தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜோதிகா நடிப்பில் தான் தயாரித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஆன்லைனில் (OTT) ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் சூர்யா.
இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த முடிவில் இருந்து சூர்யா பின்வாங்காவிட்டால் இனி சூர்யா தயாரிக்கும் படங்களை திரையிட போவதில்லை என தியேட்டர்கள் அறிவித்துள்ளன.
தமிழைப் போல இந்தியில் அக்ஷய் குமாரின் லக்ஷ்மி பாம், ரன்வீர் சிங்கின் 83 போன் டாப் ஹீரோக்களின் படங்களையும் ஆன்லைனில் வெளியிட OTT நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டதாம்.
இந்த நிலையில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தையும் நேரடியாக ஆன்லைனில் வெளியிட ஆன்லைன் நிறுவனம் முயற்சித்து வருகிறதாம்.
மாஸ்டர் பட சூட்டிங் சமயத்திலேயே கிட்டத்தட்ட ரூ.200 கோடிக்கு வியாபாரம் ஆனது.
இதன் தமிழக உரிமம் ரூ.70 கோடி, வெளிநாட்டு உரிமம் ரூ.30 கோடி, பிற மாநிலங்களின் உரிமம் ரூ.25 கோடி என கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தியது.
ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் எப்போது என கேள்வி எழுந்துள்ளது.
மேலும் கொரோனா ஊரடங்கு பல நாடுகளில் ஆகஸ்ட் மாதம் வரை கூட நீடிக்க வாய்ப்புள்ளது.
இதனால் வெளிநாட்டு உரிமையை வாங்கிய நிறுவனங்கள் பட வெளியீட்டில் இருந்து பின்வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் மாஸ்டர் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால் திருட்டுத்தனமாக இணையத்தில் லீக்காகி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறதாம்.
ஆனால் மாஸ்டர் படம் எப்போது வெளியானாலும் அது திருவிழா கொண்டாட்டம்தான் என பட இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய் படத்தை திரையரங்குகளில் பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
எனவே கொரோனா தொற்று முற்றிலும் நீங்கிய பிறகு மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிட வே காத்திருக்கிறதாம் படக்குழு.
Whether Vijays Master will be released in OTT platform