தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று மே 4 ஆம் தேதியன்று நடிகை கஸ்தூரி தொடர்பான ஒரு செய்தியை நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.
கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்து இருந்தது.
சிறு குறு தொழில்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த அரசு டாஸ்மாக் திறக்கப்பட மாட்டாது என அறிவித்து இருந்தனர்.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…
டாஸ்மாக் கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி !.
@CMOTamilNadu @PThangamanioffl
என பதிவிட்டு இருந்தார் கஸ்தூரி.
இது தொடர்பான செய்தியில் டாஸ்மாக்கு லாக்கு… என்ற தலைப்பில் செய்தியை பதிவிட்டோம்.
அந்த செய்தியில் நடிகை கஸ்தூரியின் கையில் மதுபான பாட்டில் வைத்திருப்பது போல டிசைன் செய்து (கம்யூட்டர் கிராபிக்ஸ்) வெளியிட்டு இருந்தோம்.
இது கஸ்தூரியின் மனதை காயப்படுத்தியுள்ளதை அறிந்தோம்.
எனவே அவரிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம். இனி இதுபோல் நடக்காது என்பதையும் இங்கே தெவித்து கொள்கிறோம்.
அது தொடர்பான செய்தியை இணையத்தில் இருந்து நீக்கிவிட்டோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி
ஆசிரியர்
We apology to Actress Kasthuri