EXCLUSIVE பாக்யராஜிடம் ஒரு கேள்வி; இந்த படங்கள் மீது எப்போ வழக்கு போடுவீங்க.?

EXCLUSIVE பாக்யராஜிடம் ஒரு கேள்வி; இந்த படங்கள் மீது எப்போ வழக்கு போடுவீங்க.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்ற பெயர் இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜீக்கு உண்டு.

தாம்பத்ய சமாச்சாரமாக இருந்தால் கூட அதை நகைக்சுவையாகவும் அதே நேரம் யாருடைய மனதையும் புண்படுத்தாத விதமாக திரைக்கதை அமைத்து தான் இயக்கிய படங்களில் காட்சியாக வைத்திருப்பார்.

சமீபத்தில் சில படங்களை பார்த்து வேதனைப்படுவதாக ஒரு விழா மேடையில் பேசியிருந்தார்.

அதாவது.. “இன்றைய தமிழ் சினிமாவில் தரமற்ற படங்கள் வெளியாகி வருகிறது. இதுபோன்ற மோசமான படங்களை நாம் (மக்கள்) தவிர்க்கவில்லை என்றால் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வரும்.

எனவே தானும் மோசமான படங்கள் வெளியானால் பொதுநல வழக்கு தொடுக்கலாம் என நினைக்கிறேன்” என பேசியிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் டிசம்பர் 10ஆம் தேதி புளு சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படம் ரிலீசானது. இந்த படம் வெளியாவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் உள்ளிட்ட இயக்குனர்கள் படத்தை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளினர்.

இவர்களின் பேச்சை நம்பி பலரும் இந்த படத்தை பார்த்தனர். ஆனால் ஆன்டி இண்டியன் படத்தில் அப்படி ஒன்றும் விசேஷமில்லை.

மேலும் அந்த படம் ஒரு வட இந்திய படத்தின் காப்பியாகும். இவையில்லாமல் ஒரு குறும்படத்தின் காப்பி என சம்பந்தப்பட்ட படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விஷயங்களை எல்லாம் மறைத்து ஆன்டி இண்டியன் படத்தை என்னவோ தன்னுடைய சொந்த கதை போல பேசியிருந்தார் புளு சட்டை மாறன். படத்தை பார்த்த ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மோசமான படங்களை பார்த்தால் வழக்கு போடுவேன் என்று சொன்னாரே பாக்யராஜ்.

அதன்படி இவர் பாராட்டிய ஆன்டி இண்டியன் படம் மற்றும் இவர் நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படங்கள் மீது வழக்கு போடுவாரா? என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

(இதை படிக்கும் பாக்யராஜ் ரசிகர்கள் சிலர் விவாதத்திற்கு வரலாம்.. அதாவது… அவரது பார்வையில் நல்ல படமாக தெரிந்த ஒன்று மற்றவர்கள் பார்வையில் மோசமான படங்களாக தெரியலாம்.

அதுபோல ஒருவேளை மற்றவர்கள் பார்வைகளில் நல்ல படங்களாக தெரிந்த ஒன்று பாக்யராஜ் பார்வையில் மோசமான படமாக தெரியலாம். அப்படியிருக்கையில் பாக்யராஜ் என்ன அளவுகோல் வைத்துள்ளார் எனத் தெரியவில்லை.)

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. பெரும்பாலான மக்களுக்கு முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் ஆன்டி இண்டியன் படங்கள் பிடிக்கவில்லை. எனவே பாக்யராஜ் எப்போது வழக்கு போடுவார்? என காத்திருக்கிறார்கள்.

Common man question to director Bhagyaraj ?

விடிய விடிய 12 மணி நேரத்தில் நடக்கும் ‘பிரம்ம முகூர்த்தம்’

விடிய விடிய 12 மணி நேரத்தில் நடக்கும் ‘பிரம்ம முகூர்த்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாலை 6 மணிக்கு துவங்கி மறுநாள் காலை 6 மணிவரை நடைபெறும் நகைச்சுவை கலந்த காதல் படத்தின் கதை திரைக்கதை எழுதி டைரக்ட் செய்கிறேன்.

பிரபல முன்னணி கதாநாயகி இதில் நாயகியாக நடிப்பதற்கும், முன்னனியில் பிரபல நான்கெழுத்து நகைச்சுவை நடிகர் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

தேனி,கம்பம், போடி, ஏற்காடு மற்றும் சென்னையிலும் இதன் படப்பிடிப்பை நடத்தி மார்ச் மாதம் திரைக்கு வருவதற்கு உருவாகும் இதற்கு ” பிரம்ம முகூர்த்தம்” என்று பெயர் வைத்துள்ளோம்.

தொழில் அதிபர் பி.செந்தில்நாதன் கே.வி.மீடியா நிறுவனம் சார்பில் இதை தயாரிக்கிறார்” என்று இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்கும் புதியவரான டி.ஆர். விஜயன் கூறினார்.

விஜய் விஷ்வா, மனோஜ்குமார், இருவருடன் முல்லை கோதண்டம், விஜய் டி.வி.பாலா, உட்பட மேலும் பல நகைச்சுவை நடிகர்களும் இதில் நடிக்கின்றனர்.

பி. முகமது ஜாபர் வசனம் தீட்ட, சினேகன், சி.பாலமுருகன், ராஜா மூவரின் பாடல்களுக்கு ஸ்ரீசாஸ்தா இசையமைக்கிறார்.

பம்மல் ரவி சண்டைப் பயிற்சியையும், கேசவ் நடன பயிற்சியையும், ப்ரியன் படத்தொகுப்பையும், சேகர் கலையையும், இ.கே.நவ்சாத் ஒளிப்பதிவையும், ஜெ. மணி தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.

பிரபல தொழில் அதிபரான பி. செந்தில்நாதன் தயாரிக்கும் ” பிரம்ம முகூர்த்தம்” படத்தின் கதை, திரைக்கதை எழுதி டி.ஆர்.விஜயன் டைரக்ட் செய்கிறார்.

Brahma Muhurtham shoot happens evening six to morning six

கேன்சர் தாக்கிய குழந்தைகளுக்கு உதவ பேஷன் ஷோ.; பெண்களுக்கு சுயம்பி விருது

கேன்சர் தாக்கிய குழந்தைகளுக்கு உதவ பேஷன் ஷோ.; பெண்களுக்கு சுயம்பி விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்தவர் இலங்கேஸ்வரி முருகன். ஒப்பனைக் கலைஞராக இந்த துறையில் 21 வருட அனுபவம் கொண்டவர் இவர். .

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் விதமாக, கடந்த வருடம் டிச-28ல் ஒப்பனை மற்றும் நவீன ஒப்பனை போட்டி, பேஷன் ஷோ ஆகியவற்றை சென்னையில் நடத்தினார்,

இந்த துறையில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஒப்பனைக் கலைஞர்களும் அழகு கலை நிபுணர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமான நிகழ்ச்சியாக மாற்றினார்கள்.

இந்தநிலையில் தற்போது அடித்தட்டு நிலையில் இருந்து தங்களது உழைப்பால் முன்னேறி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் பத்து பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு சுயம்பி என்கிற விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறார் இலங்கேஸ்வரி முருகன்.

அதேபோல தமிழ்நாடு முழுதும், கிராமத்தில் இருந்து வருகின்ற அழகு கலை நிபுணர்கள் மற்றும் ஒப்பனை கலைஞர்கள் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய போட்டி நடத்தி அவர்களுக்கான தொழில் செய்யும் தளங்களை உருவாக்கி கொடுக்க இருக்கிறார்.

அதுமட்டுமல்ல பேஷன் ஷோ ஒன்றை நடத்தி அதில் நம் வீட்டு செல்லப் பிள்ளைகளை நடந்துவர செய்து, அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் தொகையை குழந்தைகள் நல மருத்துவமனைகளில் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுக்க இருக்கிறார்.

விரைவில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் மற்றும் அதற்கான நிதி திரட்டலும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன என்கிறார் இலங்கேஸ்வரி முருகன்.

Fashion show organised for cancer patients donation

போஸ்ட் அபோகாலிப்டிக்.. திரில்லர் ஜானரில் உருவான ‘கலியுகம்’.; ஷ்ரத்தா கிஷோர் கூட்டணி.!

போஸ்ட் அபோகாலிப்டிக்.. திரில்லர் ஜானரில் உருவான ‘கலியுகம்’.; ஷ்ரத்தா கிஷோர் கூட்டணி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்பரேட் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்து வரும் திரைப்படம் ‘கலியுகம்’. இதனை இயக்குநர் ப்ரமோத் சுந்தர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்டபார்வை’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

இவருடன் நடிகர் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது.

தற்போது இரண்டாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்பு, பிரம்மாண்டமான பட்ஜெட்டில் கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட அதிநவீன அரங்கத்தில் தொடங்கியிருக்கிறது.

போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி வரும் ‘கலியுகம்’, திறமையான இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருவதாலும், ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாராகி வருவதாலும், தயாரிப்பில் இருக்கும் போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

The final schedule of Shraddha Srinath’s ‘Kaliyugam’ begins

ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் சாந்தனு – மஹிமா நடிப்பில் ‘குண்டுமல்லி’

ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் சாந்தனு – மஹிமா நடிப்பில் ‘குண்டுமல்லி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் பேனரில் ராம் பிரசாத் மற்றும் ஷரண் தயாரிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ள ‘குண்டுமல்லி’ என்கிற உற்சாகமான காதல் பாடலை இன்று தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டது

இந்த வீடியோ பாடலின் டீசர் டிசம்பர் 25-ஆம் தேதி இரண்டு மொழிகளிலும் வெளியானது. திருமண நிச்சயதார்த்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட காதல் மற்றும் குடும்ப உணர்வுகள் நிறைந்த பாடலாக இது உருவாகியுள்ளது. பாடல் வரிகள் வசீகரமாகவும், காட்சிகள் வண்ணமயமாகவும், இசை இனிமையாகவும் உள்ளன.

சாந்தனு தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். மஹிமா நம்பியார் தனது முகபாவங்களால் மனங்களை கொள்ளை கொள்கிறார்.

இந்தப் பாடலுக்கு ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைத்து, நித்யஸ்ரீயுடன் இணைந்து தமிழ் பதிப்பை பாடியுள்ளார்.

திமுகவின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார கீதமான ‘ஸ்டாலின் தான் வாராரு’ பாடலுக்கு இசையமைத்தது ஜெரார்ட் ஃபெலிக்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது.

கே எஸ் ஹரிஷங்கர் மற்றும் நித்யஸ்ரீ குண்டுமல்லி பாடலின் மலையாள பதிப்பை பாடியுள்ளனர். குண்டுமல்லி பாடலுக்கான தமிழ் வரிகளை விவேக் ரவியும், மலையாள வரிகளை ரஃபீக்கும் எழுதியுள்ளனர். திருமணம் செய்து கொள்ள போகும் ஜோடியின் உணர்வுகளை பாடல் வரிகள் அழகாக வெளிப்படுத்தியுள்ளன.

ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் மேற்கொள்ள, படத்தொகுப்பை கார்த்திக் மனோரமா கவனிக்க, கலை இயக்கத்தை தினேஷ் செய்துள்ளார். காயத்ரி ரகுராம் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

காண்பவர்களை உடனடியாக கவரும் வகையிலும், அவர்களது இதயங்களில் இடம் பிடிக்கும் வகையிலும் குண்டுமல்லி பாடல் உருவாகியுள்ளது.

Saregama Originals released the feel good romantic music video ‘Gundumalli’ directed by Aadhav Kannadhasan starring Shanthanu and Mahima and produced by MKRP Productions

2021 கடைசி வெள்ளி… மோதும் 14 படங்களின் முழு தகவல்கள்; தாங்குமா தமிழ்நாடு.?

2021 கடைசி வெள்ளி… மோதும் 14 படங்களின் முழு தகவல்கள்; தாங்குமா தமிழ்நாடு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று டிசம்பர் 27… இந்த வருடம் 2021 இன்னும் சில தினங்களில் முடியப்போகிறது.

இந்த ஆண்டில் தியேட்டர்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 120 தாண்டியுள்ளதாம். ஓடிடி தளத்தையும் சேர்த்தால் 170 படங்கள் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் ஓடிடி தளங்களில் 24 படங்களே வெளியான நிலையில், தற்போது 40க்கும் மேல் அதிகரித்துள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதியன்று கடைசி வெள்ளிக் கிழமையில் ரிலீசாக 14 படங்கள் ரெடியாக உள்ளன.

அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்து ஒரு பார்வை இதோ…

டிசம்பர் 30ஆம் தேதியில்…

1. பிளான் பண்ணி பண்ணனும்

டிசம்பர் 31ஆம் தேதியில்..

1. தண்ணி வண்டி

2. தீர்ப்புகள் விற்கப்படும்

3. வேலன்

4. சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை

5. இபிகோ 302

6. லேபர்

7. கரையேறும் கனவுகள்

8. மதுரை மணிக்குறவன்

9. மீண்டும்

10. நீ சுடத்தான் வந்தியா

11. ஒபாமா உங்களுக்காக

12. சில்லாட்ட

13. ஓணான்

14. பொண்ணு மாப்பிள்ளை

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’.

தீரன் இயக்கத்தில் சத்யராஜ். ஸ்ம்ருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான த்ரில்லர் படம் “தீர்ப்புகள் விற்கப்படும்’.

மகேஷ் பத்மநாபன் இயக்கத்தில் ருத்ரா மற்றும் சுபிக்ஷா ஜோடியாக இணைந்துள்ள படம் ‘சக்கரை தூக்கலா ஒரு புன்னகை’.

மாணிக்க வித்யா இயக்கத்தில் தம்பி ராமையா மற்றும் அவரது மகன் உமாபதி, பாலசரவணன் நடித்துள்ள படம் ‘தண்ணி வண்டி’. நாயகியாக வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நடித்துள்ளார்.

கவின் இயக்கியுள்ள ‘வேலன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் முகேன்ராவ் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் மீனாட்சி, பிரிகிடா, பிரபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சூரி மலையாளியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடித்துள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இந்த படத்தை தயாரித்து ஹீரோவாக அறிமுகமாகிறார் அருண் குமார்.

சலங்கை துரை இயக்கியுள்ள படம் ‘இபிகோ 302’. இந்த படத்தில் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் கஸ்தூரி.

ஆதரவற்றவர்களின் வாழ்க்கையை சொல்ல வரும் படம் “கரையேறும் கனவுகள்’. கேபிஎஸ் சாமி இயக்கியுள்ள இந்த படத்தில் ராஜேஷ் பாலகிருஷ்ணன், நீனு, சான்ட்ரா. கஸ்தூரி, ரம்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கதிரவன் மற்றும் அனகா ஜோடியாக நடித்துள்ள படம் ‘மீண்டும்’. அஜீத், மீனா நடிப்பில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட ‘சிட்டிசன்’ படத்தை இயக்கி சரவணன் சுப்பையா தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

விஜய்சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ள படம் ‘ஒபாமா உங்களுக்காக’. இந்த படத்தை நானி பாலா இயக்க பிருத்விராஜன், ஜனகராஜ் மற்றும் பூர்ணிஷா, கே.எஸ்.ரவிக்குமார், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

ராயல் ஃபார்சூனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முத்து, சரண்யா ரவிச்சந்திரன், ஜீவா சுப்ரமணியம், முருகன் ஆறுமுகம் ஆகியோர் நடித்துள்ளனர். சத்தியபதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு நிஜில்தினகரன் இசையமைக்க, சி.கணேஷ்குமார் படத்தொகுப்பு.

சிவராகுல் இயக்கி முக்கிய வேடத்தல் நடித்துள்ள படம் ‘சில்லாட்ட’. அறிமுக நாயகன் விஜீத் நாயகனாக நடிக்க ஹமைரா பரத்வாஜ், நதியா, நேசி, ஸ்டெபி ஆகிய 4 பேர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

ராஜரிஷி இயக்கத்தில் ஹரிக்குமார் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் ‘மதுரை மணிக்குறவன்’. மாதவிலதா என்பவர் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் சுமன், பருத்திவீரன் சரவணன், ராதாரவி, கெளசல்யா, ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், ஓ.ஏ.கே சுந்தர், அனுமோகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இத்துடன் ஓணான் மற்றும் பொண்ணு மாப்பிள்ளை ஆகிய படங்களும் வெளியாகவுள்ளது. ஆக மொத்தம் 2021 ஆண்டு கடைசி வெள்ளியன்று 15 தமிழ் படங்கள் ரிலீசாகின்றன.

December last week release updates?

More Articles
Follows