தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2011ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட படம் ‘ராணா’. இதில் நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கவிருந்தார்.
இப்படத்தின் பூஜை சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அன்று மாலையே ரஜினிக்கு திடீரென ் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி. அங்கு இரவு பகலாக ரஜினி ரசிகர்கள் காத்திருந்தனர்.
அதையடுத்து சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு சென்னை திரும்பினார்.
இதனால் ராணா படம் கைவிடப்பட்டது.
இதன்பின்னர் செளந்தர்யா ரஜினி இயக்கிய கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அவர்களை நடிக்க வைத்தார்.
ரஜினி கேரக்டர் வடிவமைப்பு அழகுக்கு தீபிகா இல்லை என பலரும் கிண்டலடித்தனர்.
படத்தின் கிராபிக்ஸ் செலவும் நாட்களும் நீண்டு கொண்டே போனதால் ‘கோச்சடையான்’ படத்தை உடனே ரிலீஸ் செய்ய சொன்னார் ரஜினி.
அதன் பின்னர் தான் லிங்கா (2014ல்) படத்தில் நடித்தார் ரஜினி.
இந்த நிலையில் தற்போது ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிப்பார் எனவும் ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வருகின்றன.
தேசிங்கு பெரியசாமி தீவிர ரஜினி ரசிகர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Rajinikanth and Deepika joins for a new film