ஜூன் 29 முதல் அசுரனை வதம் செய்ய வரும் சசிகுமார்

ஜூன் 29 முதல் அசுரனை வதம் செய்ய வரும் சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasikumar reveals meaning of his upcoming movie Asuravadham7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மருதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் ”அசுரவதம்”.

கோவிந்த் வசந்த் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஜூன் 29ஆம் தேதி திரைக்குக் கொண்டு வரத் திட்டமிள்ளனர்.
இப்படத்தின் பத்திக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

அப்போது படக்குழுவினர் பேசியதாவது…

ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பேசியதாவது..

“சசிகுமார் சாருக்கு இது மிக முக்கியமான ஒரு படம். இதுவரை அவர் செய்யாத ஒரு விஷயத்தை இந்த படத்தில் செய்திருக்கிறார். சசிகுமாருடன் இது எனக்கு 7 வது படம், எல்லாமே தனித்துவமான படங்கள். வெறும் 49 நாட்களில் மிக வேகமாக எடுத்து முடிக்கப்பட்ட படம்.” என்றார்.

நாயகி நந்திதா ஸ்வேதா பேசியதாவது…

நான் இந்த படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் தான் முக்கிய காரணம். மேலும் பிரேம், கதிர், சசிகுமார் என நிறைய பேர் காரணம். அவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

படத்தில் நிறைய எமோஷன், அழுத்தமான காட்சிகள் உண்டு. என்னால் அதை செய்ய முடியும் என நம்பி எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குனருக்கு நன்றி” என்றார்.

டைரக்டர் மருதுபாண்டியன் கூறியதாவது…

”சசிகுமாருக்கு அடுத்து படத்தில் கதிர், கோவிந்த் என இன்னும் இரண்டு ஹீரோக்கள் இருக்கிறார்கள். கதையை இசை மற்றும் காட்சிகளாக கொண்டு செல்ல வேண்டியிருந்தது.

அதற்கு கதிர் மற்றும் கோவிந்த் உறுதுணையாக இருந்தார்கள். வசுமித்ரா ஒரு எழுத்தாளர், ஆனாலும் படத்துக்காக வில்லனாக, நிறைய கஷ்டப்பட்டு நடித்துக் கொடுத்தார். படத்தில் செட் என்று தெரியாத அளவுக்கு மிகவும் ரியலிஸ்டிக்காக செட் போட்டுக் கொடுத்தார் கலை இயக்குனர் குமார்.” என்றார்.

என்னுடைய படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த என் நண்பன் பிரேம் தான் என்னிடம் இயக்குனர் மருதுவை கதை சொல்ல அனுப்பி வைத்தார். கதையை கேட்டவுடன் நான் தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது.

அந்த நேரத்தில் தான் லலித் சார் நான் உங்களை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படுகிறேன் என்றார்.

சசிகுமார் பேசியதாவது…

நானும் அந்த நேரத்தில் கொஞ்சம் சிரமத்தில் இருந்ததால் எல்லாம் தயாராக இருந்த இந்த படத்தை அவருக்கு பரிந்துரைத்தேன். என்னுடைய கஷ்ட காலத்தில் அவரும், கதிரும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.

கொடைக்கானலில் மிகுந்த குளிரில் மொத்த குழுவும் கஷ்டத்தை பொருட்படுத்தாமல் உழைத்தார்கள்.

தயாரிப்பாளர் லலித், உங்கள் மீது நம்பிக்கை இருக்கு, நீங்கள் நினைத்ததை படமாக எடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தார், அதுவே பெரிய பயமாக இருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தை பார்த்த அவர், எங்கள் பேனருக்கு முதல் படமே சிறந்த படமாக கொடுத்திருக்கிறீர்கள் என்று சொன்னபோது தான் மகிழ்ச்சியாக இருந்தது.

படத்தில் நாயகிக்கு நடிக்க வருமா என்று பார்த்து தேர்ந்தெடுங்கள் என்று சொன்னேன். நாயகிக்கு பாடல்கள் இல்லை, நிறைய பேர் நடிக்க முன்வரவில்லை. ஆனாலும் கதையை உணர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டார் நந்திதா.

வில்லன் கதாபாத்திரம் மிகவும் பவர்ஃபுல்லான ஒன்று. இந்த கதாபாத்திரத்தில் யாரும் நடிக்க மாட்டார்கள், ஆனால் வசுமித்ரா ஒரு எழுத்தாளர் என்பதால் அவரிடம் கதாபாத்திரத்தை பற்றி எடுத்து சொல்லி நடிக்க ஒப்புக் கொள்ள வைத்தேன்.

இது நல்லவன், கெட்டவன் பற்றிய படம், இந்த காலகட்டத்துக்கு தேவையான ஒரு சமூக கருத்துகளை கொண்ட ஒரு கதை. அசுரனை வதம் செய்வதே இந்த அசுரவதம்.” என்றார்.

Sasikumar reveals meaning of his upcoming movie Asuravadham

புற்றுநோய் தடுப்பிற்கான சர்வதேச மாநாட்டில் கௌதமி

புற்றுநோய் தடுப்பிற்கான சர்வதேச மாநாட்டில் கௌதமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Gautami participated in HARVARD MIT Conferenceஆயுர்வேத யோகா, புற்றுநோய் தடுப்பிற்கான சர்வதேச மாநாட்டில் ஈர்க்கப்பட்டதன் மூலம் அதில் நான் பங்கேற்கிறேன்.

இது மேற்கத்திய மருத்துவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட நமது பாரம்பரிய மருத்துவ துறையான யோகா மற்றும் ஆயுர்வேதத்தினை நம் மனதிற்கு கொண்டு வரும் மாநாடாகும்.

நவீன மேற்கத்திய மருத்துவம் மாறுபடுவதன் மூலம் நீண்ட காலமாக நோயாளிகளுக்கு நமது பழமையான பாரம்பரிய மருத்துவம் பயன்படுகிறது.

பாரம்பரியம் மற்றும் நவீன விஞ்ஞானங்கள் இரண்டுமே அவற்றின் மதிப்பினை கொண்டு ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது என்றால் அது இன்றியமையாது.

எங்களுடைய லைப் அகெயின் பெளண்டேஷனானது ஒவ்வொரு நபரின் வாழ்க்கையை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க உதவுவதோடு அவர்களின் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்க்கு அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

#WorldBookofRecords ல் எங்களுடைய foundation க்கு சிறந்த சேவை. கான சான்றிதழ் தந்தமைக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

Actress Gautami participated in HARVARD MIT Conference

gautami

45 நாட்களில் படத்தை முடித்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு

45 நாட்களில் படத்தை முடித்த மிஸ்டர் சந்திரமௌலி படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Thiru completed Mr Chandramouli shoot within 45 daysகிரியேட்டிவ் மீடியா எண்டர்டெயினர்ஸ் உடன் இணைந்து பாஃப்டா மீடியா வொர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் தயாரிப்பில் திரு இயக்கியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.

தந்தை, மகனான நவரச நாயகன் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ரெஜினா கஸாண்ட்ரா, வரலக்‌ஷ்மி சரத்குமார், சதீஷ், மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடிக்க, சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூலை 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்நிலையில் படத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் ஆப் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

முழுப்படமும் எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது, அதற்கு தயாரிப்பாளர், படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களும் முக்கிய காரணம். அப்பா மகன் பற்றி நிறைய நல்ல படங்கள் வந்திருக்கின்றன.

இது வேறு ஒரு பரிணாமத்தில் இருக்கும். கார்த்திக், கௌதம் கார்த்திக் இணைந்து நடித்தது மாதிரி தமிழ் சினிமாவில் நடக்குமா என்று தெரியவில்லை.

சென்னை, டெல்லி, பெங்களூரு ஆகிய மாநகரங்களில் நடக்கும் ஒரு விஷயத்தை எடுத்து கதையாக்கி ஒரு படத்தை எடுத்திருக்கிறோம். விண்டேஜ் கார்த்திக் சாரை இந்த படத்தில் பார்ப்பீர்கள்.

கௌதம் கார்த்திக்கின் மெனக்கெடல் இந்த படத்தின் பெரிய பலம். கௌதம் படப்பிடிப்பில் நேரம் தவறாமை சிறப்பான குணம், அதை அவர் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

ரெஜினா மிகவும் இனிமையான ஒரு நடிகை. பைரவி என்ற கதாபாத்திரம் தான் சந்திரமௌலி படத்தின் முதுகெலும்பு. அந்த கதாபாத்திரத்தில் வரலக்‌ஷ்மி நடித்திருக்கிறார்.

மகேந்திரன் சார் வில்லனாக சிறப்பாக நடித்திருக்கிறார். அகத்தியன் சார் கார்த்திக்கின் நண்பராக நடித்துள்ளார்.

ரிச்சர்ட் எம் நாதன் இல்லையென்றால் 45 நாட்களில் படத்தை முடித்திருக்க வாய்ப்பே இல்லை. திரைப்படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தனஞ்செயன் மிகச்சிறந்த ஒரு தயாரிப்பாளர். தனஞ்செயன், கார்த்திக் சார் இல்லைனா இந்த படம் இல்லை.’ என்றார் இயக்குனர் திரு.

Director Thiru completed Mr Chandramouli shoot within 45 days

mr chandramouli press meet

தனுஷ் நடித்துள்ள மாரி-2 படப்பிடிப்பு நிறைவடைந்தது

தனுஷ் நடித்துள்ள மாரி-2 படப்பிடிப்பு நிறைவடைந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maari 2பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி, வரலெஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ் ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் படம் மாரி 2 .

படத்தின் படப்பிடிப்பு கடைசியாக ஒரு சண்டை காட்சியுடன் நிறைவடைந்தது. ஒரே ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது.

விரைவில் அந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டு முழுப்படமாக்கப்படும்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

சர்கார் விஜய்க்காக தீம் மியூசிக் போடும் ஏஆர். ரஹ்மான்

சர்கார் விஜய்க்காக தீம் மியூசிக் போடும் ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay AR Rahmanசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் படம் சர்கார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இதற்கு முன்பே விஜய் நடித்த உதயா’, ‘அழகிய தமிழ்மகன்’, ‘மெர்சல்’ ஆகிய படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்திருந்தாலும் தீம் மியூஸிக் எதுவும் போட்டதில்லை.

ஆனால் முதன்முறையாக, ‘சர்கார்’ படத்தில் விஜய்க்காக ஸ்பெஷலாக தீம் மியூஸிக் போட்டு வருகிறாராம்.

ஏஆர். முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தில் அனிருத் போட்ட தீம் மியூசிக் படு பாப்புலர் ஆனது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் சர்க்காரை விலைக்கு வாங்க முயற்சிக்கும் மெர்சல் நிறுவனம்

விஜய்யின் சர்க்காரை விலைக்கு வாங்க முயற்சிக்கும் மெர்சல் நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar vijayசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.

அது வெளியானது முதலே படத்தின் மீதான எதிர்பாப்பு அதிகரித்துள்ளது.

மேலும் கத்தி, துப்பாக்கி ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு விஜய்யும் முருகதாசும் 3வது முறையாக இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற மெர்சல் படத்தை தயாரித்து ஸ்ரீதேனாண்டாள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

More Articles
Follows