முதன் முறையாக 5 மொழிகளில் அசத்த வரும் ‘மாஸ்டர்’ விஜய்

முதன் முறையாக 5 மொழிகளில் அசத்த வரும் ‘மாஸ்டர்’ விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Master movie will release in 5 languagesமாநகரம், கைதி ஆகிய இரு வெற்றி படங்களை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இந்த படத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் இப்பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறதாம்.

இதற்கான பணிகளை விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

விஜய் நடித்துள்ள ஒரு படம் 5 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆவது இதுதான் முதன்முறை எனவும் கூறப்படுகிறது.

Vijays Master movie will release in 5 languages

கொரோனாவினால் தன் திருமணத்தை தள்ளி வைத்த புஷ்பா பட நடிகர்

கொரோனாவினால் தன் திருமணத்தை தள்ளி வைத்த புஷ்பா பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Raj Deepak postpones his wedding due to covid 19 lock down‘பஞ்சதந்திரா, பர்ஜரி, கோடிகொப்பா-3’ உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நடித்துள்ளவர் கன்னட நடிகர் ராஜ் தீபக்.

அல்லு அர்ஜீன் நடிப்பில் உருவாகவுள்ள புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் இவர்.

ஏற்கெனவே சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவருக்கும், மங்களூருவைச் சேர்ந்த சோனியா ரோட்ரிக்ஸ் என்பவரும் மே மாதம் 17-ந் தேதி திருமணம் செய்யவிருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தங்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.

Actor Raj Deepak postpones his wedding due to covid 19 lock down

ஊரடங்கிலும் ‘பூதாளம்’ படத்தை ரிலீஸ் செய்த மன்சூர் அலிகான்

ஊரடங்கிலும் ‘பூதாளம்’ படத்தை ரிலீஸ் செய்த மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mansoor Ali khans new movie about politics in Agricultureடெரர் வில்லன், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகத்திறன் கொண்டவர் மன்சூரலிகான்.

சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் அடிக்கடி கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக பிரச்சினைகள் தொடர்பாக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.

இன்று ஏப்ரல் 22 சர்வதேச பூமி தினத்தை முன்னிட்டு, பூமிக்கு வர இருக்கும் ஆபத்துகள் குறித்தும், அதில் இருந்து நாம் பூமியை காக்க வேண்டும், என்றால் என்ன செய்ய வேண்டும் என்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ‘பூதாளம்’ என்ற குறும்படத்தை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார் மன்சூரலிகான்.

தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியதோடு, வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் மன்சூரலிகானும் நடித்துள்ளார்.

‘பூதாளம்’ குறும்படம், பூமி எப்படி இயங்குகிறது என்பதை பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும்படி எளிய முறையில் விவரித்துள்ளார்.

விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக பூமியில் தோண்டப்படும் சுரங்கங்கள் மூலம் ஏற்படும் விளைவுகளையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் மன்சூர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா பிரச்சினையில், எத்தனை கோடி பணம் வைத்திருந்தாலும் அவர்களின் முதல் தேவையான காய்கறிகளும், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் மட்டுமே இருக்க, அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், அதற்கான இடமும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெருகிறது, என்பதை நாட்டு மக்கள் தற்போது ஓரளவு புரிந்திருக்கும் நிலையில், மன்சூரலிகானின் ‘பூதாளம்’ குறும்படம் விவசாய நிலங்களை அழித்து அப்பார்மெண்ட்கள் கட்டும் வியாபாரிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக போகும் சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் சாட்டையடியையும் கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் உலகமே கொண்டாடும் பூமி தினமான இன்று வெறும் வாழ்த்துகள் சொல்வதோடு நின்றுவிடாமல், பூமிக்கு வர இருக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த ஒவ்வொரு மனிதரும் தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும், என்ற எண்ணத்தில் நடிகர் மன்சூரலிகான் தயாரித்து, இயக்கி நடித்து வெளியிட்டிருக்கும் இந்த ‘பூதாளம்’ குறும்படம் ஆபத்தை அறியா மக்களுக்கான எச்சரிக்கையாக இருக்கிறது.

Mansoor Ali khans new movie about politics in Agriculture

 

மே 3க்கு பிறகு ஊரடங்கு நீடிப்பு..? ஏப்ரல் 27ல் பிரதமர் பரிசீலனை

மே 3க்கு பிறகு ஊரடங்கு நீடிப்பு..? ஏப்ரல் 27ல் பிரதமர் பரிசீலனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Corona lock down extends after 3rd May 2020கொரோனா என்ற கொடிய வைரசால் உலகமே கடும் பாதிப்படைந்துள்ளது.

தினமும் உயிர் பலி பல ஆயிரங்களை தொட்டு வருகிறது.

உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 25 லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த தொற்றுக்கு எப்போது முடிவு? என உலகமே காத்திருக்கிறது.

இந்த தொற்றை கட்டுப்படுத்த மேலும் பரவாமல் தடுக்க உலகின் பல நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.

இந்தியாவிலும் 2வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வரும்
ஏப்ரல் 27-ம் தேதி வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிய வந்துள்ளது.

அப்போது இந்த ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என்பது குறித்து தெரிய வரும்.

Will Corona lock down extends after 3rd May 2020

BREAKING கொரோனா நிவாரணம்; இந்திய மாநிலங்களுக்கு விஜய் நிதியுதவி

BREAKING கொரோனா நிவாரணம்; இந்திய மாநிலங்களுக்கு விஜய் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalapathy Vijay donated Rs 1 c 30 lakhs to Corona relief fundகொரோனா வைரஸ் தொற்றால் நிறைய உயிர்களை நாம் இழந்து வருகிறோம்.

இதனை தடுக்க இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் நடிகர் விஜய்யும் தற்போது (ஒரு மாதத்திற்கு பிறகு) கொரோனா தடுப்பு நிவாரண நிதிகளை வழங்கியுள்ளார்.

இதனை அவரது மக்கள் தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

விஜய் அளித்து நிவாரண நிதி தொகை விவரம் வருமாறு….

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் கொடுத்துள்ளார்.

தமிழகம் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளார்.

கேரளா நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம்

பெப்சி சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 25 லட்சம்

ஆந்திரா முதல்வர் ரூ. 5 லட்சம்

தெலுங்கானா முதல்வர் ரூ. 5 லட்சம்

கர்நாடகா முதல்வர் ரூ. 5 லட்சம்

புதுச்சேரி முதல்வர் ரூ. 5 லட்சம்
ஆக மொத்தம் ரூ. 1 கோடியே 30 லட்சம் தொகையை வழங்கியுள்ளார்.

இவையில்லாமல் ரசிகர்கள் மன்றம் மூலமாகவும் விஜய் உதவி வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

Thalapathy Vijay donated Rs 1 cr 30 lakhs to Corona relief fund

3 படங்களின் 2ஆம் பாகத்தை தயாரிக்கும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட்

3 படங்களின் 2ஆம் பாகத்தை தயாரிக்கும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

3 movies Sequels of Thirukumaran Entertainment on floorஅட்டக்கத்தி, பீட்ஸா, சூதுகவ்வும், தெகிடி, இறுதிச் சுற்று, இன்று நேற்று நாளை உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட்.

இதில் பீட்ஸா படத்தின் இரண்டாம் பாகம் மட்டும் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்த நிறுவனம் இன்று நேற்று நாளை படத்தின் 2ஆம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது என அறிவித்திருந்தது.

அது போல் தங்கள் நிறுவனம் தயாரித்த மற்ற படங்களில், எந்தப் படத்தின் 2-ம் பாகம் வேண்டும் என ரசிகர்களிடைய கருத்து கணிப்பு நடத்தியது.

அதில் ‘சூது கவ்வும் 2’, ‘தெகிடி 2’ மற்றும் ‘மாயவன் 2’ ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த வாக்கெடுப்பில் சூதுகவ்வும் 2 படத்துக்கு அதிகளவில் ஆதரவு கிடைத்துள்ளது.

மேலும் சூதுகவ்வும், தெகிடி, மாயவன் ஆகிய 3 படங்களின் 2 -ம் பாகத்துக்கான திரைக்கதை உருவாக்கம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

3 movies Sequels of Thirukumaran Entertainment on floor

More Articles
Follows