தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பழம்பெரும் தென்னிந்திய திரைப்பட நடிகர்களில் ஒருவர் சரத் பாபு.
71-வயதான சரத்பாபு உடல்நலக் குறைவு காரணமாக மார்ச் மாதம் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அவரை ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
நடிகர் சரத்பாபு கடந்த மாதம் 20-ஆம் தேதி ஐதராபாத்தில் கச்சிபௌலி எனும் இடத்தில் உள்ள தனியார் அனுமதியில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
சரத்பாபுவின் சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இப்படியொரு சூழலில் நேற்று அவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
கமல், குஷ்பு உள்பட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சரத்பாபுவின் சகோதரர் மகன் ஆயுஷ் தேஜாஸ், உண்மை நிலையை விளக்கியுள்ளார்.
”அவர் முழுமையாக குணமடைந்து வருகிறார். அவரைப் பற்றி வெளியான தகவல்கள் பொய்யானவை. சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் எதையும் நம்பவேண்டாம். ஐசியு பிரிவில் இருந்து அவரை வேறு அறைக்கு மாற்றியுள்ளனர். விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசுவார் என நம்புகிறேன்.” என்று தெரிவித்து இருக்கிறார்.
How is actor Sarathbabu? A relative who tells the truth