தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டீக்கடை பெஞ்ச் முதல் ஐடி கம்பெனி வரை உள்ள மக்களால் அதிகம் பேசப்படும் ஒரு விஷயமாக ரஜினியின் அரசியல் பேச்சு மாறிவிட்டது.
இந்நிலையில் தற்போது விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிப் பணிகளைப் பார்வையிட சென்றுள்ளார்.
அங்கு அவர் பத்திரிகையாளர்களிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசியதாவது…
“இது ஜனநாயக நாடு, இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம்.
ஆனால், மக்கள் தேர்ந்தெடுப்பவர்களே நாட்டை ஆள முடியும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை நாறிப்போய் உள்ளது.
அதிமுகவில் உள்ள இரு அணிகளுக்கும் மக்களைப் பற்றிய அக்கறை இல்லை.
யார் ஆட்சி செய்வது? இந்த நான்கு ஆண்டுகளை எப்படி கடத்துவது என்பதே அவர்களது சிந்தனையாக இருக்கிறது” என்றார்.
Vijayakanth talks about Rajinikanths political entry