தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ரஜினி தெரிவித்தார்.
தற்போது உள்ள தமிழக அரசியல் தலைவர்களில் மிகப்பெரிய ஆளுமை இல்லை என அடிக்கடி தெரிவித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இதுகுறித்து திருமுருகன் காந்தி அவர்கள் கூறியதாவது…
ரஜினி குறித்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. எங்களின் கேள்விக்கு அவர் பதிலளிப்பதில்லை.
சினிமாவில் தான் வெற்றிடம் உள்ளது. சிவாஜி கணேசன் மறைவுக்கு பின்னர் அவர் இடத்தில் யாரும் இல்லை.
ரஜினி கமல் இருவரும் 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்தாலும் சிவாஜி இடத்தை அவர்களால் நெருங்க முடியவில்லை. சிவாஜி விட்டு சென்ற வெற்றிடம் அப்படியே இருக்கு” என தெரிவித்தார்.
Thirumurugan Gandhi talks about Rajini and Kamal