தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக கலைப்புலி எஸ் தாணு பதவி வகித்து வருகிறார்.
இவரின் பதவி காலம் முடிவடையும் உள்ளதால், அடுத்த தேர்தல் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் நடைபெறஉள்ளது.
கிட்டதட்ட 1000க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இம்முறை தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோதண்டராமையா, ராதாகிருஷ்ணன், டி.சிவா மற்றும் விஷால் ஆகிய ஐந்து பேர் போட்டியிடுகின்றனர்.
இதுதொடர்பாக ஒவ்வொரு அணியினரும் பத்திரிகையார்களை சந்தித்து தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விஷால் அணியை சேர்ந்த பிரகாஷ்ராஜ், சுந்தர் சி, பாண்டிரஜ், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர். பிரபு, மன்சூர்அலிகான் உள்ளிட்டவர்கள் பத்திரிகையாகர்களை சந்தித்தனர்.
அப்போது விஷால் பேசும்போது…
சினிமா உலகில் தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் நன்றாக இருந்தால்தான் திரையுலகம் நன்றாக இருக்கும்.
எங்கள் தேர்தல் அறிக்கையாக நாங்கள் ஒருசில வாக்குறுதிகளை தருகிறோம்.
இந்த வாக்குறுதிகளை கண்டிப்பாக ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றிவிடுவோம். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா செய்யவும் தயார்’ என்று கூறினார்.
அதே போல் நடிகர் சங்க கட்டிடம் மிக விரைவில் அதாவது அடுத்த மாதம் கட்டிட வேலை துவங்கவுள்ளது.
என்னுடைய தந்தை “ஐ லவ் இந்தியா“, மகாபிரபு போன்ற வெற்றி படங்களை எடுத்தவர்.
என்னுடைய பள்ளி பருவத்தில் என் தந்தை ஒரு லேப்பில் நின்று பிச்சை எடுப்பதை நான் பார்த்தேன்.
அவர் அவர்களிடம் சொன்ன தேதியில் படத்தை வெளியிட வேண்டும் எனக்கு உதவுங்கள். நான் தவறேதும் செய்யவில்லை நான் செய்த ஒரே தவறு இந்த படத்தை எடுத்ததுதான் என்றார்.
அவர் பிச்சை எடுத்ததை நான் கண்ணால் பார்த்தேன் நான் இந்த தேர்தலில் நிற்க காரணம் அதுவாக கூட இருக்கலாம்.
இனி எந்தவொரு தயாரிப்பாளரும் அதுபோல் மற்றவர்களிடம் கையேந்த கூடாது. அதான் இந்த தேர்தலில் நிற்கிறேன்.
அறிக்கையில் கையெழுத்து போடும்போது மட்டுமே, தலைவராக இருப்பேன். மற்றபடி எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன்” என்று பேசினார் விஷால்.
Why Vishal nominated in Producers Council Election