தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காமெடின்னா… அதுக்கு நான் கியராண்டி என சொல்லாமல், தன் படங்கள் மூலம் சொல்ல வைத்தவர் இயக்குனர் சுந்தர் சி.
இவர் நடித்துள்ள முத்தின கத்திரிக்கா படம் இன்று வெளியாகியுள்ளது.
சுந்தர் சியின் இயக்கத்தில் உருவான படங்களில் கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம் ஆகியோர் காமெடியின் உச்சத்தை தொட்டனர்.
மேலும், ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இவரது படங்களில் நடித்துள்ளனர்.
ஆனால் இதுவரை விஜய் இவருடன் பணியாற்றவில்லை.
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது என்னவென்றால், எந்த இயக்குனர் என்றாலும் விஜய் கதை கேட்காமல் நடிக்க மாட்டாராம்.
ஆனால் சுந்தர்.சியோ கதை சொல்வதை விட அதை காட்சியாக கொண்டுவருவதில்தான் கில்லாடியாம்.
எனவேதான் இவர்கள் இணைவதில் தாமதம் ஆகிவருகிறதாம்.