தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மீரா கதிரவன் இயக்கத்தில் கிருஷ்ணா – வித்தார்த் – வெங்கட் பிரபு, தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘விழித்திரு’.
ஓர் இரவு.. நான்கு கதைகள்.. ஒரே இலக்கு.. இதைதான் இப்படத்தின் கதைக்களம் என மீரா கதிரவன் தெரிவித்திருந்தார்.
இப்படத்தின் விநியோக உரிமையை ‘சவுந்தர்யன் பிச்சர்ஸ்’ சார்பாக விடியல் ராஜு பெற்று இருக்கிறார்.
இப்பட பாடல்களை அறிமுக இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கமும், பிண்ணனி இசையை இசையமைப்பாளர் அச்சுவும் உருவாக்கியுள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் குறித்து சத்யன் மகாலிங்கம் கூறியதாவது…
“இங்கிலிஷ் ஹார்ன் எனப்படும் அரிய வகை இசைக்கருவியை நாங்கள் ‘விழித்திரு’ படத்தில் பயன்படுத்தி இருக்கின்றோம்.
தமிழ் சினிமாவில் முதல் முறையாக, டி ராஜேந்தர், விஜய் ஆண்டனி, ஜி வி பிரகாஷ் குமார், சந்தோஷ் நாரயணன், எஸ் எஸ் தமன், சி சத்யா மற்றும் அல்போன்ஸ் என மொத்தம் ஏழு இசையமைப்பாளர்கள் எங்கள் விழித்திரு படத்தில் இருக்கும் ஆறு பாடல்களை பாடியுள்ளனர்.
ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இதை விட பெருமை என்ன இருக்கின்றது. மேலும் எந்தவித இசை கருவியையும் பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க மனித குரலை மட்டும் கொண்டு நாங்கள் ஒரு பாடலை உருவாக்கி இருக்கின்றோம்.
அது தான் சந்தோஷ் நாராயணன் பாடி இருக்கும் ‘பொன் விதி’ பாடல்” என்றார் சத்யன் மகாலிங்கம்.
7 music composers sung 6 songs in Vizhithiru movie