AK62 – FIRST ANNIVERSARY : கிடைச்சத இழக்குறதும்.; விரக்தியில் விக்னேஷ் சிவன்.?!

AK62 – FIRST ANNIVERSARY : கிடைச்சத இழக்குறதும்.; விரக்தியில் விக்னேஷ் சிவன்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி அஜித் நடிக்கும் அவரின் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகியும் AK 62 படத்தின் ஷூட்டிங் இதுவரை தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்..

‘நானும் ரௌடிதான்’ பட பாடலை ஸ்டோரியாக வைத்துள்ளார். அதில்..

“கிடைச்சத இழக்குறதும், இழந்தது கிடைக்கிறதும் அதுக்கு பழகுறதும் நியாயம் தானடி. கொடுத்தத எடுக்குறதும், வேற ஒண்ணு கொடுக்குறதும் நடந்த மறக்குறதும் வழக்கம் தானடி” பாடல் வரிகளை பதிவிட்டு, “சில வரிகள் ஆழமான அரத்தங்களை கொண்டிருக்கின்றன” என பதிவிட்டுள்ளார்.

Vignesh Sivan’s emotional post about AK 62

ராஜமௌலி – கீரவாணிக்கு உற்சாக வரவேற்பு.; அமித்ஷாவிடம் ராம்சரண் ஆசி

ராஜமௌலி – கீரவாணிக்கு உற்சாக வரவேற்பு.; அமித்ஷாவிடம் ராம்சரண் ஆசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது அண்மையில் வழங்கப்பட்டது்

இதனையடுத்து படக்குழுவினருக்கு இந்தியா முழுவதும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனையடுத்து ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, அவர் மனைவி வள்ளி, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, அவர் மனைவி ரமா, பாடலாசிரியர் சந்திரபோஸ், பாடகர் காலபைரவா உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று காலை ஹைதராபாத் திரும்பினர்.

ஹைதராபாத் விமான நிலையத்தில் அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அங்கே திரண்டு வந்த ரசிகர்களிடம் ‘ஜெய்ஹிந்த்’ என கூறிவிட்டுப் சென்றார் இயக்குநர் ராஜமௌலி.

இந்த நிலையில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் நாயகன் நடிகர் ராம் சரண், தனது தந்தையும் நடிகருமான சிரஞ்சிவியுடன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்

இது குறித்து சிரஞ்சீவி தன் ட்விட்டர் பக்கத்தில்… “ராம் சரணை வாழ்த்தி ஆசீர்வதித்ததற்காக நன்றி அமித் ஷா ஜி. ஆஸ்கர் விருது வென்று வந்துள்ள ஆர்ஆர்ஆர் படக்குழு சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி.

Ram Charan got blessings from Amit shah

JUST IN ரஹ்மான் காலில் விழுந்த சிம்பு & கௌதம்.; கைகொடுத்த பிரியா பவானி சங்கர்

JUST IN ரஹ்மான் காலில் விழுந்த சிம்பு & கௌதம்.; கைகொடுத்த பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.

ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ஒபிலி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மார்ச் 18 தற்போது சென்னை நேரு ஸ்டேடியம் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவினை விஜய் டிவி புகழ் பாலா மற்றும் விஜே ரம்யா ஆகிய இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

அரங்கத்திற்குள் நுழைந்த சிம்புவை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பத்து தல.. கெத்து தல.. என்பது போல மாஸாக வந்து இறங்கி ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.

அதன் பின்னர் இசை நாயகன் ஏ ஆர் ரகுமான் அரங்கத்திற்குள் நுழைந்தார்.

அப்போது ரஹ்மானை கண்டதும் அவரை வரவேற்று படத்தின் நாயகர்கள் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் ரஹ்மானின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இவர்கள் அருகில் நின்ற நாயகி பிரியா பவானி சங்கர், ஏ ஆர் ரகுமானை வரவேற்று கை குலுக்கினார்.

Simbu and gautham karthik got blessings from AR Rahman

JUST IN விஜய் பேச்சு.. சூர்யா சீன்ஸ்.; ‘பத்து தல’ இசை விழாவில் சுவாரஸ்யம்

JUST IN விஜய் பேச்சு.. சூர்யா சீன்ஸ்.; ‘பத்து தல’ இசை விழாவில் சுவாரஸ்யம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன் கெளதம் கார்த்திக் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியம் அரங்கில் நடைபெற்று வருகிறது.

முற்றிலும் புதிய தோற்றத்தில் நடிகர் சிம்பு வந்திருந்தார். கிட்டத்தட்ட 10-15 வருடங்களுக்கு முன்பு சிம்பு எப்படி இருந்தாரோ.!? ‘காளை’ பட ஸ்டைலில் அவர் வந்திருந்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் சிம்பு வந்த பிறகு திரையில் காட்டப்பட்ட ஒரு காட்சியில் நடிகர் விஜய்யின் பேச்சு ஒளிபரப்பானது.

‘வாரிசு’ பட இசை வெளியீட்டு விழாவில் தளபதி.. தீதி என்ற பாடலை பாடிய சிம்புவுக்கு விஜய் நன்றி தெரிவித்திருந்தார். விஜய்யின் அந்த பேச்சு ஒளிபரப்பானது.

மேலும் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சூரியா 42 படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் காட்டப்பட்டது.

இதனைக் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்து கைதட்டி ரசித்தனர்.

Vijay dialogue and suriya scenes at pathu thala audio launch

JUST IN ‘பத்து தல’ படத்துக்கு ஆஸ்கர் கிடைச்சிருக்கும்.. ‘நாட்டுக்கூத்து’ விட சிம்பு குத்து சூப்பர்

JUST IN ‘பத்து தல’ படத்துக்கு ஆஸ்கர் கிடைச்சிருக்கும்.. ‘நாட்டுக்கூத்து’ விட சிம்பு குத்து சூப்பர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன் கெளதம் கார்த்திக் பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியம் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவினை விஜய் டிவி புகழ் பாலா மற்றும் விஜே ரம்யா ஆகிய இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

அரங்கத்திற்குள் நுழைந்த சிம்புவை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

அப்போது ரசிகர்கள் மைக்கில் பேசும்போது..

ஆஸ்கார் அவார்டு RRR பட பாடலுக்கு வழங்கப்பட்டது. இன்னும் 10 நாட்கள் காத்திருந்தால் பத்து தல படத்திற்கு கிடைத்திருக்கும் என்றார்.

மேலும் நாட்டுக் கூத்து பாடலை விட சிம்பு குத்திய குத்து சூப்பர் என்று ம் பேசினார்.

இதனை தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

@priya_Bshankar Elegant Entry😍 at #PathuThalaAudioLaunch
#Atman @SilambarasanTR_ & @Gautham_Karthik ⭐er #PathuThala Grand Audio Launch streaming LIVE 👉🏼 https://t.co/NqFlG7vegg

An @arrahman musical🎵
🎬 @nameis_krishna https://t.co/SDEyHkgiuK

Host says simbu would have been bagged oscar

ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே தலைவர்.; இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்த ரஜினி

ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே தலைவர்.; இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியை நேரில் காண வருமாறு நடிகர் ரஜினிகாந்த்தை மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவின் அழைத்து இருந்தார்.

என்னுடைய அழைப்பை ஏற்று ரஜினி இங்கு வந்தது மகிழ்ச்சி. நீண்ட நாட்களுக்குப்பிறகு ரஜினி வான்கடே மைதானத்திற்கு வந்தது எங்களுக்கு மிகப் பெரிய கௌரவம்” எனவும் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து அமோல் கலேவுடன் இணைந்து இந்த போட்டியை கண்டு ரசித்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில், இன்று இந்திய அணி வீரர்களான குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசியுள்ளார் ரஜினி.

அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள குல்தீப் யாதவ், “ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்” என தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

மேலும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரேவையும் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Super Star Rainikanth met indian cricketers

More Articles
Follows