தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2015ஆம் ஆண்டின் சிறந்த படங்கள் மற்றும் சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் சைமா விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டது.
இதில் ‘நானும் ரௌடிதான்’ படம் 5 விருதுகளை கைப்பற்றியது.
சிறந்த நடிகைக்கான விருதை, இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் இருந்து பெற ஆசைப்படுவதாக நயன்தாரா தெரிவித்தார் என்பதை முன்பே பார்த்தோம்.
சிறந்த இயக்குனர் விருதை விக்னேஷ் சிவன் பெற்றபோது… ”நயன்தாரா போல ஒரு சிறந்த நபரை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என்று நயன்தாராவைப் புகழ்ந்தார்.
அதுபோல் சிறந்த நடிகை விருதை பெற்ற நயன்தாராவும் விக்னேஷ் சிவனை வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து பேசினார்.
இந்த விழாவிற்கு சிங்கப்பூர் ஏர்போர்ட்டுக்கு வந்து இறங்கிய முதல் விழாவிலும் இருவரும் இணைந்தே காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.