விஜய் படத்தை பாடமாக படிக்கப் போகும் மாணவர்கள்

விஜய் படத்தை பாடமாக படிக்கப் போகும் மாணவர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and Shankar combo Nanban movie will be a subject for Delhi University Studentsபிரபல நாவல் எழுத்தாளர் சேத்தக் பகத்.

இவர் எழுதியுள்ள நாவல்களில் சில நாவல்கள் படமாக உருவாக்கப்பட்டது.

சமீபத்தில் இவர் எழுதிய Half Girlfriend என்ற புத்தகம் அர்ஜுன் கபூர், ஸ்ரத்தா கபூர் நடிக்க அதே பெயரிலேயே படமாக்கப்பட்டது.

வருகிற மே 19ம் இப்படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இவர் எழுதிய மற்றொரு நாவலான Five Point Someone என்ற கதை தற்போது டெல்லி யூனிவர்சிட்டியில் இலக்கிய பாடமாக அமையவுள்ளதாம்.

இதே நாவல்தான் அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் என்ற பெயரில் உருவானது.

மேலும் இந்த படத்தை நண்பன் என்ற பெயரில் விஜய் நடிக்க, ஷங்கர் ரீமேக் செய்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vijay and Shankar combo Nanban movie will be a subject for Delhi University Students

‘ஜெயா ஆவி தெர்மாகோல்; சரவணா ஸ்டோர் ஓனர்…’ கலாய்த்த ராதாரவி

‘ஜெயா ஆவி தெர்மாகோல்; சரவணா ஸ்டோர் ஓனர்…’ கலாய்த்த ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radharavi funny speech about Thermocol and Saravana Store Ownerஅட்லி தயாரிப்பில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதாரவி, ராதிகா சரத்குமார், சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’.

இப்படத்தை எம்.ஆர்.ராதாவின் பேரன், ஐக் இயக்கியுள்ளார்.

இதன் பாடல் வெளியீட்டு விழா கலந்துக் கொண்ட ராதாரவி வழக்கம்போல கலாய்த்து பேச ஆரம்பித்தார்.

அவர் பேசியதாவது…

‘கமல் இங்கே பேசும்போது ஆவி படங்கள் மற்றும் தெர்மாகோலை பற்றி பேசினார். அவர் சொன்னதை நானும் நினைச்சேன்.

அந்த தெர்மாகோலை அந்த அம்மா (ஜெயலலிதா) மேல போட்டிருந்தா, அவங்க ஆவி போயிருக்காது. அந்த ஆவி தப்பிச்சிருக்கும்ல.

இந்த ஐடியா அமைச்சர் செல்லூர் ராஜூக்கு ஏன் அப்பவே தோனலை.?

இதை நான் சொல்ல காரணம். நான் அந்த அம்மாவை நம்பிதான் இருந்தேன்.

அரசியல் சினிமா போல இப்ப எல்லாம் வாரிசு சீசன்தான்.

விளம்பரத்துல சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் ஆடும்போதே அவர் சினிமாவுக்கு வருவார்ன்னு நினைச்சேன்.

ஹ்ம்… இப்போ சினிமா கெட்டுப்போச்சி.

நான் இப்படி பேசினா, அவராலதான் சினிமா கெட்டுப்போச்சுன்னு ராதாரவி சொன்னார்னு தலைப்பு செய்தியில போட்டுருவாங்க.

அவரு குறைஞ்ச விலையில பொருள் கொடுத்துட்டு வர்றாரு. அதை கெடுத்துடாதீங்க’ என்றார்.

குறிப்பு : சினிமாவில் சரவணா ஸ்டோர் ஓனர் நடிக்கவில்லை என அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ராதாரவி இப்படி கிண்டலடித்து பேசியதால், அவர் சீக்கிரமே சினிமாவில் நடித்தாலும் ஆச்சரியத்திற்கில்லை.

Radharavi funny speech about Thermocol and Saravana Store Owner

பவர் பாண்டிக்கு முன்பே தனுஷ் இயக்கிய படங்கள்

பவர் பாண்டிக்கு முன்பே தனுஷ் இயக்கிய படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush art facesநடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என வெற்றி பவனி வந்தாலும், தனுஷ் இயக்கிய முதல் படம் பவர் பாண்டி என சொல்லப்பட்டது.

ஆனால் பவர் பாண்டிக்கு முன்பே கிட்டதட்ட 14 குறும்படங்களை இயக்கிவிட்டாராம் தனுஷ்.

இதை சமீபத்திய பேட்டியில் தனுஷ் உறுதி செய்துள்ளார்.

இந்த குறும்படங்களை இயக்கி, பெற்ற அனுபவம் மூலமே பவர் பாண்டி படத்தை தன்னால் இயக்க முடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Before Power Paandi movie Dhanush directed 14 short films

மத்திய-மாநில அரசுகளுக்கு தயாரிப்பாளர் சங்க கோரிக்கைகள்

மத்திய-மாநில அரசுகளுக்கு தயாரிப்பாளர் சங்க கோரிக்கைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Film Producer Council demands to Central and State Governmentsதென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து விஷால் பல்வேறு திட்டங்கள் அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்து, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அவை பின்வருமாறு…

மத்திய அரசுக்கு நம் வேண்டுகோள் மற்றும் கோரிக்கைகள்

1.) GST என்கிற புதிய வரிக் கொள்கையில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது எங்கள் திரைப்பட துறையே.

2.) திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு கலை. ஒரு படைப்பு. அப்படி தயாராகி மக்கள் பார்வைக்கு செல்லும் போது மட்டுமே அங்கு வணிகம் என்கிற நிலை வருகிறது எனவே திரைப்படம் முழுமையாகி வெளியிட தயாராகும் வரை மிகவும் குறைந்த பட்ச வரி விதிப்பாக 4 அல்லது 5 சதவிகிதம் மட்டுமே GST யாக இருக்க வேண்டும்.

3.) திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடும் போது தமிழ் திரைப்படங்களுக்கு குறைவாக GST விதிக்கப்படவேண்டும்.

4.) மத்திய அரசு புதிய மற்றும் உரிமை இல்லாத திரைப்படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள் இதே தொழிலாக செய்து கொள்ளையடிக்கும் தொலைபேசி மற்றும் இணைய சேவை நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். மத்திய அரசாங்கம் இதற்காக தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

5.) புதிய திரையரங்குகளுக்கு 5 வருடம் GST மற்றும் பலவித வரிகளில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும்.

6.) திரைப்பட தொழிலையும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக நினைத்து மற்ற தொழில் செய்வோருக்கு இருக்கும் அனைத்து வசதிகளையும் மரியாதையையும் அளிக்க வேண்டும். இது எங்கள் 75 வருட கோரிக்கை.

மாநில அரசுக்கு எங்கள் வேண்டுகோள்

1.) திரையரங்கு கட்டணமுறையில் பெரும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய காலம் இது.
திரையரங்குகளின் தன்மை, இருக்கும் இடம், ரசிகர்களுக்கு தரும் வசதிகள், பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சிறப்பு கட்டணம் என பலவகை மாற்றங்கள் கொண்டு வர அரசு எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

2.) திருட்டு வி.சி.டி ஒழிப்பில் மாநில அளவில் காவல்துறையின் சிறப்பு தடுப்பு பணியில் குறைந்தபட்சம் 1௦௦௦ நபர் கொண்ட டீம் அமைக்க பட வேண்டும். இப்போது இருக்கும் 96 நபர்கள் கொண்ட டீம் போதவில்லை.

3.) திரைப்பட துறையினரே இந்த பைரசி தடுப்புக்கு என ஒரு அணி அமைத்து போராட அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.

4.) அரசு கேபிள் தலைமையில் உள்ள கேபிள் டி.வி ஆபரேட்டர்களும் மற்றும் சில தனியார் கேபிள் டிவி தலைமையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எங்கள் திரைப்படங்களை முழுமையாகவும் சில காட்சிகளாகவும், பாடல் காட்சிகளாகவும் 24மணி நேரமும் தொடர்ந்து ஒளிபரப்பும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. இதை இரும்பு கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.

5.) உரிமம் இன்றி திரைப்படங்கள் மற்றும் காட்சிகள் ஒளிபரப்பும் பேருந்துகள் அனைத்திற்கும் அவற்றின் தொழில் உரிமமே ரத்து ஆகும் வகையில் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

6.) ஒரே இடத்தில் இரு திரையரங்குகள் இருப்பின் அவற்றை “ Multiplex” என்ற பெயரிலேயே கருத வேண்டும்.

7.) ஒரு திரையரங்கு உள்ள இடத்தில் இரண்டு அல்லது மூன்று சிறிய திரையரங்குகளாக மாற்றிக்கொள்ளும் உரிமை உரிமையாளர்களுக்கு தரப்பட வேண்டும். அதற்கான அனுமதிகள் எளிமையாக்கப்பட வேண்டும்.

8.) இந்த துரையின் உடனடி வளர்ச்சிக்கு சிறிய அரங்குகள் ( மினி தியேட்டர் ) மாநிலம் முழுவதும் கட்டப்படவேண்டும். இதற்கான அனுமதி முறைகள் எளிதாக்கப்பட வேண்டும்.

மேலும் திரையரங்குகள் புதிதாக அமைக்கவும் புதுபித்து கொள்ளவும் அனுமதி , விண்ணப்பம் 6௦ நாட்களில் வழங்கப்பட வேண்டும். (தெலுங்கானா அரசு இதனை சிறப்பாக அமுல்படுத்தியுள்ளது.)

Tamil Film Producer Council demands to Central and State Governments

Tamil Film Producer Council demands to Central and State Governments

தாதா சாகேப் பால்கே விருது பெறும் கே.விஸ்வநாத்துக்கு ரஜினி-கமல் வாழ்த்து

தாதா சாகேப் பால்கே விருது பெறும் கே.விஸ்வநாத்துக்கு ரஜினி-கமல் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal and Rajini praises Legend K Viswanath for winning Dadasaheb Phalke Awardபழம்பெரும் தெலுங்கு இயக்குனரும் நடிகருமான கே.விஸ்வநாத் அவர்களுக்கு மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு அறிவித்தது.

எனவே, கே.விஸ்வநாத் அவர்களுக்கு மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரும் தங்கள் வாழ்த்துக்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் இதுவரை ஒரு படத்தில் கூட கே.விஸ்வநாத் அவர்களிடம் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மஸ்ரீ விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளவர் கே. விஸ்வநாத் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

My K.Vishwanath gaaru is a Dada Saheb Palke award winner. In his humility he would say ” I am lucky” .Truth is Indians are lucky. So am I

Kamal Haasan‏Verified account @ikamalhaasan
Thank u with glistening eyes Vishwanath gaaru for Sagara sangamam. Like Balu of S.S I initiate more applause. Your fame is mine vice versa

Rajinikanth‏Verified account @superstarrajini
I salute respected Shri K Viswanathji for being conferred with the much deserved honour … #DadasahebPhalkeAward

Kamal and Rajini praises Legend K Viswanath for winning Dadasaheb Phalke Award

k vishwanath top 5 movies

‘எம்ஜிஆர்-ரஜினிக்கு பிறகு அஜித்தான் மாஸ்…’ லிங்குசாமி

‘எம்ஜிஆர்-ரஜினிக்கு பிறகு அஜித்தான் மாஸ்…’ லிங்குசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith has mass screen presence after MGR or Rajini says Lingusamyவருகிற மே 1ஆம் தேதி நடிகர் அஜித், தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

இவர் லிங்குசாமி இயக்கிய ஜி படத்தில் கடந்த 2000ஆம் ஆண்டில் நடித்தார்.

அந்த சமயத்தில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு லிங்குசாமி கொடுத்த ஒரு பேட்டி ஒன்று அஜித் பிறந்தநாளையொட்டி தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அதில் அஜித் குறித்து லிங்குசாமி கூறியுள்ளதாவது…

தமிழ் சினிமாவில் ஓர் அழகான ஹீரோ அஜித். அவர் கேரக்டருக்காக தன்னையே இயக்குனரிடம் ஒப்படைத்து விடுவார்.

எம்ஜிஆர், ரஜினி ஆகியோர் சினிமாவில் தோன்றும்போது, ஒரு மாஸான ஃபீல் கிடைக்கும். அதுபோன்ற ஸ்கிரீன் பிரசன்ஸ் (Screen Presence) அஜித்திடம் உள்ளது.

நாங்கள் ஜி படத்தின் சூட்டிங்கை கும்பகோணத்தில் நடத்திய போது, ஒரு குழந்தைகள் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையறிந்த அஜித், எதைப் பற்றியும் கவலைப்படாமல், உடனே அங்கு சென்று உதவினார்.” என்று தெரிவித்துள்ளார் லிங்குசாமி.

Ajith has mass screen presence after MGR and Rajini says Lingusamy

ajith lingusamy Ji shooting

More Articles
Follows