தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர் சரத்பாபு.
நடிகர் சரத்பாபு ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் ஆமுதாலவலசா எனும் ஊரில் கடந்த 1951-ம் ஆண்டு, ஜூலை 31-ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யம்பாபு தீக் ஷித்.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சையில் அவரது உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்ததை தொடர்ந்து கடந்த மே 5 ஆம் தேதி மதியம் 1.32 மணிக்கு சரத்பாபு காலமானார்.
சரத்பாபுவின் உடல் மே 6 ஆம் தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டது, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்துக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகளுக்குப் பின் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
சரத்பாபுவின் தந்தை சரத்பாபுவை தனது ஹோட்டல் தொழிலைத் தொழிலை தொடர வேண்டும் விரும்பினார்.
ஆனால், சரத்பாபு தந்தையின் ஹோட்டல் தொழிலைத் தொடர விரும்பாத, கல்லூரி காலத்தில் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், சரத்பாபுக்கு கிட்டப்பார்வை பிரச்னையால் அவரது போலீஸ் அதிகாரி ஆசை நிறைவேறாமல் போனது.
இதனால் தான் சரத்பாபு திரையுலகில் நுழைந்தார்.
sarath babu wanted to became a police officer