வி கேட்கும் சுகாதாரத் துறை

கடமைக்கு அளவே இல்லையா கமல்.; தனிமைப்படுத்தி கொள்ளாமல் சூட்டிங்.. கேள்வி கேட்கும் சுகாதாரத் துறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவரே அறிவித்தார்.

அதன்படி சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரேனாவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

அந்த சமயத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக அவரது தோழி நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். (ஆனால் ரசிகர்கள் பலருக்கு ரம்யா தொகுத்து வழங்கிய விதம் பிடிக்கவில்லை என்பது வேறுகதை.)

கொரேனா சிகிச்சைக்குப் பிறகு கடந்த (டிசம்பர்) 4ம் தேதி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் கமல்ஹாசன் என்பதை நம் தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

மருத்துவமனையில் இருந்து நேராக பூந்தமல்லியில் உள்ள பிக் பாஸ் அரங்கிற்குச் சென்று அங்கு சூட்டிங்கில் கலந்து கொண்டார்.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நபர்கள் ஒரு வாரத்திற்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அரசு விதிமுறை.

ஆனால் கமல்ஹாசன் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் நேரடியான படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

எனவே இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

TN Health Department to seek explanation from Kamal Haassan for flouting COVID norms

More Articles
Follows