தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு தினங்களுக்கு முன் தன் உடல்நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரின் உடல் நலம் குறித்த தகவல் இதோ…
தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…,
“திமுக ஆட்சி பற்றி விமர்சனம் செய்ய 6 மாதங்களாவது முடிந்திருக்க வேண்டும். இதுவரை திமுக ஆட்சியின் செயல்பாடுகள் நன்றாக உள்ளன.
தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அரசின் முடிவை வரவேற்கிறோம்.
பள்ளிகள், கல்லூரிகள் திறந்தநிலையில் மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் உடல்நல பரிசோதனைக்காக மட்டுமே வெளிநாடு சென்றுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதற்கான முடிவை தலைவர் விஜயகாந்த் சென்னை வந்தவுடன் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.
கூடுதல் தகவல்…
விஜயகாந்த்துடன் அவரது மனைவி பிரேமலதா செல்லவில்லை. அது ஏன்? பலரும் கேள்வி கேட்ட நிலையில் அதன் தகவல்கள் இதோ…
பிரேமலதா தனது பாஸ்போர்டை புதுபிக்கும் போது, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் கடந்த 2017ஆம் ஆண்டு தொடர்ந்த குற்ற வழக்கை மறைத்ததாக கூறி அவரின் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யுமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரி உத்தரவிட்டார்.
அதன்படி பாஸ்போர்ட் சரண்டர் செய்யப்பட்டது.எனவே பிரேமலதாவால் விஜயகாந்துடன் வெளிநாடு செல்ல முடியவில்லை.
இந்த நிலையில், பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து பிரேமலதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிரேமலதா சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, நெல்லையில் தொடரப்பட்ட குற்ற வழக்கு தொடர்பாக கீழ் நீதிமன்றதில் இருந்து எந்த ஒரு சம்மனும் வரவில்லை.
பிரேமலதா வழக்கு தொடர்பாக எந்த தகவலையும், மறைக்கவில்லை.
வெளிநாட்டில் சிகிச்சை பெறும் அவரது கணவருக்கு உடனிருந்து மனுதாரர் உதவ வேண்டியுள்ளது.
எனவே பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். பிரேமலதா எங்கும் தப்பி செல்லமாட்டார் என வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன், “பிரேமலதாவின் பாஸ்போர்டை உடனடியாக திரும்ப வழங்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
Vijaya Prabakaran about Vijayakanth health