தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் நாளை (7-ந் தேதி) வெளியாகிறது.
உலகம் முழுக்க ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளதால் படத்துக்கு வரவேற்பு எழுந்துள்ளது.
ஆனால் காவிரி விவகாரத்தில் ரஜினி தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதால், கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் ‘காலா’ படத்துக்கு தடை விதிக்க கோரி ராஜசேகரன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், “காலா என்ற கரிகாலன் படத்தின் கதையும், தலைப்பும் என்னுடையது. எனவே ‘காலா’ படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்” என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று (ஜீன் 6) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ஏற்க முகாந்திரம் இல்லை என்று கூறி மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
‘காலா’ படத்துக்கு தடை விதிக்க கோரி ராஜசேகரன் ஏற்கெனவே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ‘காலா’ படத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது என்பது இங்கே ஹைலைட்.
Supreme Court rejected case against Rajinis Kaala movie story theft issue