தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய திரையுலகின் மூத்த நடிகர்களுள் ஒருவரான சரத்பாபு.
நடிகர் சரத்பாபு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் ஆமுதாலவலசா எனும் ஊரில் கடந்த 1951-ம் ஆண்டு, ஜூலை 31-ம் தேதி பிறந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சையில் அவரது உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்ததை தொடர்ந்து நேற்று மதியம் 1.32 மணிக்கு சரத்பாபு காலமானார்.
பின்னர், சரத்பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னையில் உள்ள அவரது வீட்டில் தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.
அவரது உடல் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதிச் சடங்குகளுக்குப் பின் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
நடிகர் சரத்பாபு பிறந்ததும் ஆந்திர மாநிலத்தில், அவர் இறந்ததும் ஹைதராபாத் தற்போது தெலுங்கானா மாநிலம் ஆனால் ஆரம்ப காலத்தில் அது ஆந்திர மாநிலம் தான்.
நடிகர் சரத்பாபு பிறந்ததும், இறந்ததும் ஆந்திர மாநிலமாக இருந்தாலும், அவரது இறுதி சடங்குகள் உடல் தகனம் சென்னையில் தான் செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சரத்பாபு இறப்பதற்கு முன்பாக தன்னை சென்னையில் தான் உடல் தகனம் செய்ய வேண்டும் என கூறினாராம்.
இதன் மூலம், நடிகர் சரத்பாபுவின் கடைசி ஆசை நிறைவேறிய உள்ளது. இது சென்னைக்கு கிடைத்த பெருமை என தமிழக மக்கள் கூறி வருகின்றனர்.
actor sarath babu’s last wish comes true






