தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தன் பெயரை குறிப்பிட்டு பேசவில்லை என்பதால் விழித்திரு’ பத்திரிகையாளர் சந்திப்பில் தன்ஷிகாவை தன் வார்த்தைகளால் கடுமையாக தாக்கினார் டி.ராஜேந்தர்.
அப்போது டிஆர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் அவரை அசிங்கப்படுத்தியதால் தன்ஷிகா அழத் தொடங்கினார் என்பதை பார்த்தோம்.
இந்த விவகாரம் திரையுலகில் பெரும் சர்ச்சையாக உருவாக்கியுள்ளது.
இதனால் சீனியர் நடிகரான டிஆருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அந்த சந்திப்பில் கலந்துக் கொண்ட வெங்கட்பிரபு, கிருஷ்ணா ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
இதுகுறித்து வெங்கட்பிரபு தெரிவித்திருப்பதாவது…
வயதில் பெரியவர்களுக்கு எப்போதும் மரியாதை தர வேண்டும் என்று தான் என்னை வளர்த்திருக்கிறார்கள். டி.ஆர் அவரது எண்ணங்களை ‘விழித்திரு’ விழாவில் பேசியிருந்தார்.
முதலில் நாங்கள் கிண்டல் என நினைத்த ஒன்று போகப் போக தீவிரமடைந்தது. எனக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.
தன்ஷிகா துறைக்குப் புதியவர். பொது மேடையில் எப்படி பேச வேண்டும் என்ற அனுபவமற்றவர். ஒழுங்காக வழிநடத்துவது எங்களைப் போன்ற துறையில் மூத்தவர்களின் பொறுப்பு என நினைக்கிறேன்.
வழிகாட்டுதலே கடவுளின் செயலும். யாரும் அவசரப்பட்டு உணர்ச்சிகளைக் கொட்டிவிட வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். காயப்படுத்துவதால் நமக்கு எதுவும் லாபமில்லை. இந்தக் கருத்தை நான் எப்போதும் போல மரியாதையுடன் வெளிப்படுத்துகிறேன்.
இவ்வாறு வெங்கட்பிரபு தெரிவித்திருக்கிறார்.
மேலும் கிருஷ்ணாவும் தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது…
சுயமரியாதை இருப்பவனாக, ஒழுக்கமாக நடப்பவனாக, கடந்த சில வருடங்களாக ஒரு பெண் குழந்தையின் கல்விக்கு உதவுபவனாக நான் இருந்து வருகிறேன். மேடையில் எனது அமைதியை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
அனைவரும் சமம் என்பதை மதிப்பவன் நான். முதலில் ஒரு நகைச்சுவையாக ஆரம்பித்தது சட்டென தீவிர வசையாக மாறி அவமதிப்பாகிவிட்டது. எதிர்பாராமல் நடந்த ஒரு விஷயம் குறித்து நாங்கள் யாரும் எதுவும் செய்திருக்க முடியாது.
என்னைப் பொறுத்தவரையில் டி.ஆர் போல ஒரு மூத்த நடிகர் பேசுவதை மறிப்பது சரியான மேடை நாகரீகம் ஆகாது. அந்த மேடையில் இருந்தவர்கள் அனைவரும் இதை ஒப்புக்கொள்வார்கள்.
ஆனால் அவர் மீண்டும் மீண்டும் தன்ஷிகாவை பற்றி சொன்ன அவமரியாதையான வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளவோ, நியாயப்படுத்தவோ முடியாது. ஆண், பெண் என யாருக்கு நேர்ந்திருந்தாலும் அது அவமரியாதையே.
அந்த நேரத்தில் யாராவது அவருக்கு ஆட்சேபணை தெரிவித்திருந்தால், ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தேவையில்லாத குழப்பமான சூழலும், விவாதமும் வந்திருக்கும்.
துறையில் மூத்தவர்கள் இளையவர்களை மன்னித்து அவர்களுக்கு உதவ முன்வருவார்கள் என நம்புகிறேன். நாம்தான் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள முடியும்.
இவ்வாறு கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்
Venkat Prabhu and Krishna clarifies TR and Dhanshika issue at Vizhithiru Press Meet