போற போக்குல’ விஜய் எடுத்த செல்ஃபி. ஷாரூக் சாதனையை சாச்சுடுட்டே

போற போக்குல’ விஜய் எடுத்த செல்ஃபி. ஷாரூக் சாதனையை சாச்சுடுட்டே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay neyveli slefieகடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலியில் லோகேஷ் இயக்கி வந்த மாஸ்டர் பட சூட்டிங்கில் நடித்து வந்தார் விஜய்,

அப்போது வருமான வரித்துறையினர் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர்.

மேலும் விசாரணைக்காக நெய்வேலியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டார் விஜய்.

இது வழக்கமான சோதனை தான் என்றாலு இது அரசியல் விவகாரமாக பார்க்கப்பட்டது.

வருமான வரித்துறை சோதனைக்குப் பின்னர் படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் வந்த போது அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

எனவே அருகேயிருந்த வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் தளபதி.

அதை தன் ட்விட்டரிலும் பகிரவே பல பிரபலங்கள் அதை ரீட்வீட் செய்தனர்.

இந்த நிலையில் இந்தியாவில் அதிகம் பேரால் ரீட்வீட் செய்யப்பட்ட செல்ஃபி என்ற சாதனையை விஜய்யின் செல்ஃபி பெற்றுள்ளதாம்.

இதற்கு முன்பு பாலிவுட் ஷாரூக்கானின் ட்விட்டர் பதிவுதான் முதலிடத்தில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தளபதி ரசிகர்கள் #INDIAsMostRTedVIJAYSelfie என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Vijays neyveli selfie creates records

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளில் லைகா-வின் மெகா கிப்ட்

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளில் லைகா-வின் மெகா கிப்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் கர்மயோகி திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

அதாவது… நம்முடைய செயல் எப்போதும் சேவை மனப்பான்மையோடு இருக்கவேண்டும்.

ஏதோ கடமைக்காக செய்தோம் சம்பளம் வாங்கினோம் என இருக்கக் கூடாது.

யார் அரசுப் பணியில் தன்னை முழுமையாக அர்பணித்து கொள்கிறார்களோ அவர்களே கர்மயோகி.

அனைத்து அரசுப்பணியாளர்களையும் கர்மயோகிகளாக மாற்றுவதே மிஷன் திட்டத்தின் நோக்கமாகும்.

முக்கியமாக சிவில் சர்வீசஸ் பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற உயர் பணியில் இருப்பவர்களுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி பிறந்த நாளில் ‘கர்மயோகி’ பட அறிவிப்பை வெளியிட்டு மோடிக்கு பரிசளிப்பதாக அறிவித்துள்ளது லைகா.

அவர்களில் அறிக்கையில்…

மோடியின் வரலாற்று வாழ்க்கை திரைப்படமான கர்மயோகி படத்தை தமிழில் வழங்கவுள்ளோம்.

மஹாவீர் ஜெயின் தயாரிக்க சஞ்சய் லீலா பன்சாலி வழங்குகிறார்.

சஞ்சய் திரிபாதி இயக்குகிறார். செயல் ஹாடா இசையமைப்பாளர்.

மோடியின் இளமைப்பருவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம் விரைவில் வெளியாகிறது. தமிழில் லைகா நிறுவன சார்பில் சுபாஷ்கரன் வெளியிடுகிறார்.

karma yogi

Lyca Productions to present Karma Yogi

மறு தேர்தல்? வாக்கு எண்ணிக்கை? விஷால் கார்த்தி & எதிரணி செப். 24க்குள் பதிலளிக்க ஐகோர்ட் ஆர்டர்

மறு தேர்தல்? வாக்கு எண்ணிக்கை? விஷால் கார்த்தி & எதிரணி செப். 24க்குள் பதிலளிக்க ஐகோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal Karthiதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 22ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தல் சமயத்தின் போது சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டனர்.

மேலும் தபால் வாக்குகள் அளிக்கப்படாதது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தபால் வாக்கு பிரச்சினையால் ரஜினிகாந்த் வாக்களிக்கவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சங்க தேர்தலுக்கு ரூ.30 லட்சம் செலவிடப்பட்டுள்ளதால் மறுதேர்தல் நடத்துவது என்பது சாத்தியம் இல்லை.

மேலும், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிட வேண்டும் என விஷால் தரப்பு வாதிட்டது.

ஆனால் தேர்தலை தனி நீதிபதி ரத்து செய்துள்ளதால் நியாயமான முறையில் மறுதேர்தல் நடத்த தயார் என ஏழுமலை தரப்பில் கூறப்பட்டது.

இருதரப்பினர் வாதத்தை கேட்ட நீதிபதி…

சட்ட போராட்டம் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் நடத்துவதா; வாக்கு எண்ணிக்கை நடத்துவதா நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர்தரப்பினர் செப்டம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

High courts asks vishal team for sangam election issue

காஞ்சனா 3 ஹீரோயின் ‘ரி’ நடிக்க லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகும் ‘கேட்’

காஞ்சனா 3 ஹீரோயின் ‘ரி’ நடிக்க லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகும் ‘கேட்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ri Djavi AlexandraGK சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.

கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர்.

கதாநாயகியாக மெக்சிகோவை சேர்ந்த நடிகை ‘ ரி ‘ என்பவர் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே காஞ்சனா 3 படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர்.

மேலும் இவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

மாநகரம் படத்தில் வில்லனாக மிரட்டிய ரவி வெங்கட்ராமன் மற்றும் நடிகை அம்மு ராமச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும் இந்திய அளவில் சிறந்த மாடல்கள் முக்கிய வேடங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆரம்பம், அனேகன் என பிரமாண்ட படங்களில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷிடம் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராகவும்,ஆதி நடிக்கும் ‘ பாட்னர் ‘ படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றிய ஷபீர் அஹமது இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

பியார் பிரேமா காதல் என்கிற ஹிட் படத்திற்கு படத்தொகுப்பு செய்த மணிகுமரன் சங்கரா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இவர் தற்போது விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் படங்களின் எடிட்டராக வலம்வரும் ரூபனின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கு, கிகோரி ஆகிய படங்களுக்கு இசையமைத்த கவாஸ்கர் அவினாஷ் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பெண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் பெண்களுக்கு மத்தியில் எதிர்பாராத விதமாக நடக்கும் திகில் நிகழ்வுதான் படத்தின் கதை. அதை மையப்படுத்தி முழுநீள த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறது.

இதன் படப்பிடிப்பு முழுவதையும் ஊட்டியில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். வரும் அக்டோபர் மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Kanchana 3 actress is on board for Gate

அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.; அஜித் அறிக்கை..; என்னாச்சு.?

அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது.; அஜித் அறிக்கை..; என்னாச்சு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithகடந்தாண்டில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அஜித் ரசிகர்கள் பா.ஜ.கவில் இணைந்ததாக செய்திகள் வெளியானது.

உடனே தன் வக்கீல் சார்பாக மறுப்பு அறிக்கை வெளியிட்டார் அஜீத்.

அரசியல் கட்சிகளிடையே தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

தற்போது அஜித் பெயரை முன்னிலைப்படுத்தி ஒரு சிலர் திரைத்துறையில் ஆதாயம் அடைவதாக தகவல்கள் வெளியானது.

அதாவது அஜித் & ஏஜிஎஸ் இடையே திரைப்படம் ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், இதனை ஏஜிஎஸ் நிறுவனம் மறுத்து செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அஜித்தின் வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். அதில்…

‘சுரேஷ் சந்திரா என்பவர் மட்டுமே தனது மேலாளர் எனவும், சினிமா துறை தொடர்பாக எனது நேரடி மேலாளர் வழியாக மட்டுமே தொடர்பு இருக்க வேண்டும் எனவும் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தி உள்ளார்.

அவர் தவிர வேறு யாரிடமாவது வர்த்தக ரீதியாக தொடர்பு கொண்டால் நான் பொறுப்பாக முடியாது என தெரிவித்துள்ளார்.

இதோ அவரின் அறிக்கை…

ajith press statement

IMG-20200917-WA0077

Actor ajiths legal notice about a shocking fraud

தலைவா உன்னை அரியணையில் ஏற்றாமல் போய்விடுவேனோ.?; மரண படுக்கையில் இருந்த ரசிகருக்கு ரஜினி வாய்ஸ் (ஆடியோ)

தலைவா உன்னை அரியணையில் ஏற்றாமல் போய்விடுவேனோ.?; மரண படுக்கையில் இருந்த ரசிகருக்கு ரஜினி வாய்ஸ் (ஆடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையைச் சேர்ந்த ரஜினி ரசிகரான இளைஞர் முரளி தற்போது மும்பையில் வசிக்கிறார்.

இந்த ரசிகர் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கொரோனாவில் பெற்றோரை இழந்தவர். தற்போது இவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது கிட்னி இரண்டும் செயலிழந்த நிலையில் ட்வீட்டர் தளத்தில் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டிருந்தார்.

அவரின் மகன் தர்சனின் ட்விட்டர் பக்கத்தில்…

தலைவா ரஜினிகாந்த்.. என் இறுதி ஆசை… 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மிக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் ரூ. 25000 என்ற நிலையை உருவாக்கி கொடு.

உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரு வருத்தம் என உருக்கமாக பதிவிட்டுள்ள்ர்.

இதனையறிந்த ரஜினிகாந்த் தன் ஆடியோவில்..

முரளி கண்ணா.. நீ நிச்சயம் குணமடைந்து வருவாய்… என் வீட்டிற்கு உன் குடும்பத்துடன் வா. நாம் சந்திப்போம்.

நம்பிக்கையுடன் இரு. நான் இறைவனிடம் உனக்காக பிரார்த்தனை செய்கிறேன் என பேசியுள்ளார்.

இந்த ஆடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினியின் ஆடியோவை கேட்ட அந்த ரசிகர் உற்சாகமாகி குணமடைந்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

தற்போது அவருக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாம்.

Rajinikanth wished his fan for speedy recovery

More Articles
Follows