JUST IN பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்.; வாழ்க்கை குறிப்பு இதோ..

JUST IN பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்.; வாழ்க்கை குறிப்பு இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரத்பாபு.

இவர் 1980களில் ரஜினி மற்றும் கமல் ஆகிய முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார்.

ரஜினியுடன் முள்ளும்மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பார்.

இவர் கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்தார். எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த செய்திகளை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

சரத்பாபு இறந்துவிட்டதாக இன்று மே 3ம் தேதி இரவு 9 மணியளவில் தகவல் பரவியது.

இதனையடுத்து கமல், குஷ்பூ உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இந்த செய்தியை உண்மை என நம்பி அவர்களும் தங்களுடைய டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்தனர்.

ஆனால் அது வதந்தி என உறவினர்கள் சொன்னபிறகே பொய் ஊடகங்கள் அமைதி காத்தன.

இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடிகர் சரத்பாபு இன்று மே 22ம் தேதி காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வாழ்க்கை குறிப்பு…

1973-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ராம ராஜ்ஜியம்’ படம் மூலமாக அறிமுகமானார்.

பிறகு ‘பட்டினப்பிரவேசம்’ படம் மூலமாக தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.

‘சரபஞ்சரம்’, ‘தன்யா’ உள்ளிட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

1979-ல் மகேந்திரன் இயக்கிய ‘உதிரிப்பூக்கள்’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.

இறுதியாக அண்மையில் வெளியான பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ படத்தில் சரத்பாபு நடித்திருந்தார்.

தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார் சரத்பாபு.

முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற செந்தாழம் பூவே என்ற பாடல் இன்றுவரை சரத்பாபு ரசிகர்களின் பேவரைட் பாடலாக கருதப்படுகிறது.

சரத்பாபு இல்லம் சென்னை தி நகரில் பிஜேபி அலுவலகம் அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

veteran actor sarath babu passes away in hyderabad

விஜய்க்கு கட்டுப்பட்டு காத்திருந்து சத்தியத்தை காப்பாற்றிய வெங்கட் பிரபு

விஜய்க்கு கட்டுப்பட்டு காத்திருந்து சத்தியத்தை காப்பாற்றிய வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஞாயிற்றுக்கிழமை மே 21ஆம் தேதி விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தை ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்த படம் ஏ ஜி எஸ் நிறுவனத்திற்கு 25வது படமாகும். மேலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் -யுவன் கூட்டணி இணைகிறது.

இதற்கு முன்பு ‘புதிய கீதை’ என்ற படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி இருந்தனர்.

தற்போது முதன்முறையாக விஜய் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது

அந்தப் பதிவில், “என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி விஜய் அண்ணா. உங்களிடம் சத்தியம் செய்து கொடுத்தது போலவே இந்த புகைப்படத்தை பட அறிவிப்புக்குப் பிறகு தான் வெளியிடுகிறேன். (இந்த போட்டோ 10 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது) ஆம். கனவுகள் நனவாகியுள்ளன” என பதிவிட்டுள்ளார்.

venkat prabhu released a selfie photo with vijay after ten months

‘பிச்சைக்காரன் 3’ எப்போது? விஜய் ஆண்டனி ஓபன் டாக்

‘பிச்சைக்காரன் 3’ எப்போது? விஜய் ஆண்டனி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி இயக்குநராக அறிமுகமான ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை கடந்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது . நாயகனின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங் முதல் நாள் வசூல் 3.5 கோடி. தெலுங்குப் பதிப்பான ‘பிச்சகடு 2’ ரூ. 4.5 கோடி ஆந்திர மற்றும் தெலுங்கானா பகுதியில் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, ‘பிச்சைக்காரன் 3’ நிச்சயமாக 2025-ல் உருவாகும் என்றும், அதை அவரே இயக்கலாம் என்றும் கூறியுள்ளார். ‘பிச்சைக்காரன்’ மற்றும் ‘பிச்சைக்காரன் 2’ பார்வையாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

Vijay Antony opens up about when ‘Pichaikkaran 3’ will commence

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் ‘கொட்டுக்காளி’ பட அப்டேட்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் ‘கொட்டுக்காளி’ பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இருக்கும் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கதையின் நாயகனான சூரி மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட மலையாள நடிகை அன்னா பென் ஆகியோரும் இந்தப் படத்தில் உள்ளனர்.

மேலும், சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ‘கூழாங்கல்’ புகழ் இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்குவதும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

‘கொட்டுக்காளி’ படத்தை எழுதி இயக்கியவர் பி.எஸ். வினோத்ராஜ் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளது.

சக்தி ஒளிப்பதிவு செய்திருக்க, கணேஷ் சிவா படத்தொகுப்பைக் கவனிக்கிறார். சுரேன் ஜி, எஸ். அழகிய கூத்தன் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றுகின்றனர்.

மேலும், கபிலன் (பப்ளிசிட்டி டிசைனர்), ராகுல் பரசுராம் (மார்க்கெட்டிங் & புரமோஷன்ஸ்) மற்றும் பானு பிரியா (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்பக்குழுவில் உள்ளனர். இப்படத்தை கலை அரசு இணைந்து தயாரித்துள்ளார்.

Sivakarthikeyans Kottukkaali team wrapped up the shoot

தளபதி 68 படத்தில் வில்லன் இவரா? வெங்கட் பிரபு வைத்த ட்விஸ்ட்

தளபதி 68 படத்தில் வில்லன் இவரா? வெங்கட் பிரபு வைத்த ட்விஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 68’ பற்றி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கும் இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரைக்கு வந்து 2024 ஆம் ஆண்டு பண்டிகை தினத்தில் வெளியாகும்.

இதற்கிடையில் ‘தளபதி 68’ படத்தின் வில்லன்களில் ஒருவராக எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும், அதற்கான தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எஸ்.ஜே. சூர்யா இதற்கு முன் விஜய்யுடன் ‘குஷி’ படத்தில் இயக்குனராகவும், ‘நண்பன்’, ‘மெர்சல்’, ‘வாரிசு’ ஆகிய படங்களில் நடிகராகவும் இணைந்து நடித்துள்ளார்.

Vijay to face this sensational villain again in ‘Thalapathy 68’?

20 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டதை பாட்டியிடம் சொல்லாத அதா ஷர்மா அதிர்ச்சி பேட்டி

20 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டதை பாட்டியிடம் சொல்லாத அதா ஷர்மா அதிர்ச்சி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

கேரளாவிலேயே பல திரையரங்குகள் பட வெளியீட்டுக்கு முன்வரவில்லை.

தமிழகத்திலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இதன் ஒரு பகுதியாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ள அதா சர்மா சமீபத்தில் ஒரு பேட்டியில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் தனது பாட்டிக்கு காட்ட பதட்டமாக இருந்தது. அதனைப் பார்த்து அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வரார்கள் என பயந்தேன்.

ஆனால், படம் பார்த்த என் பாட்டி இந்தப் படம் நிறைய நல்ல கற்பிக்கக் கூடிய தகவல் இருக்கிறது.

இந்தப் படத்த என் மாணவர்கள் பார்க்க வேண்டும் என்றார். அதற்கு நான் இது வயதுவந்தோருக்கான படம் என விளக்கமளித்தேன்.

இதனையடுத்து பதிலளித்த எனது பாட்டி, இந்தப் படம் U/A சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் இளம் பெண்கள் இந்தப் படத்தைப் பார்த்து விழிப்புடன் இருக்க உதவும் என்றார்.

Adha Sharma, who was afraid to tell her grandmother about the sexual assault

More Articles
Follows