தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மறைந்த ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் போட்டியிட நடிகர் விஷால் அவர்களும் மனுதாக்கல் செய்தார்.
ஆனால் அவர் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என அதிமுக, திமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, விஷாலின் வேட்புமனு பரிசீலனை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்தனர். இதனை எதிர்த்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார்.
இதன்பின்னர் சில மணி நேரங்களில் அவருடைய மனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
எனவே பல சிரமங்களுக்கு பிறகு உண்மை ஜெயித்துவிட்டது என விஷால் ட்விட்டரில் தெரிவித்தார்.
இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாய்மை வெல்லும் எனவும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
ஆனால் விஷாலின் அறிவிப்பு வந்த 2 மணி நேரங்களில் மீண்டும் வேட்புமனுவை பரிசீலனை செய்தோம். அதில் 2 போலி கையெழுத்து உள்ளது எனவே மனுவை நிராகரிக்கிறோம் என தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இவையெல்லாம் 6 மணி நேரத்தில் நடந்த சம்பவங்களாகும். இதனால் சினிமாவை மிஞ்சும் வகையில் பரபரப்பாக காணப்பட்டது.
இதுபோன்ற பல விறுவிறுப்பான காட்சிகளை சினிமாவில் பார்த்திருப்போம். தற்போது நடிகர் விஷாலுக்கே சினிமா காட்டியுள்ளது தேர்தல் ஆணையம் எனலாம்.
Vishals Nomination Rejected at RK Nagar By election