தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திடீரென இந்த மைய அறிவிப்பு வெளியானதால் மாணவர்கள் அங்கு சென்று தேர்வு எழுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்துக் கொண்ட நல்ல உள்ளங்கள் மாணவர்களுக்கு உதவ முன் வந்துள்ளனர்.
இது தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
நீட் தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது.
வருங்கால சமூகத்திற்கு சேவை செய்வ தற்காக வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் தம்பி, தங்கைகளுக்கு உதவுவது என் கடமை.
அவர்களுக்கு உதவிக் கரம் கொடுக்க நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். என்னை உங்கள் சகோதரனாக நினைத்து என்னை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்: 97104 44442.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
Vishal willing to help the NEET exam TN Students