உண்மையில் இது நடக்குதே.. இதை சொல்லனும்னு தோனிச்சி.. – விஷ்ணு விஷால்

உண்மையில் இது நடக்குதே.. இதை சொல்லனும்னு தோனிச்சி.. – விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.

பரபரப்பான கமர்ஷியல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்

இயக்குனர் மனு ஆனந்த் பேசியதாவது…

2006 ல் விஷ்ணு விஷாலை சந்திக்க முயற்சி செய்தேன். தயாரிப்பாளர் ஷ்ரவந்தி மூலம் தான் அவரை சந்தித்தேன். விஷ்ணு ஒரு நடிகராக மட்டும் தான் இந்தப்படத்திற்குள் வந்தார். வேறு ஒரு தயாரிப்பாளர் இந்தப் படத்தை செய்ய முடியாத நிலை உருவானபோது, விஷ்ணு சார் அவரே இந்தப்படத்தை தயாரிக்க முன்வந்தார்.

என் மீதும் என் திரைக்கதை மீதும் அவர் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. தயாரிப்பாளராக அவர் என்னிடம் சொன்னது, மனு நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன் இந்தப் படம் வெற்றி பெறுவதை பொறுத்து தான் நான் அடுத்த படங்கள் தயாரிக்க முடியுமா என்பது முடிவாகும் என்றார்.

கௌதம் வாசுதேவன் மேனன் என் குரு, அவருடன் 8 வருடம் வேலை செய்திருக்கிறேன், இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார். அச்சம் என்பது மடமையடா படத்திலிருந்து மஞ்சிமா மோகன் அவர்களை தெரியும், சின்ன வயதிலிருந்தே நடிப்பதால் அவருக்கு கேமரா பயமே இருக்காது, மிகச் சிறந்த நடிகை. டயலாக் பெருசா இருக்கு, என்னால் பேச முடியாது என சண்டை போடுவார்.

ஆனால் ஒரே டேக்கில் முடித்து விடுவார். ரைசா வில்சனை இப்படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் எனக்கு முதலில் இல்லை, எனக்கு அவரை தெரியாது, எனக்கு பிக்பாஸ் பார்க்கும் பழக்கம் இல்லை, அவரை முதலில் வேண்டாம் என்றேன், ஆனால் அவரை மீட் பண்ணி பத்து நிமிடத்தில் அவர் என் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என தோன்றியது. அவர் படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார்.

இன்னொரு ஹீரோயின் ரெபா மோனிகா ஜான் அவருக்கு இரட்டை குணம் இருப்பது போன்ற பாத்திரம் ஆனால் திறமையாக செய்துள்ளார். இவர்களை தவிர மாலா பார்வதி மேடம், அமான் சார், ராம்ஜி எல்லாம் நன்றாக நடித்திருக்கிறார்கள். அபிசேக் இந்தப் படத்திற்கு பிறகு நன்றாக வருவார் என நம்புகிறேன்.

பிரசாந்த் ரங்கசாமி அவரது ரியல் லைஃப் பாத்திரம் போன்றே நடித்திருக்கிறார். இயக்குநர் கௌரவ் எனக்காக ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். எனக்கு பிடித்த மாதிரி படத்தை எடுத்து தந்த ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட்டுக்கு நன்றி. சில்வா மாஸ்டர் எனக்கு பத்து வருட பழக்கம், தயங்கி தான் அவரிடம் கேட்டேன் என் மீதான பாசத்தில் தான் இந்தப் படம் செய்தார். அஷ்வத் இசையில் மிகப்பெரிய பலமாக இருந்ததற்கு நன்றி. எடிட்டர் ஜீ கே பிரசன்னா இப்படத்திற்கு அட்டகாசமாக எடிட்டிங் செய்துள்ளார். அவருடன் தொடர்ந்து வேலை செய்வேன்.

எங்களுடைய படத்தை நம்பி வாங்கிய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும், உதயநிதி அவர்களுக்கும், செண்பகமூர்த்தி அவர்களுக்கும் நன்றி. என் குழுவிற்கு மிகவும் நன்றி. இந்தப் படத்தை தியேட்டரில் பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

ரைசா வில்சன் பேசியதாவது..

நான் மனுவை எப்படி மீட் பண்ணேன் என்பது முதற்கொண்டு அவரே எல்லாம் சொல்லி விட்டார். அவர் சொன்ன கதாபாத்திரம் சவாலாக இருந்தது, இதை மிஸ் பண்ண கூடாது என முடிவு செய்தேன். இப்படத்தில் ஒவ்வொருத்தரும் உயிரை தந்து வேலை செய்துள்ளார்கள்.

இந்த படத்தில் எனக்கு துப்பாக்கி தந்தார்கள், எனக்கு துப்பாக்கி என்றாலே பயம், ஆனால் சில்வா மாஸ்டர் தான் என்னை இயல்பாக்கி நடிக்க வைத்தார். இது ஒரு மிகச்சிறந்த படமாக இருக்கும் எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள் நன்றி.

டிசைனர் பூர்த்தி பேசியதாவது..

மஞ்சிமாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் அவர் தான் இயக்குநரை அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் என்பதால் இயக்குநர் நிறைய இன்புட் கொடுத்தார். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக காஸ்ட்யூம் செய்தோம். படம் அட்டகாசமாக வந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசியதாவது…

இந்த படத்தில் வேலை பார்த்த அத்தனை பெரும் பெரும் கடின உழைப்புடன் பணி புரிந்துள்ளனர், ஒரு மிகப்பெரிய படமாக வந்துள்ளது. என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்த தயாரிப்பாளருக்கு, இயக்குநர் மனுவுக்கு நன்றி. தியேட்டரில் பாருங்கள் நன்றி.

எடிட்டர் ஜீ கே பிரசன்னா பேசியதாவது…

இந்த படம் என் திரைவாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும். இப்படத்திற்கு வாய்ப்பு தந்த விஷ்ணு விஷாலுக்கு, இயக்குநர் மனுவுக்கு நன்றி. இந்தப் படம் அனைவருக்கும் நல்ல அனுபவமாக இருக்கும்.

இசையமைப்பாளர் அஷ்வத்

இந்த படத்தில் ஐந்து பாடல் இருக்கிறது அதில் இன்று ஒரு பாடல் வெளியாக உள்ளது. இதில் நிறைய பேர் பாடியுள்ளார்கள், வேலை பார்த்துள்ளார்கள். எல்லோருக்கும் நன்றி. ஐந்து பாடல் எடிட்டில் தப்பித்து வந்துவிட்டது, விஷ்ணு விஷால் படங்களில் நிறைய பெரிய இசையமைப்பாளர்கள் வேலை பார்த்துள்ளார்கள், ஆனால் அவர்களை தாண்டி என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி.

இயக்குனர் மனு வாய்ப்பு தேடிய காலத்தில் அவர் வைத்திருந்த மற்ற ஸ்கிரிப்டுக்கும் என்னை தான் இசையமைப்பாளராக வைத்திருந்தார் அவருக்கு நன்றி. படம் பாருங்கள் பிடிக்கும் நன்றி.

நடிகை மஞ்சிமா மோகன் பேசியாதாவது

எங்கள் படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்க்கு நன்றி. இந்தப்படத்தை பல தடைகளை கடந்து உருவாக்கியிருக்கிறோம், பூர்த்தி மிகச்சிறப்பாக ஸ்டைலீஷ் செய்துள்ளார் ஒரு படத்திற்கு மிக முக்கியம் கதாப்பாத்திரத்தின் ஸ்டைல் அதை அவர் சிறப்பாக செய்துள்ளார்.

இப்படத்தில் அனைவரும் ஹீரோ ஹீரோயினாக இல்லாமல் படத்தில் எல்லோரும் கதாபாத்திரங்களாக வந்துள்ளார்கள். விஷ்ணு தயாரிப்பாளராக நடிகராக இரண்டு வேலை பார்த்தார். அவரது பொறுமை என்னை பிரமிக்க வைத்தது. படம் அருமையாக வந்துள்ளது அனைவரும் பாருங்கள் நன்றி.

விஷ்ணு விஷால் மேலாளர் தங்கதுரை பேசியதாவது…

விஷ்ணு விஷாலை நீர்ப்பறவை படத்திலிருந்து தெரியும் அவரது வளர்ச்சிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனமும் உறுதுணையாக இருந்துள்ளது. இந்தப்படத்தின் கதையை கேட்டபோது இதை தயாரிக்க முடியுமா? என தோன்றியது ஆனால் எல்லோருக்கும் கதை பிடித்திருந்தது. படம் நன்றாக வந்துள்ளது, அனைவரும் தியேட்டரில் பாருங்கள் நன்றி.

விஷ்ணு விஷால் தந்தை பேசியதாவது…

என் மகன் ஒரு நல்ல மனிதனாக ஸ்டாராக வந்ததற்கு தமிழ்நாட்டு மக்கள் தான் காரணம், அடுத்து அவரை பற்றி நன்றாக எழுதிய பத்திரிக்கைகாரர்கள் காரணம். அவரது வளர்ச்சிக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ், உதயநிதி ஸ்டாலின், செண்பகமூர்த்தி ஆகியோர் மிக முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவருக்கு நன்றி. இந்தப் படம் பார்த்தேன் மிகச்சிறந்த படம் எல்லோரும் பாருங்கள் நன்றி.

நடிகர் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசியதாவது…

எனக்கு எமோஷனல் தருணம் இது. இந்த மேடை மிக முக்கியமான மேடை. என் அப்பா இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க மாட்டேன். எனக்காக நிறைய உழைத்திருக்கிறார். நான் அவரது இடத்தில் இருந்தால் இது போல் செய்திருப்பேனா என்பது தெரியாது, அவருக்கு நன்றி.

மனுவை சந்தித்த போது நான் நிறைய படம் பண்ணிட்டேன் ஆனால் இன்னும் புதிதாக ஒரு நடிகராக நல்ல படம் செய்ய வேண்டும் என தோன்றியது. ராட்சசன் படம் இந்திய அளவில் ஒரு நடிகராக ஒரு மரியாதை பெற்று தந்தது. இந்தக் கதை சொன்ன போதே எனக்கு பிடித்திருந்தது. எனக்கு சையத் முகமது என ஒரு நண்பர் இருந்தார், அவனுக்கு நடந்த சில விஷயங்களை சொல்லும் போது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

நான் வளர்ந்த விதம் வேறு, ஆனால் இந்தக் கதை கேட்ட போது அதை உணர்ந்தேன், இது உண்மையில் நடக்கிறதே, இதை சொல்ல வேண்டும் என தோன்றியது.

ஒரு கட்டத்தில் இந்த படம் தயாரிப்பாளர் தயாரிக்க முடியாத சூழ்நிலையில் என்னிடம் வந்து நீங்கள் காத்திருக்க வேண்டும் என உண்மையை சொன்னார் மனு, அவரது நேர்மை பிடித்திருந்தது அதனால் தான் இந்தப்படம் செய்தேன். அவருக்காக தான் இந்தப்படம் செய்தேன். இன்று 4 படங்கள் செய்கிறேன், எனக்கு நம்பிக்கை தந்த மனுவுக்கு நன்றி. அவர் கூட்டி வந்தவர் தான் ஷ்ரவந்தி. பேசும்போதே பாஸிட்டிவாக இருந்தார். அவர் என் தங்கையின் இடத்தை பிடித்திருக்கிறார்.

மனு எப்போதும் என்னை பெரிதாக யோசிக்க சொல்வார். என்னை பெரிதாக மாற்றியிருக்கிறார். நிறைய பேர் படம் பார்த்துவிட்டார்கள், தனுஷ் படம் பார்த்து விட்டார், ராட்சசன் படத்தை தாண்டி இந்தப்படத்தில் ஒரு நடிகராக மிரட்டி விட்டீர்கள் என்று பாராட்டினார், ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதற்காக அவருக்கு நன்றி. லாக்டவுன் நிறைய டைம் தந்தது, அதனால் எல்லோரும் மீண்டும் மீண்டும் உழைத்து அழகாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

உதய் அண்ணா, செண்பகமூர்த்தி சாருக்கு என் வாழ்நாள் முழுதும் நன்றி சொன்னாலும் பத்தாது, இப்போது இந்தப் படத்திற்காக சொல்லவில்லை, குள்ளநரி கூட்டம் படத்தையே அவர்கள் தான் ரிலீஸ் செய்து தந்தார்கள், எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்துள்ளார்கள், இந்தப் படத்தை ரிலீஸ் செய்வதற்கு நன்றி. ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி ராஜா அவர்களுக்கு நன்றி. தங்கதுரை சாருக்கு நன்றி, என்றும் எனக்கு உறுதுணையாக இருப்பவர். எப்போதும் போல் இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

Vishnu Vishal speech at FIR press meet

சிலம்பரசன் பிறந்தநாள்..; இது சிவகார்த்திகேயன் திரை நாள்

சிலம்பரசன் பிறந்தநாள்..; இது சிவகார்த்திகேயன் திரை நாள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தயாரிப்பாளர் பாடகர் பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் சிவகார்த்திகேயன்

அவர் சினிமாவிற்கு வந்து இன்றோடு 10 ஆண்டுகள் ஆகிறது.

இதற்காக நன்றி தெரிவித்துள்ளார். அதில்..,

‛‛இன்றோடு சினிமாவில் பத்தாண்டுகள்… நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம். இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த இடம் நான் நினைத்துப் பார்த்திராத நிஜம். இந்த தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டிராஜுக்கும், ஏனைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

எல்லாவற்றுக்கும் மேலாக என் தாய்த் தமிழுக்கும், என்னை மகனாக, சகோதரனாக, நண்பனால, குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும், என் ஆரம்பகாலம் முதல் என்னுடைய வெற்றி – தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர, சகோதரிகளுக்கும் பெரும் நன்றிகள்.

நான் செய்ய நினைப்பதெல்லாம் இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே. என் இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பும் நன்றிகளும்”

என்றார் சிவகார்த்திகேயன்.

இன்று தான் நடிகர் சிலம்பரசன் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today marks STR and Sivakarthikeyan’s special day

விஷ்ணு விஷால் – கௌதம் மேனனின் ‘எஃப் ஐ ஆர்’..; கைகொடுத்தார் உதயநிதி.!

விஷ்ணு விஷால் – கௌதம் மேனனின் ‘எஃப் ஐ ஆர்’..; கைகொடுத்தார் உதயநிதி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘எஃப் ஐ ஆர்’.

இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார்.

FIR திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.

இதன் கேரள உரிமையை இ4 என்டர்டைன்மென்ட் வாங்கியுள்ளது.

இவர்கள் விஷ்ணு விஷாலின் ராட்சசன் திரைப்படத்தை கேரளாவில் வெளியிட்டவர்கள்.

எஃப் ஐ ஆர் இன் கர்நாடக உரிமையை ஏபி பிலிம்ஸ் மற்றும் சவுரவ் கோல்டி நிறுவனங்கள் வாங்கியுள்ளன.

தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பிப்ரவரி 11ஆம் தேதி படம் திரையரங்கில் வெளியாகிறது.

 

Red Giant Movies bagged Vishnu Vishal’s FIR movie rights

10 ரூபாய்க்கு உணவளிக்கும் நடிகர்.; ஸ்விக்கி ஜூமோட்டோ டெலிவரி பாய்ஸ்களும் கார்த்தி கஸ்டமர்ஸ் தான்.!

10 ரூபாய்க்கு உணவளிக்கும் நடிகர்.; ஸ்விக்கி ஜூமோட்டோ டெலிவரி பாய்ஸ்களும் கார்த்தி கஸ்டமர்ஸ் தான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலகம் வாசலில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த உணவகத்தில்
ரூ50 மதிப்புள்ள தரமான, சுவையான பிரிஞ்சி சாதம் (வெஜிடபிள் பிரியாணி) ரூ 10 க்கு வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சுத்தமான முறையில் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.

தினசரி சராசரியாக100 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள், லாரி டிரைவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள்; குறிப்பாக ஊருக்கே உணவு சப்ளை செய்யும் ஸ்விக்கி, ஜூமோட்டோ டெலிவரி பாய்ஸ்கள் போன்றோர் இந்த உணவகத்தில் தினசரி உணவு உட்கொள்கிறார்கள்.

லாப நோக்கம் எதுவுமின்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் திரு. கார்த்தி அவர்களின் ஆதரவுடனும் வழிகாட்டுதலுடனும் இந்த உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தினசரி மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை இந்த உணவகம் செயல்படுகிறது.

Karthi fan club provides food at low cost to poor people

விலங்கு’-க்காக மீண்டும் இணைந்த ஜோடி விமல் – இனியா

விலங்கு’-க்காக மீண்டும் இணைந்த ஜோடி விமல் – இனியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ5 தளமானது, பல்வேறு வகையிலான கதையுடன் மிகச்சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களின் விருப்பமிகு ஒடிடி தளமாகியுள்ளது.

ஜீ5 யில் வெளியான ஆட்டோ சங்கர், பிங்கர் டிப், க.பெ.ரணசிங்கம், மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம், பிளட் மணி, முதல் நீ முடிவும் நீ மற்றும் பல ஒரிஜினல் படங்கள், பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளன. தற்போது, ஜீ5 அடுத்ததாக ரசிகர்களுக்காக பிரத்யேகமாக, இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் “விலங்கு” என்ற ஒரிஜினல் வெப் சீரிஸை, ஃபிப்ரவரி 18, 2022 வெளியிடவுள்ளது.

7-எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது.

இத்தொடரில் திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் பரிதி என்ற பாத்திரத்தில், கதாநாயகனாக விமல் நடித்துள்ளார்.

இனியா நயகியாக நடித்துள்ளார்.

இவர்கள் 2011ல் சற்குணம் இயக்கிய ‘வாகை சூட வா’ படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

மேலும் முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோருடன் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதன் கதை திருச்சியில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது,

எளிய காவலர்களின் வாழ்க்கையை சொல்வதோடு, அவர்களின் உணர்வுபூர்வமான பக்கத்தையும் சொல்வதாக அமைந்துள்ளது. ஒரு மர்மமான வழக்கை, விமல் விசாரிக்க ஆரம்பிக்கிறார் அதில் ஏற்படும் திருப்பங்களே இந்த தொடர்.

விலங்கு தொடரை இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.

அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய, ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் கையாண்டுள்ளார், கலை இயக்குனர் – G.துரைராஜ்.

ஜீ5 ஒரிஜினல் தொடரான “விலங்கு” பிப்ரவரி 18, 2022 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

ZEE5 Original Series “Vilangu” is all set to enthrall the audience with ultimate edge-of-seat moments

‘மகான்’ படத்தின் கதை.; அப்பா மகனாவே இணையும் விக்ரம் – துருவ் நெகிழ்ச்சி

‘மகான்’ படத்தின் கதை.; அப்பா மகனாவே இணையும் விக்ரம் – துருவ் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் லலித் குமார் தயாரித்துள்ள ‘மகான்’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.

‘சீயான்’ விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Prime மெம்பர்கள் இப்படத்தை பிப்ரவரி 10 முதல் Prime Video-இல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் காணலாம்.

இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. கன்னடத்தில் இப்படத்திற்கு ‘மஹா புருஷா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நேர்மையான, கொள்கை பிடிப்பு கொண்ட வாழ்க்கையிலிருந்து விலகியதால், குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட ஓர் எளிய மனிதனின் கதையில் இந்த டிரெய்லர் நம்மை அழைத்துச் செல்கிறது. அவர் தனது லட்சியங்களை எட்ட தனித்து முன்னேறுகிறார். அதில் அவர் வெற்றியின் உச்சத்தை அடைந்தாலும், அவர் தனது மகன் தன்னுடன் இல்லாத இழப்பை உணர்ந்து, அவரைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகள், மாற்றங்கள், ஏற்ற தாழ்வுகளை இப்படம் சித்தரிக்கிறது.

“திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவரும் முழு முயற்சியுடன் ஒத்துழைத்து, ஆதரவு தந்ததின் விளைவாக உருவான ‘மகான் =’ முழுமையான அன்பின் வெளிப்பாடு” என்று படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.

“விக்ரமுடன் பணிபுரிவது மகிழ்ச்சியான ஒன்று, மேலும் ‘மகான்’ திரைப்படம் அவரது திரைப்பட வாழ்க்கையில் 60-வது படம் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது.

‘சீயான்’ விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் என தந்தையையும், மகனையும் ஒன்றாக இப்படத்தில், முதன் முதலாக இயக்கும் வாய்ப்பையும் இந்தத் திரைப்படம் எனக்கு அளித்துள்ளது. இருவரும் தங்கள் திறமையை முழுவதுமாக வெளிக்கொணரந்துள்ள இப்படம், ரசிகர்களும், பார்வையாளர்களும் மிகவும் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். Amazon Prime Video மூலம் உலகெங்கும் திரையிடப்படும் ‘மகான்’ பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் ‘சீயான்’ விக்ரம் கூறுகையில்…

, “மகான் திரைப்படம் முழுக்க முழுக்கப் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் ஆக்‌ஷன் மற்றும் டிராமாவின் சரியான கலவையைக் கொண்டிருக்கும். இந்தத் திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பல சாயல்களை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு சாயலும் வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. என்னுடைய 60வது படமாக எனது சினிமா பயணத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளதால், இது எனக்கு மிக முக்கியமான படமாகும்,

இரண்டாவதாக எனது மகன் துருவ் விக்ரம் இபடத்தில் எனது மகனாக நடிக்கிறார். இந்தப் பாத்திரத்திற்காக அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார், அவரை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

மேலும் கதையின் ஒவ்வொரு நிகழ்வையும் துல்லியமாகச் சித்தரிக்க முழுமையான உழைப்பை அளிக்கும் கார்த்திக் சுப்பராஜ் போன்ற திறமையான இயக்குநருடன் பணிபுரிவது மகிழ்ச்சியைத் தருகிறது. பிப்ரவரி 10 அன்று ‘மகான்/ Prime Video மூலம் உலகெங்கும் சென்றடைய உள்ளார். அதுவே எனது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.” என்கிறார்.

“மகான் எனக்கு முக்கியமான திரைப்படம் என்பேன். ஏனென்றால் நான் என் தந்தையுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை, அதுவும் அவரது மகனாகவே இதில் நடித்துள்ளேன். அவர் மிகவும் திறமையான மனிதர், மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் பற்றிய சிறந்த புரிதலைக் கொண்டவர்.

அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, ”என்று துருவ் விக்ரம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்….

“கார்த்திக் சுப்புராஜ் சாரின் இயக்கத்தில் பணிபுரிவது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது, என் கதாபாத்திரத்தின் நுணுக்கங்களையும் தீவிரத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவினார். எனது நடிப்பையும் படத்தையும் பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்..” என்கிறார்.

“விக்ரம் மற்றும் கார்த்திக்குடன் மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்றுவது அற்புதமான அனுபவம் ஆகும். ‘மகான்’ ஒரு ஆக்‌ஷன் நிறைந்த பொழுதுபோக்குப் படமாகும், கதை முழுவதும் பலவிதமான டிராமா மற்றும் உணர்ச்சிகள் பின்னிப்பிணைந்துள்ளது.

திரைப்படத்தில் எனது கதாபாத்திரமான நாச்சி, தனது சிறிய மற்றும் அன்பான குடும்பத்துடன் எளிமையான வாழ்க்கையை நடத்தும் ஓர் எளிமையான மற்றும் இரக்க குணமுள்ள பெண், அவரது கணவர் கொள்கைபிடிப்பான வாழ்க்கையின் பாதையில் இருந்து விலகிச் செல்லும்போது அவரது உலகம் எவ்வாறு சிதைகிறது என்பதையே இப்படம் சித்தரிக்கிறது.

உலகெங்கிலும் உள்ள Prime Video பார்வையாளர்கள் படத்தை அதன் அற்புதமான கதைக்களத்திற்காகப் பெருமளவில் விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று மகான் படத்தின் முன்னணி நடிகை சிம்ரன் பகிர்ந்து கொண்டார்.

“நாம் செய்யும் பணி எல்லைகளைத் தாண்டி உலகெங்கும் பரவுவதைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது, மேலும் மகான் திரைப்படம் Prime Video-இல் உலகளாவிய பிரீமியர் மற்றும் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

மகான் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள், அற்புதமான கதைக்களம் மற்றும் அதை இயக்குநர் விளக்கியுள்ள விதம் பார்வையாளர்களைக் கவரும் என்று நான் நம்புகிறேன்.” ” என்று நடிகர் பாபி சிம்ஹா பகிர்ந்துள்ளார்.

கதை சுருக்கம்:

மகான் ஒரு சாதாரண மனிதனைப் பற்றிய கதை. மனைவி மற்றும் ஒரு மகனுடன் ஒரு சிறிய குடும்பத்தில் மிகவும் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து, ஒருபோதும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் வாழும் சாதாரண நபரின் கதை.

அவரது ஒரு நாள் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்துடன் ஒத்திசைப்பது போல இயல்பான வாழ்க்கையாக இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கையின் எல்லையை மீறி அடியெடுத்து வைக்கும் போது, அமைதியான வாழ்க்கை எதிர் திசையில் மாறி, அதன் விளைவாக அவரது குடும்பம் அவரை விட்டு வெளியேறுகிறது.

சிறு வயதில் தொலைந்து போன ஒரு நண்பருடன் கைகோர்த்து கோடீஸ்வரராகி ராஜ வாழ்க்கையை வாழத் துவங்குகிறார். இருப்பினும், ஒவ்வொரு நாளும் தனது மகன், தன்னுடன் இல்லாததை நினைத்து வருந்துகிறார்.

ஒரு நாள் அவரது மகன் ஒரு அசாதாரண சூழ்நிலையில் அவரது வாழ்க்கையில் திரும்பி வரும்போது அவருக்கு வாழ்க்கை முழுமை பெற்றது போலத் தோன்றுகிறது. அடுத்து என்ன நடக்கிறது? என்பதே இந்த பரபரப்பான, அதிரடியான ரோலர் கோஸ்டர் சவாரியின் முக்கியக் கட்டம்.

 

Prime Video Launches the Trailer of Chiyaan Vikram and Dhruv Vikram StarrerAction Thriller – Mahaan

More Articles
Follows