தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமான ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறது.
இதன் படப்பிடிப்பை செம்டம்பரில் தொடங்கவுள்ளதால், படத்தின் கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகவிருப்பதால் சங்கமித்ரா என பெயரிடவுள்ளதாக கூறப்படுகிறது.
இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், கலைக்கு சாபு சிரில், கிராபிக்ஸ் பணிகளுக்கு ஆர்.சி. கமலக்கண்ணன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் நடிக்க விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவரிடமும் பேசி இருக்கிறார்களாம்.
ஆனால் இருவரில் தரப்பில் இருந்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை.
இருந்தாலும் டாப் ஹீரோ ஒருவரைத்தான் இப்படத்தில் நடிக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறாராம் சுந்தர் சி.