ஆர்ப்பாட்டமில்லாமல் வெளியான விஜய்சேதுபதியின் 96 பர்ஸ்ட் லுக்

ஆர்ப்பாட்டமில்லாமல் வெளியான விஜய்சேதுபதியின் 96 பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

96 movie press meetஒரு படம் உருவாகும்போதே தலைப்பிட்டு அதற்கான பூஜை போட்டு தொடங்குவது வழக்கம்.

ஆனால் அண்மைகாலமாக சூட்டிங் நடந்துக் கொண்டே இருக்கும்.

ஒருநாள் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும். அது படத்தின் தலைப்பாக இருக்காது.

படத்தின் தலைப்பை எப்போது அறிவிக்கப் போகிறோம்? என்பதை இன்று மாலை அறிவிப்போம் என்பார்கள்.

உடனே அது டிரெண்டாகும். பின்னர் அறிவிப்பு வந்த உடன் அந்த தேதி டிரெண்டாகும்.

அதன்பின்னர் பர்ஸ்ட் லுக், டீசர் 1, டீசர் 2, டிரைலர் 1, டிரைலர் 2 என வெளியாகும்.

இதனையடுத்து சிங்கிள் ட்ராக் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியாகும். அதன் பின்னர் பாடல் வரிகள் கொண்ட வீடியோ வெளியாகும்.

படம் வெளியாகும் சில தினங்களுக்கு முன்னர் சீனிக் பீக் என்ற படத்தின் ஒரு காட்சி வெளியாகும்.

இதுதான் நவீன கால சினிமாவின் மார்கெட்டிங் தந்திரம் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல் சத்தமின்றி 96 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

ஆனால் இப்படத்தின் தலைப்பு இப்படி சில டிரெண்ட்டிங்கில் இடையே வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதில் விஜய்சேதுபதி அருகில் ஒரு கேமரா இருக்கிறது. எனவே அவர் கேமராமேனாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதில் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம் குமார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படம் பள்ளிப்பருவத்தில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi Trisha starring 96 first look released

vijay sethupathi 96 first look

அஜித் இடத்தை பிடிக்கும் போட்டியில் தனுஷ்-உதயநிதி

அஜித் இடத்தை பிடிக்கும் போட்டியில் தனுஷ்-உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush udhayanithiஅஜித் நடிப்பில் உருவாகியள்ள விவேகம் படம் ஆகஸ்ட் 10ல் வெளியாகும் என பல மாதங்களாக கூறப்பட்டது.

ஆனால் படக்குழுவினர் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் மௌனம் காத்தனர்.

அஜித் படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கும் என்பதால் அதிக தியேட்டர்கள் கிடைப்பதில் மற்ற படங்களுக்கு சிரமம் ஏற்படும்.

எனவே இப்படத்துடன் மோதாமல் வேறு தேதியை சில படங்கள் முடிவு செய்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் திடீரென விவேகம் ரிலீஸ் ஆகஸ்ட் 24 என அறிவித்தார் இயக்குனர் சிவா.

எனவே ஆகஸ்ட் 10ஆம் தேதியை குறிவைத்து படங்களின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுநாள் வரை விரைவில் ரிலீஸ் என உதயநிதியின் பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்தின் விளம்பரங்களை வெளியிட்டனர்.

ஆனால் விவேகம் தள்ளிப்போனதால் விரைவில் வருகிறோம் என தெரிவித்து போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

எனவே ஆகஸ்ட் 10ல் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

மேலும் இதேநாளில் தனுஷ் நடித்துள்ள சௌந்தர்யா ரஜினியின் விஐபி2 படமும் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

விஐபி2 படத்தின் ரிலீஸ் தேதியை நாளை மாலை 7 மணிக்கு அறிவிக்க உள்ளனர்.

Dhanush and Udhayanithi may clash on August 10th due to Vivegam postponed

pemt coming soon

 

தள்ளிப்போனது விவேகம்; ரிலீஸ் தேதியை அறிவித்தார் சிவா

தள்ளிப்போனது விவேகம்; ரிலீஸ் தேதியை அறிவித்தார் சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith vivegam posterஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள விவேகம் படத்தை சிவா இயக்கியுள்ளார்.

சத்யஜோதி தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்கு இன்று சென்சார் செய்யப்பட்டது.

ஆனால் இதற்கு யு கிடைத்துள்ளதா? அல்லது யுஏ கிடைத்துள்ளதா? என்ற விவரங்களை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிக்கவில்லை.

ஆனால் யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார் இயக்குனர் சிவா.

ஆகஸ்ட் 10ல் ரிலீஸ் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் என தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Director Siva announced release date of Vivegam

siva+director‏ @directorsiva 2m2 minutes ago
Sai sai #vivegam from 24th august super happy god bless us all

கமலுக்கு ஆதரவும் கோரிக்கையும் வைத்த குஷ்பூ

கமலுக்கு ஆதரவும் கோரிக்கையும் வைத்த குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal kushbooதமிழக அரசியல் அவலத்தை தன் பேட்டிகளாலும் அறிக்கைகளாலும் கண்டித்து வருகிறார் கமல்ஹாசன்.

மேலும் தான் ஊழலுக்கு எதிரானவன் என்றும் ஒரு கட்சிக்கு எதிரானவன் இல்லை எனவும் பேட்டிகளில் குறிப்பிட்டு வருகிறார்.

எனவே, இவரை ஒரு சிலர் எதிர்த்தும் பலர் ஆதரித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சி பிரமுகருமான குஷ்பு தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.

தற்போது குஷ்பூ ட்விட்டர் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதால், பேஸ்புக்கில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்… ‘தைரியமாக இருங்கள் நண்பரே, உங்களுக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு.

உண்மையின் பக்கம் எப்போதும் நீங்கள் நிற்க வேண்டும் எனவும் அதில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Kushboo support Kamals stands against Corruption

kamal kushboo

அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றும் விவேகம் டீம்

அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றும் விவேகம் டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith fans angry on Vivegam team due to Censor Certificate updatesஇன்று காலை முதலே ட்விட்டர் மற்றும் பேஸ்புக் வலைத்தளங்கள் பரபரப்பானது.

அதற்கு முக்கிய காரணம் அஜித் நடித்துள்ள விவேகம் படம் சென்சார் செய்யப்பட்டு வருகிறது என்ற தகவலே.

பெரும்பாலும் அஜித் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் காத்திருந்தனர் என்பதை பார்த்தோம்.

ஆனால் மதியத்திற்கு பிறகு யு சான்றிதழ் கிடைக்கவில்லை எனவும் படத்தில் அதிகம் சண்டைக் காட்சிகள் இருப்பதால் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது எனவும் செய்திகள் வந்துள்ளன.

ஆனால் சிவா மற்றும் சத்யஜோதின் உள்ளிட்ட படக்குழுவினர் இதுபற்றி ஒன்றுமே தெரிவிக்கவில்லை.

எனவே எதை நம்பலாம்? எதை நம்பக்கூடாது என படக்குழு மீது கடுப்பில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.

Ajith fans angry on Vivegam team due to Censor Certificate updates

தொழிலாளர்களுக்காக மட்டுமே சினிமா அல்ல… விஷால் கடிதம்

தொழிலாளர்களுக்காக மட்டுமே சினிமா அல்ல… விஷால் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer council President Vishal letter to FEFSIதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு…

பெறுநர்

திரு. செல்வமணி மற்றும் நிர்வாகிகள்,
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்
சென்னை.

அன்புடையீர் வணக்கம்

தற்போது நிலவி வரும் பிரச்சனைகள குறித்த தங்கள் கடிதம் ஊடகங்கள் மூலம் கிடைத்தது. அதில் உங்களதுபக்க நிலைகளையும் நியாயங்களையும் விளக்கியிருந்தீர்கள்.

மேலும் தயாரிப்பாளர் சங்கத்துடன் மீண்டும் இணைந்து செயல்படுவது குறித்து விருப்பம் தெரிவித்து எழுதியதும் மகிழ்ச்சி. எனினும் ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருப்பது வருத்தத்திற்குரியது.

இந்நிலையில் நாங்கள் வழக்கம்போல தயாரிப்பு பணிகளில் ஈடுபட உள்ளோம். ஆகவே எங்கள் உறுப்பினர்களின் படப்பிடிப்பிற்கு எந்தவொரு தடங்கலும் ஏற்படுத்த வேண்டாம் என உங்கள் உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறோம்.

அவ்வாறு நிகலும் பட்சத்தில் நாங்கள் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இந்த நேரத்தில் தங்களுக்கு ஒரு விஷயத்தினை தெளிவுபடுத்த விரும்புகிறோம். தொழிலாளர்கள் என்றைக்கும் எங்களுக்கு எதிரிகள் கிடையாது. ஏனெனில், தொழிலாளர்கள் மூலமே பல திரைப்படங்கள் நல்ல முறையில் உருவாகி திரைதுறைக்கு பல நற்பலன்கள் கிடைத்துள்ளது. அவ்வகையில் நாங்கள் எந்த ஒரு நிலையிலும் பெப்சியுடன் இணைந்து செயல்பட மாட்டோம் என்று கூறவில்லை.

ஆனால் பெப்சியுடன் மட்டும் தான் வேலை செய்யவேண்டும் என்பதை மட்டுமே மறுக்கிறோம். முந்தைய காலகட்ட சினிமாவில், தயாரிப்பு தொழில் நன்றாக இருந்தது, ஆனால் இன்றைய சூழலில் தயாரிப்பு தொழில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

அதே வேலையில் தயாரிப்பு தொழில் சார்ந்த மற்ற அனைத்து தொழில்களும் நன்றாக உள்ளதும் தாங்கள் நன்கு அறிந்ததே. இங்கு காலங்காலமாக முறையற்று வாங்கிவரும் பொது விதிகள் சார்ந்த சம்பளங்கள் சிலவற்றை தான் தற்போது முறைப்படுத்துகிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை நடக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட சங்கம் பிரச்சனை எற்படுத்துவதும், அதில் தயாரிப்பாளர்கள் ஒரு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டு, அதன் மூலம் பெப்சியே வேண்டாம் என்று முடிவு எடுப்பதும், பின்பு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு மீண்டும் உறவை தொடர்வது என்பதும் வாடிக்கையாக உள்ளது, ஆனால் இதே விசயம் ஆண்டாண்டு காலமாக திரும்ப திரும்ப நடப்பது வேடிக்கையாகவும் உள்ளது.

இதில் தயாரிப்பாளர்கள் பக்க நியாயங்களை யாரும் இன்றுவரை சிந்தித்ததே இல்லை என்பது வருத்தத்திற்குரியது. ஆகவே நமக்கு இடையிலான உறவுக்கு என்றுமே அந்நிய சக்திகள் பங்கம் விளைவித்தது இல்லை என்பதையும், உங்களில் ஒரு அங்கமாக விளங்கும் டெக்னீஷியன் யூனியன் மட்டுமே என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டு உள்ளோம்.

மேலும் இந்த சங்கத்தின் தவறுகளுக்கு சாதகமாகவே சம்மேளனம் என்றும் இருப்பதை பார்க்கையில் ஒரு 40 ஆண்டுகால அமைப்பு சினிமா தொழிலுக்காகத் தான் தொழிலாளர்களே தவிர்த்து தொழிலாளர்களுக்காக மட்டுமே சினிமா அல்ல என்பதை மறந்துவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.

25 ஆயிரம் குடும்பங்களை கொண்ட ஒரு அமைப்பை கட்டுக்கோப்புடன் வழிநடத்தி அவர்கள் நலன் காப்பது கடினம் என்பதை அறிந்த தங்களுக்கு 10,00,000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் தயாரிப்பு தொழிலை செய்துவரும் தயாரிப்பாளர் நலன் காப்பது எவ்வளவு கடினம் என்பதை அதன் நிர்வாகக்குழுவில் அங்கமாகவும் இருந்த தங்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்துவது தேவையற்றது என கருதுகிறோம்.

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகியை குறிப்பிட்ட டெக்னீஷியன் யூனியனில் உள்ள திரு.தனபால் கீழ்தரமான வார்த்தைகளால் விமர்சித்தது எங்களை பெரிதளவில் காயப்படுத்தியிருந்தாலும் சினிமா தொழிலின் தாய் ஸ்தானதில் உள்ள அமைப்பாக நாங்கள் இந்த விசயத்தை புறந்தள்ளுகிறோம்.

ஆனால் டெக்னீஷியன் யூனியன் எனும் அமைப்பு எல்லா காலகட்டத்திலும் தயாரிப்பு தொழிலுக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளது என்கிற அடிப்படையில் அந்த ஒரு அமைப்புடன் மட்டும் எங்களால் என்றைக்கும் தொழில் உறவை தொடர முடியாது.

இது அவர் தனிப்பட்ட முறையில் திட்டியதற்காக எடுத்த முடிவு இல்லை. ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு தொழில் சார்ந்த அனைவரின் நலன் காக்க எடுத்த முடிவு ஆகும்.

இப்பவும் நாங்கள் தொழிலாளர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. எங்களுக்கு என்றும் தொழிலாளர்கள் வேண்டும். பெப்சியுடன் இணைந்து பணியாற்ற எங்களுக்கு விருப்பம் தான்.

ஆனால் டெக்னீஷியன் யூனியனுடன் முழுவதுமாக இனி இணைந்து செயல்பட முடியாது. மேலும் பில்லா பாண்டி தயாரிப்பாளருக்கு எற்பட்ட இழப்பை ஈடு செய்யும் பட்சத்தில் மற்ற சங்கங்கள் குறித்த சம்பள பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்த எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை.

நன்றி

நிர்வாகிகள் தயாரிப்பாளர்கள் சங்கம்
சென்னை

SIFCC vishal team

More Articles
Follows