தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்குக்கு வயது 86.
அவரது மறைவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், விஜயகாந்த், தனுஷ் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
தனது இளம் வயதில் அதாவது 6 வயதிலேயே தனது இசைப்பயணத்தை துவங்கியவர் பாலமுரளி கிருஷ்ணா.
அவரைப்பற்றி சில தகவல்கள் இதோ…
திருவிளையாடல் படத்தில் வரும் ‘ஒரு நாள் போதுமா’ என்ற பாடல் இவரை பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்தது.
சங்கீத கலாநிதி உட்பட பல விருதுகளை வென்றவர் இவர்.
25,000க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியவர்.
சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக இரு முறை தேசிய விருது பெற்றவர்
சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, செவாலியே உள்ளிட்ட பட்டங்களை பெற்றவர்.
400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் . 1967ல் பக்த பிரகலாதா படத்தில் நாரதராக நடித்திருந்தார்.
இசைத் துறையில் இவர் ஆற்றிய பெரும் பணிகளுக்காக மத்திய அரசு பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ வழங்கி கௌரவித்துள்ளது.
எட்டு வயதில் இவர் விஜயவாடாவில் நடந்த தியாகராஜ ஆராதனையில் பாடிய விதத்தை கண்டு ‘பால’ என்ற அடைமொழி இவருக்கு வழங்கப்பட்டது.