தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரௌடிதான் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
இதனையடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வந்தன.
ஆனால் அப்படம் என்னவானது என்ற விவரம் தெரியாத நிலையில், விக்னேஷ் சிவன் தன் அடுத்த படத்தை இயக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இப்படத்தை நயன்தாரா தயாரித்து நாயகியாக நடிக்கக்கூடும் எனவும் தெரிய வந்துள்ளது.
இதில் ஒரு மாஸ் ஹீரோ நாயகனாக வேண்டுமென்பதால், அஜித்தின் கால்ஷீட்டை பெறும் முயற்சியில் இருவரும் இணைந்துள்ளனர்.
இதற்காக அஜித்துக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கவும் தயாராக இருக்கிறாராம் நயன்.
ஆனால் அஜித் மௌனம் கலைத்தால்தான் இந்த தகவல்களுக்கு நம்பகத்தன்மை கிடைக்கும் என்பதே உண்மை.