தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தேர்தல் அரசியலுக்கு வர முடியாத சூழ்நிலையை நேற்று நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை மூலமாக வெளியிட்டார்.
அதில்.. “நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது” என்றார்.
மேலும்… “என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
ரஜினியின் அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கும் நல்ல அரசியல் மாற்றத்தை எதிர்ப்பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ரஜினியின் முடிவு குறித்து
நடிகை கஸ்தூரி தன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில்..
“எதிர்பார்த்ததுதான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னதுதான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம்.
வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை.
கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது.
ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழவேண்டும்” என கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
Kasthuri about Rajinikanth political desicion